என் மலர்
நீங்கள் தேடியது "Maoist search"
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் உள்ளனரா? என போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவுப்படி நக்சல் பிரிவு போலீசார், சிறப்பு அதிரடி படை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மற்றும் ஆதி வாசிகளை குறி வைத்து அவர்களை மூளை சலவை செய்து தங்கள் வசப்படுத்த மாவோயிஸ்டுகள் திட்ட மிட்டு செயல்படுவதாக தகவல் வந்தது.
இதன் அடிப்படையிலேயே சத்தியமங்கலம், கடம்பூர், தாளவாடி மற்றும் கேரளா எல்லை பகுதிகளில் தீவிர ரோந்து பணியை தமிழக போலீசார் முடக்கி விட் டுள்ளனர்.
கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மல்லியம்மன் துர்கம் வன கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நக்சல் மற்றும் அதிரடிப்படை போலீசார் 25-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற் கொண்டனர்.
புதிய நபர்கள் யாராவது வருகிறார்களா? பண உதவி செய்கிறோம் என கூறி ரேசன் கார்டு, ஆதார் கார்டுகள் கேட்கிறார்களா? என கேட்டறிந்தனர்.
அப்படி யாராவது வந்தால் உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பழங்குடி மக்களை கேட்டு கொண்டனர்.
கடம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார வன கிராமங்கள் மற்றும் வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. #Maoist
கவுண்டம்பாளையம்:
கேரள காடுகளில் பதுங்கி இருக்கும் சுந்தரி என்ற பெண் மாவோயிஸ்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வர இருப்பதாக உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தமிழக- கேரள எல்லையில் உள்ள மாங்கரை, ஆனைகட்டி பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை தொடர்ந்து 5-வது நாளாக இன்று நடந்து வருகிறது. போலீசார் இருசக்கர வாகனம், கார் மற்றும் பஸ்களை நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.
கேரள பகுதிகளில் இருந்து வரும் மற்றும் செல்லும் பஸ்களில் உள்ளே ஏறி சென்று போலீசார் ஒவ்வொருவரையும் பார்த்தும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களையும் சோதனை செய்தனர். மேலும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஒவ்வொரு வாகனமும் கண்காணிக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் வேட்டைதடுப்பு காவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
இதற்கு பெரியநாயக்கன் பாளையம் (பொறுப்பு) ரேஞ்சர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் கோவை வனமண்டல உதவி வனபாதுகாவலர் ராஜேஷ் கலந்து கொண்டு வேட்டைதடுப்பு காவலர்களிடம் பேசும்போது:-
பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு கேரளா அருகிலுள்ள ஆனைக்கட்டி, மாங்கரை, பாலமலை மற்றும் தோலம்பாளையம் மலைப் பகுதிகளில் புதியதாக ஆட்கள் தென்படுகின்றனர்களா? என்றும், மலைக் கிராமங்களில் உள்ள ஆதிவாசி மக்களுடன் புதியவர் யாராவது பழகி வருகின்றனர்களா? என்றும் தெரிந்து உடனடியாக நக்சல் பிரிவுக்கும், வனத்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் யாரும் தனியாக மலைப்பகுதிக்கு செல்லாமல் மூன்று, நான்கு பேர் கூட்டாக செல்ல வேண்டும். அதேபோல வேட்டைதடுப்பு காவலர்களுக்கு உள்ள குறைகளை ரேஞ்சர் மூலம் மண்டல வனப்பாதுகாவலருக்கு கொண்டு சென்று அதற்கு தீர்வு காணப்படும் என்று கூறினார். #Maoist