என் மலர்
நீங்கள் தேடியது "meats"
- தேவகோட்டையில் நாட்கணக்கில் வைத்து விற்கப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆட்டுக்கறி சுகாதாரமற்ற முறையிலும், நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் உதவியாளர் மாணிக் கம் ஆகியோர் தலைமையில் தேவகோட்டை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.
அப்போது நகைக்கடை பஜாரில் இறைச்சி கடை நடத்தி வரும் ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமாக அண்ணாநகர், ஆறாவயல், வெள்ளையன் ஊரணி ஆகிய பகுதி களிலும் இறைச்சி கடை கள் உள்ளன. இங்கும் கெட்டுப்போன இறைச்சி விற்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்கண்ட 4 கடைகளில் இருந்தும் 1000 கிலோ ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டு சாகுல் அமீதுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தேவகோட்டையில் இறைச்சி களுக்காக ஆடுகள் அறுக்கும் போது பரிசோதனை செய்து ரசீது வழங்கி கடைகளுக்கு இறைச்சிகளில் சீல் வைத்து அனுப்பப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த நடைமுறை கடந்த சிலமாதங்களாக பின்பற்றப்படுவது இல்லை. இதனால் சுகாதாரமற்ற நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி உட்கொள்ளும் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே இனியாவது நகராட்சி நிர்வாகம் கடுமையாக கண்காணித்து ஆட்டு இறைச்சி விற்ப னைக்கு விதிகளை பின் பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- மீன் மற்றும் கோழி இறைச்சி புதியதாகவும், தரமாகவும் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் அரைக்கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ராஜன் மற்றும் அலுவலர்கள் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள மீன் மற்றும் கோழி இறைச்சி கடைகளுக்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மீன் மற்றும் கோழி இறைச்சி புதியதாகவும், தரமாகவும் உள்ளதா? பாதுகாப்பான முறையில் சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மார்க்கெட், பஸ்நிலையம், ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக்கடை மற்றும் பேக்கரிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிர்பானங்கள், குடிநீர் விற்பனை செய்யப்படுகிறதா, உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு உள்ளதா? உரிய தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் ஜலீல் என்பவரது பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் அரைக்கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வித்திதனர்.
அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடை உரிமையாளர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற வேண்டும்.
அவ்வாறு உரிமம் இல்லாமல் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.