என் மலர்
நீங்கள் தேடியது "Married bride"
- லோகநாதன், தமிழ்ச்செல்வி என்பவருக்கு கடந்த 27 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
- லோகநாதன் தனது மனைவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அடுத்த பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 30). இவருக்கும் தமிழ்ச்செல்வி (வயது 24) என்பவருக்கும் கடந்த 27 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புதிதாக திருமணமான லோகநாதன் தமிழ்ச்செல்வி கடலூர் அடுத்த பாலூர் பகுதியில் ஒன்றாக வசித்து வந்தனர். திருமணமான புதுப்பெண் தமிழ்ச்செல்வி வீட்டில் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த லோகநாதன் தனது மனைவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்ற னர். திருமணமாகி 27 நாளில் புதுப்பெண் திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.