என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "married women"

    • தமிழக அரசிடம் மத்திய அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது.
    • இதுபோன்ற பொய் குற்றச்சாட்டு நிறுவனத்தை பாதிக்கும்.

    தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில், உதிரி பாகங்களை கொண்டு ஐ-போன் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது.

    உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் இந்நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது.

    அப்போது திருமணம் ஆன இரண்டு பெண்கள் வேலை கேட்டு நேரில் சென்றுள்ளனர். கேட் அருகில் நின்ற அதிகாரிகள் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இங்கு உங்களுக்கு வேலை கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

    இது அந்த பெண்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பான செய்தி மெல்லமெல்ல பரவியது. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை மிகப்பெரிய அளவில் கட்டுரையாக எழுதி உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் திருமணம் செய்த பெண்களுக்கு வேலைகிடையாது என்ற பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக விமர்சித்திருந்தனர்.

    இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது.

    இது தொடர்பாக பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற நிபந்தனை எங்களின் கொள்கையே கிடையாது.

    வேலைக்கு தேர்வு ஆகாத சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டை கிளப்பி உள்ளனர். இதுபோன்ற பொய் குற்றச்சாட்டு நிறுவனத்தை பாதிக்கும்.

    பாதுகாப்பு கருதி பாலினம், மதம் பார்க்காமல் அனைத்து பணியாளர்களும் தங்கம் உள்ளிட்ட எந்த உலோக பொருட்களையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ற விதி மட்டுமே பின்பற்றப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

    • படிவத்துக்கு ஒப்புதல் அளித்த திட்டப் பயனாளிகள் சரிபார்ப்பு அதிகாரிகளும் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
    • சன்னி லியோனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருமணமான பெண்களுக்கான சத்தீஸ்கர் பாஜக அரசு மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன் பெயரில் ஒருவர் கணக்கு தொடங்கி அதில் இந்த திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 பெற்று வந்துள்ளார்.

    சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. வீரேந்திர ஜோஷி என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    இந்த மோசடி குறித்த செய்திகள் மூலமே அதிகாரிகள் கவனத்துக்கு இது வந்துள்ளது. வீரேந்திர ஜோஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது படிவத்துக்கு ஒப்புதல் அளித்த திட்டப் பயனாளிகள் சரிபார்ப்பு அதிகாரிகளும் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

     

     

    இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வங்கிக் கணக்கை முடக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த மோசடி குறித்து ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் சாடியுள்ளது. மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பணம் பெரும் 50 சதவீத பயனாளிகள் போலியானவர்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆனால் முந்தைய ஆட்சிக் காலத்தில் காங்கிரஸால் வழங்க முடியாத மாதாந்திர உதவிகளை இப்போது அம்மாநிலப் பெண்கள் பெறுவதால் காங்கிரஸ் வேதனையில் இருப்பதாக துணை முதல்வர் அருண் சாவோ தெரித்துள்ளார். சன்னி லியோனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    ×