என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Marina Beach"
- 2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்க திட்டம்.
- தமிழக வீரர்கள் 4 பேர் டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி.
சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி ரூ. 7 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பித்தது.
2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கீழ் தளத்தில் பயிற்சி அறை, வீடியோ நூலக அறை, வரவேற்பு அறை, பயிற்சியாளர்கள் அறை, அலுவலக அறை, படகு நிறுத்தும் இடம், திறந்தவெளி இடம் மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது.
இதேபோல், முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, ஜிம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை வரவேற்பு அறை அமைக்கப்படுகிறது,.
இந்தத் திட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
கடந்த அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே, தமிழக வீரர்கள் 4 பேர் டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், பாய்மர படகு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.
- 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஆகியோரும் இணைந்து கேப்டன் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் 2 கேப்டன்களும் கோப்பையுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கிறார்கள்.
அங்குள்ள சிறிய வகை ராட்டினங்களில் சிறுமி- சிறுவர்கள் ஏறி விளையாடி மகிழ்வார்கள்.
இந்த நிலையில் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நொச்சி குப்பத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் மெரினா கடற்கரையில் சுண்டல் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பிரனவ் (7).
நேற்று மாலை சிறுவன் பிரனவ் தந்தை-தாயுடன் மெரீனா கடற்கரைக்கு சென்றான். அப்போது அங்கு ராட்டினத்தில் சிறுவர்கள் அமர்ந்து சுற்றுவதை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தான். அவன் ராட்டினத்தின் மிக அருகில் நிற்பதை பார்த்த தாய் சற்று விலகி நிற்குமாறு கூறினார்.
இதை கவனித்த ராட்டினத்தின் உரிமையாளர் பிரகாஷ் என்பவர் சிறுவன் பிரனவ்வை அழைத்து சென்று ராட்டினத்தின் நடு பகுதியில் நிற்க வைத்தார். பின்னர் ராட்டினத்தை சுற்றினார்.
அப்போது எதிர்பாராத விதமாக பிரனவ் சட்டை ராட்டினத்தின் கம்பியில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி தவறி விழுந்த பிரனவ் தலையில் கம்பி பலமாக மோதியது.
பலத்த காயம் அடைந்த அவனை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராட்டினத்தை இயக்கிய பிரகாசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுவர்கள் விளையாடி மகிழும் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மெரீனா கடற்கரையில் ராட்டினங்கள் உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பற்ற முறையிலும் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 4-வது நாளாக தமிழகம் முழுவதும் நீடிக்கிறது.
போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதையும் மீறி போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
அதன்படி இன்று அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்தது. சென்னையில் எழிலகம் அருகில் ஆயிரத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, மாயவன், வெங்கடேசன், தியாகராஜன், தாஸ் ஆகியோர் தலைமையில் திரண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். எந்த நிலையிலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அறிவித்தனர்.
நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் பள்ளி மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளை திறந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவது வழக்கமாகும். இந்நாளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதும் உண்டு.
ஆனால் தமிழகத்தில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதியை சேர்ந்த பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எழிலகம் வளாகத்தில் அமர்ந்து சிறிதுநேரம் போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேசினார்கள். பின்னர் மறியல் செய்வதற்காக காமராஜர் சாலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை சாலை பகுதிக்கு விடாமல் போலீசார் தடுப்பு வேலி அமைத்தும், கயிறு கட்டியும் வைத்து இருந்தனர்.
ஆனால் அதையும் மீறி தடுப்பு வேலிமேல் குதித்து மெரினா சாலையில் உட்கார்ந்தனர். போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி அரசு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து அரசு ஊழியர்களை போலீசார் வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் சாலையில் அமர்ந்து மறியல் செய்த ஊழியர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். மற்றவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.
மதுரை ஐகோர்ட்டில் திங்கட்கிழமை அன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. பணிக்கு திரும்பவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
அதேநேரத்தில் அரசையும், அரசு ஊழியர் பிரச்சினையை முறையாக அணுக வேண்டும் என்று கூறியுள்ளது. கோர்ட்டின் உத்தரவை மீறவில்லை. எங்களது நியாயமான கோர்க்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என இப்போது போராடவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இந்த பிரச்சினையை தீர்க்காமல் காலம் கடத்தி வந்தது அரசின் தவறு. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் காரணம் அல்ல. அரசுதான் பொறுப்பு. மாணவர்கள் நலனில் எங்களுக்கு அக்கறை அதிகம் உள்ளது. எங்களைவிட அவர்கள் மீது அக்கறைப்பட யாராலும் முடியாது.
தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யவில்லை. கஜா புயல் பாதிப்பு என்று கூறி பிரச்சினையை தள்ளி வைத்துவிட்டது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி இந்த பாதிப்பை ஈடுசெய்ய எங்களால் முடியும். அரசின் தவறான முடிவால்தான் இந்த பிரச்சினை. எங்கள் போராட்டம் தொடரும். அரசு அழைத்து பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி(சனிக்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் குடியரசு தின விழா மெரினா கடற்கரை காமராஜர் சாலை காந்தி சிலை அருகே கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி இன்று (சனிக்கிழமை), 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), 24-ந்தேதி (வியாழக்கிழமை) ஆகிய 3 நாட்கள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே குடியரசு தினத்தன்றும், அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
பிராட்வே செல்லும் வழி
* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள் (மாநகர பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். பின்னர் லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை நீல்கிரீஸ் சந்திப்பு, மியுசிக் அகடமி சந்திப்பு, ராயப்பேட்டை மருத்துவமனை, மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் மாநகர பேருந்து தடம் எண், ‘27 டி’ ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடையலாம்.
அண்ணாசாலை வழி
* மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்து வழிதடம் எண், 21 ஜி ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு, மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
* மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் 45 பி மற்றும் 12 ஜி ஆகியவை நீல்கிரீஸ் சந்திப்பு, மியுசிக் அகடமி சந்திப்பு, ராயப்பேட்டை மருத்துவமனை, மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கம் சென்றடையலாம்.
ஐஸ் அவுஸ் நோக்கி...
* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
* டாக்டர் நடேசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ்அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.
* டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ்அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.
* பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.
* வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும், மாநகர பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்.
* அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும்.
அடையாறு சென்றடையலாம்
* பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, ஒயிட்ஸ் ரோடு, அண்ணா சாலை, அமெரிக்க தூதரகம் சர்வீஸ் ரோடு, கதீட்ரல் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன், காரணீஸ்வரர் பகோடா தெரு சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம்.
* வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் இன்று தமிழகம் முழுவதும் களை கட்டியது.
சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். காலையில் இருந்தே கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் கடற்கரையை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து மினி லாரிகளிலும் மக்கள் வந்திருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள்.
இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டனர்.
தங்களது வீடுகளில் இருந்து சமைத்து எடுத்து வந்திருந்த உணவுகளை கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து அனைவரும் சாப்பிட்டனர்.
சிறுவர்களும் பெரியவர்களும் பாரபட்சமின்றி கூடி விளையாடி மகிழ்ந்தனர். கடற்கரை மணலில் பலர் கபடி விளையாடினார்கள்
கண்ணாமூச்சி ஆட்டம் மற்றும் பந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். இதனால் மெரினா கடற்கரையில் உற்சாகம் கரைபுரண்டது.
காணும் பொங்கலையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள், கமிஷனர்கள் மகேஸ்குமார், தினகரன், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 140 நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
மணல் பரப்பில் 13 உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரத்திலும் 3 போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து பைனாகுலர் மூலம் கண்காணித்து வாக்கி-டாக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கட்டுப்பாட்டறைக்கு வாக்கிடாக்கி மூலமும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்கள் வழங்கினர். 3 பறக்கும் பொம்மை விமானத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் கண்காணித்தனர். ஆயுதப்படையின் குதிரைப் படையுடன் கூடுதலாக 16 குதிரைகள் மூலமும் கண்காணிக்கப்பட்டது.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டப்பட்டது.
இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. #KaanumPongal
தை முதல் நாளான நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் மாட்டுப் பொங்கலும், 17-ந் தேதி காணும் பொங்கலும் களை கட்டும். அன்றைய தினம் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி பொழுதை கழிப்பார்கள். அன்று காலையிலேயே இதுபோன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மக்கள் உணவு வகைகளை சமைத்து எடுத்துச்சென்று அங்கேயே சாப்பிடுவார்கள். மாலையில்தான் வீடு திரும்புவார்கள்.
மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்படும்.

கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு வசதியாக குழந்தைகளின் கைகளில் பெற்றோர் மற்றும் போலீஸ் அதிகாரியின் செல்போன் எண்கள் இடம்பெறும் வளையமும் கட்டப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முறை இந்த ஆண்டும் காணும் பொங்கல் தினத்தில் கடைபிடிக்கப்பட உள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாமல்லபுரத்திலும் பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் திரளுவார்கள் என்பதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Pongal2019 #MarinaBeach
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலையில் வாகனங்களில் அதிக வேகமாக செல்வதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.
சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மெரினா கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக் கான பொதுமக்கள் கூடுவார்கள்.
எனவே விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் இன்றி புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். அங்கு நள்ளிரவு 1 மணி வரையே புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாடுபவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும், அவர்களை வீட்டில் கொண்டுவிட ஓட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நீச்சல் குளத்தின் மேலே மேடை அமைத்தோ அல்லது நீச்சல் குளத்தின் அருகிலோ புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள். இரவு 9 மணிக்கே கூட்டம் கூடத் தொடங்கி விடும் என்பதால் 9 மணிக்கு மெரினா கடற்கரை சாலை மூடப்படும். அதன் பிறகு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
மெரினா கடற்கரையில் நள்ளிரவு 12 மணியளவில் பொதுமக்கள் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் கமிஷனர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நள்ளிரவு 12 மணிக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மெரினா கடற்கரையில் கேக் வெட்டுகிறார். பின்னர் அங்குள்ள மக்களுக்கு கேக் வழங்கப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்ட அனுமதி இல்லை. அதை மீறி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.
சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இரவு 8 மணி முதல் 12 மணிவரை ஒரு ஷிப்டாகவும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை மற்றொரு ஷிப்டாகவும் போலீசார் பணியாற்ற உள்ளனர். பைக் ரேசில் ஈடுபடுபவர்களை தடுக்க போலீசார் தனியாக குழு அமைத்து செயல்படுகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதை தடுக்க முக்கிய மேம்பாலங்கள் மூடப்படுகின்றன. முக்கிய சாலைகளில் கூடுதலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் வைத்துள்ளனர். #NewYear2019 #marinabeach

ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய பெஞ்ச் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உலக புகழ் பெற்ற மெரினா கடற்கரை குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது. இதை சுத்தமாக வைத்திருக்க மீனவர்களும் உதவி செய்யவேண்டும். அவர்களை மீனவர் அமைப்புகள் ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே சாலைகளை ஆக்கிரமித்து மீன் கடைகள் பலர் வைத்துள்ளதற்கு’ நீதிபதிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
மெரினா கடற்கரையை சுத்தம் செய்வதற்கு என்று ஒதுக்கப்படும் நிதியை கொண்டு மீனவர்களுக்கு மீன் சந்தை அமைத்துக் கொடுக்காதது ஏன்? மெரினா கடற்கரையில் மீன் கடை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? இதுவரை எத்தனை மீனவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது? என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர். இதற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
பின்னர், ‘மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் வருகிற 17-ந்தேதிக்குள் உருவாக்க வேண்டும். அந்த திட்டத்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம், மாநகராட்சி ஆணையர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #Marinabeach #ChennaiCorporation
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் பெருந்திரளான தமிழர்கள் நடத்திய போராட்டம் வெற்றியில் முடிந்தது.
இந்த போராட்டத்துக்கு பின்னர் மெரினாவில் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக அரசு தடை விதித்தது.

இதற்கு தனி நீதிபதி அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் தனி நீதிபதி அளித்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. மெரினா விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்த ஐகோர்ட், அய்யாகண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அய்யாக்கண்ணு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இதே கோரிக்கையுடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #SCrefuses #TNgovtban #protestsinMarina #Marinaprotests