என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manjolai Issue"

    • ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.
    • தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாஞ்சோலையில் 16 மணி நேர வேலை, குடியிருப்புகளை பழுது பார்க்காதது உள்ளிட்ட 20 பிரச்சனைகளை முன்நிறுத்தி கடந்த 1997-ம் ஆண்டு புதிய தமிழகம் போராட்டம் நடத்தியது.

    மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 6 தலைமுறையாக 1929-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கடந்த 15-ந்தேதி முதல் பணிநிறைவு பெற்று விட்டதாகவும், அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் வீடுகளை காலி செய்யவும் அந்த தனியார் நிறுவனம் தவறான செயலை செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    மாஞ்சோலையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 45 நாட்களில் வெளியேற வேண்டும் என தனியார் நிறுவனம் நிர்பந்தப்படுத்தி உள்ளது. தொழிலாளர்கள் தங்களை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறி இதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட கலெக்டரிடம் சென்றனர். ஆனால் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி உள்ளார்.

    முதலமைச்சர் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் நேரடியாக பார்க்க முடியாது. முதலமைச்சருக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பாக இருக்க கூடியவர் கலெக்டர்தான். ஆனால் அவரே தொழிலாளர்களை உதாசீனப்படுத்தியது தவறு.

    ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். பேசி முடிக்க வேண்டிய செயலை பிரச்சனையாக்கி உள்ளார். எனவே மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் தொழிலார்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்காத போது அவர்களிடம் தனித்தனியாக பேசி கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தனியார் நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.

    நெல்லை:

    மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக விசாரித்த ஐகோர்ட்டு, தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை அவர்களை மாஞ்சோலையில் இருந்து கீழே இறக்க கூடாது என்று உத்தரவிட்டது.

    இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் 20-ந்தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி விஜய பாரதி சயானிடம் புகார் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம் உடனடியாக தலைமை விசாரணை இயக்குனர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இந்த குழு மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு அதிகாரிகளான ரவி சிங், யோகேந்திர குமார் திரிபாதி ஆகியோர் அடங்கிய குழு இன்று நெல்லை வந்துள்ளது. மொத்தம் 4 நாட்கள் நெல்லையில் முகாமிட்டு இந்த குழு விசாரிக்க உள்ளது. தொடக்க நாளான இன்று இந்த குழுவானது மாஞ்சோலைக்கு நேரில் சென்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து நாளையும் அந்த குழு மாஞ்சோலையில் விசாரணை நடத்துகிறது.

    அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். பின்னர் பர்மா தேயிலை நிர்வாகத்திடம் ஆய்வுகளை மேற்கொண்டு, மாஞ்சோலையில் அமைந்துள்ள தொழிற்சாலை, தேயிலை தோட்டம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்கிறார்கள்.

    முன்னதாக இன்று காலை தொழிலாளர் துறையின் தோட்டங்கள் பிரிவின் உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோருடனும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து மாஞ்சோலை தொடர்பான முழு விவரங்கள், அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள், அரசு எடுத்துள்ள மறுவாழ்வு நடவடிக்கைகள், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் விரிவாக கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலய துணை இயக்குனர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் சுமார் 1½ மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அவர்களிடம் மாஞ்சோலை தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 1,125 பக்க அறிக்கையை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

    • மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும்,.
    • உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.

    மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை கடந்தாண்டு டிசம்பர் 3 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய அனைத்து வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தக் கோரிய கிருஷ்ணசாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    ×