என் மலர்
நீங்கள் தேடியது "Manholes"
- நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
- டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுள்ளிப்பாளையம் பகுதியில் தனியார் பால் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்தி பாக்கெ ட்டுகளில் அடைத்தும், ஐஸ்கிரீம், பன்னீர், வெண்ணை, நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில் தொழிற்சாலையின் கழிவுநீரை ஏற்றி சுள்ளி பாளையம், மெஜஸ்டிக் நகர் பகுதியில் சாலை யோரத்திலும் விவசாய நிலத்திலும் திறந்து விட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை சிறை பிடித்ததுடன் அவர்களை விசாரித்தனர்.
அந்த டேங்கர் லாரி டிரைவர், தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பாத அப்பகுதி மக்கள் பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து பார்த்தபோது அது மஞ்சள் கலந்த நிறத்தில் இருந்ததுடன், ரசாயன வாடையும் அடித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த நீரில் உள்ள உப்புத்தன்மையை பரிசோதிக்கும் டி.டி.எஸ். கருவியை கொண்டு வந்து நீரில் உள்ள உப்பின் அளவை பரிசோதித்தனர். அந்த நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சுள்ளிபாளையம் மற்றும் மெஜஸ்டிக் நகர் பகுதி மக்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது:-
அண்மைக்காலமாக இந்த பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த ஆலையின் கழிவு நீராலும் லாரியில் கொண்டு வந்து கொட்டும் கழிவு நீராலும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியை ஓட்டி வந்தவர்களிடமும், அந்த நிறுவனத்தின் அதிகாரி யையும் போலீசார் விசாரித்த போது, தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்று வதற்காகவே டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்திய தாகவும், இனிமேல் அப்பகுதியில் தண்ணீரை விடுவதில்லை என எழுதிக் கொடுத்ததன் பேரில் அவர்களை எச்சரித்த போலீசார் டேங்கர் லாரியை விடுவித்தனர்.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள பெருந்துறையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. நேரில் சென்ற போதிலும் அவரை பார்க்க முடியவில்லை.
தனியார் பால் உற்பத்தி நிறுவனம் மீது தொடர்ந்து வரும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- அடுத்தடுத்து உள்ள சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர்.
- மேன்ஹோலில் உருவான விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரில் வீட்டு கழிவறையில் வெளியேறிய விஷ வாயுவால் தாய், மகள், சிறுமி என 3 பேர் இறந்தனர்.
வீட்டு கழிவறையில் விஷ வாயு பரவியது எப்படி? என பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுவை நகர் மற்றும் நகரை அடுத்துள்ள புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதாள சாக்கடையில் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர், குழாய்கள் வழியாக பாதாள சாக்கடையின் மேன்ஹோலுக்கு செல்கிறது. அங்கிருந்து கழிவுநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்கிறது.
அங்கு திட கழிவுகளை தனியாக பிரித்து கழிவுநீரை சுத்திகரித்து வாய்க் காலில் விடுகின் றனர். சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை உறிஞ்சி எடுக்கும் போது, குழாயில் சில இடங்களில் காற்று வெற்றிடம் உருவாகும்.
அங்கு விஷ வாயு உருவாகி வெற்றிடத்தை நிரப்பும். சில நேரம் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது மேன்ஹோலில் தேங்கி நிற்கும் கழிவுகளால் மீத்தேன், நைட்ரஜன் சல்பைடு, அமோனியா போன்ற வாயுக்கள் உருவாகும்.
ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அடுத்தடுத்து உள்ள சிறிய வீடுகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு கழிப்பறை கட்டவே இடம் போதாத நிலை உள்ளது. அதோடு பலர் கழிவறையில் இருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் குழாயில் வாயு வெளியே வராதபடி எஸ் அல்லது பி பென்ட் வடிவ அமைப்பை ஏற்படுத்த வில்லை.
இதனால் மேன்ஹோலில் உருவான விஷ வாயு கழிவறை வழியாக வெளியேறி உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு வீட்டிலும் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பொதுப்பணித்துறையிடம் தகவல் தெரிவித்து, அங்கீகரிக்கப்பட்ட பிளம்பர் மூலம் பணிகளை செய்ய வேண்டும். இணைப்புகள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா? துர்நாற்றம், விஷவாயு வெளியேறாமல் இருக்க எஸ் அல்லது பி பென்ட் அமைக்கப் பட்டுள்ளதா? என சரி பார்க்க வேண்டும்.
கழிப்பறையில் இருந்து செல்லும் குழாய்க்கும், பாதாள சாக்கடையில் இணைக்கும் குழாய்க்கும் உள்ள இடைவெளியில் சிறிய சதுர தொட்டி கட்டி காற்று வெளியேற வென்ட் அமைத்தால் இதுபோன்ற விஷ வாயு தாக்கத்தை தவிர்க்கலாம்.
பாதாள சாக்கடை மென்ஹோலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கழிவுநீர் குழாய்களில் நாப்கின், துணி, பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட மக்காத குப்பைகளை போடக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹைட்ரஜன் சல்பைடு வாயு
விஷ வாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட புதுநகர் பகுதியில் புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையிலான நிபுணர்கள், பாதாள சாக்கடை மேன்ஹோல், உயிரிழப்பு ஏற்பட்ட வீட்டின் கழிவறையில் விஷ வாயு தாக்கம் எவ்வளவு உள்ளது என நவீன எந்திரங்கள் மூலம் அளவீடு செய்தனர்.
வீட்டின் கழிவறைகளில் விஷ வாயு ஏதும் இல்லை. மேன்ஹோலில் வழக்கமான அளவை விட ஹைட்ரஜன் சல்பைடு வாயு அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழப்பு ஹைட்ரஜன் சல்பைடு வாயு மூலம் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த வாயு வெளியேற மேன்ஹோல்கள் உடனடியாக திறந்து வைக்கப்பட்டது.
- பாதாள சாக்கடையில் 2 வயது ஆண் குழந்தை விழுந்தது.
- 24 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் வைரவ் கிராமத்தில் உள்ள ஒரு பாதாள சாக்கடையில் 2 வயது ஆண் குழந்தை விழுந்ததாக போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புக் குழுவினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் சுமார் 60 முதல் 70 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கனரக வாகனம் ஒன்று ஏறி இறங்கியதால் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்தது. இதனால் இந்த சம்பவம் நிகழ்ந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 150 மீட்டர் வரை தேடிப்பார்த்தும் குழந்தை இருக்கும் இடம் தெரியவில்லை. தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், பாதாள சாக்கடைக்குள் விழுந்த குழந்தை சுமார் 24 மணி நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.
பாதாள சாக்கடையில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.