என் மலர்
நீங்கள் தேடியது "Mayam is the"
- கடந்த 2-ந் தேதி கவி மலர் பியூட்டி பார்லருக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கவி மலர் கிடைக்கவில்லை.
ஈரோடு மாவட்டம்,
நம்பியூர் எலத்தூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் கேசவன்(37). இவரது மனைவி கவி மலர் (32). சத்தியமங்கலத்தில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 2-ந் தேதி கவி மலர் பியூட்டி பார்லருக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கவி மலர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கேசவன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கவி மலரை தேடி வருகின்றனா்.