என் மலர்
நீங்கள் தேடியது "Masjid"
- 1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது
- ஹைதராபாத் தொகுதியில், 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவைசி தோற்கடித்தார்
1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்பத்தின் கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.
நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாதவி லதா, தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர். கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர்
இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம் தேவை என்று இஸ்லாமியர்களை மத ரீதியாக தாக்கி பேசினார்.
இந்நிலையில், தெலங்கானாவில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியின்போது மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல் மாதவி லதா செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
- ஹைதராபாத் தொகுதியில், 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவைசி தோற்கடித்தார்
- இந்த முறை ஒவைசிக்கு போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்
1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்பத்தின் கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.
நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாதவி லதா, தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர். கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர்
இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம் தேவை என்று இஸ்லாமியர்களை மத ரீதியாக தாக்கி பேசினார்.
இந்நிலையில், தெலங்கானாவில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியின்போது மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல் மாதவி லதா செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா தனது செயலால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
- இந்த மசூதி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ளது.
- டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
ஒரு கும்பல் மசூதியை இடிக்க முயற்சிப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்த மசூதி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ளது. கஜாபூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மசூதி சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மசூதியை ஒரு கும்பல் இசைக்கும் அந்த வீடியோவை ஐதராபாத் எம்.பி ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மகாராஷ்டிரா மாநில அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் 6, 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஒவைசி பகிர்ந்த வீடியோவில், "மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு கும்பல் மசூதியின் மேல் ஏறி, காவிக்கொடியை நட்டு, மசூதியை இடிக்க முயன்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் நிபுணர்களுடன் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை:
சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் நடப்பது வழக்கம். ஆனால் இப்போது நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
சென்னையில் 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வெடிகுண்டு மோப்ப நாய் மற்றும் நிபுணர்களுடன் ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல் ஆயிரம் விளக்கில் உள்ள 'சியா' மசூதிக்கு இன்று 4-வது முறையாக மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து மசூதி நிர்வாகிகள் போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து அங்கு வெடிகுண்டு சோதனை நடந்தது. சோதனை முடிவில் அவை புரளி என தெரிய வந்தது. ஆனாலும் மின்னஞ்சல் வந்த முகவரியின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.
- இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான அநீதிகள் கண்டிக்கத்தக்கவை
- ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின் போதும் அவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் நாங்கள்தான்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு டெல்லியில் உள்ள பிரபல ஜும்மா மசூதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ் இந்த அநீதிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜும்மா மசூதியின் தலைமை ஷாஹி இமாம் சையது அகமது புகாரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வங்கதேசம் உருவாக்கப்பட்டதிலிருந்து, நமது தேசியத் தலைமையும் பொது சமூகமும் அந்நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்திருக்கிறது. இராஜங்கம், பிராந்திய விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள் மற்றும் முஸ்லீம் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் வங்கதேசம் எப்போதும் நெருங்கிய நட்பு நாடாக எங்களுடன் நிற்கிறது.
இந்த சூழல் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான அநீதிகள், தாக்குதல்கள் மற்றும் ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை, அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களுக்கு எந்த நியாயமும் இல்லை. வங்கதேசத்தின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டில் நாங்கள் ஆற்றிய பங்கையும் அவ்வரசாங்கம் எப்போதும் நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின் போதும் அவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் நாங்கள்தான்.

ஷாஹி இமாம் சையது அகமது புகாரி
நம்பகமான அண்டை நாடாக விளங்கும் வங்காள தேசத்தின் நெருங்கிய, வங்கதேசத்தின் தற்போதைய தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ், இந்து சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

அவரது சர்வதேச நற்பெயர் கறைபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாடாக, இஸ்லாமும் இஸ்லாமிய சட்டமும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவிதமான வெறுப்புக்கும் அல்லது அநீதிக்கும் இயல்பிலேயே இடமளிக்காது என்று தெரிவித்துள்ளார்.