என் மலர்
நீங்கள் தேடியது "Mehidy Hasan Miraz"
- நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் சேர்த்தது.
- மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களுடனும் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
மிர்புர்:
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வங்காளதேச அணி திரில் வெற்றியை பெற்றதுடன், தொடரையும் வசப்படுத்தியது. இதில் 6 விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்து தள்ளாடிய வங்காளதேச அணியை 7-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லாவும், மெஹிதி ஹசன் மிராசும் கைகோர்த்து காப்பாற்றினர்.
முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான மெஹிதி ஹசன் மிராஸ் இந்திய பந்து வீச்சை பின்னியெடுத்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். சதத்தை எட்ட கடைசி ஓவரில் அவருக்கு 15 ரன் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்குர் வீசிய இறுதி ஓவரில் 2 சிக்சர் பறக்க விட்ட அவர் கடைசி பந்தில் தனது 'கன்னி' சதத்தை பூர்த்தி செய்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் சேர்த்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களுடனும் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), நசும் அகமது 18 ரன்களுடனும் (11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். அவர்கள் கடைசி 10 ஓவர்களில் 102 ரன்கள் குவித்தனர்.
பின்னர் 272 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. ஆனால் 50 ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 266 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் திரில் வெற்றியை ருசித்தது. இதனிடையே வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 8-வது வரிசையில் களம் புகுந்து சதம் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டி வரலாற்றில் 8 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி ஒரு வீரர் சதம் விளாசுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு அயர்லாந்தின் சிமி சிங் 2021-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 8-வது வரிசையில் இறங்கி 100 ரன்கள் அடித்திருந்தார்.
- வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
- இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்கா:
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ,நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, மயங்க் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராகவும் ஜிதேஷ் சர்மா பேக்கப் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 ஆண்டுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மயங்க் யாதவ் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியின் வீரர்கள் விவரம் வருமாறு:
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன் தமிம், பர்வேஸ் ஹொசைன் எமான், தவ்ஹித் ஹிருடோய், மஹ்மதுல்லா, லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ஷேக் மெஹிதி ஹசன், ரிஷத் ஹொசைன், முஸ்தபிசுர் ரகுமான், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.
14 மாத இடைவெளிக்கு பிறகு ஆல் ரவுண்டரான மெஹிதி ஹசன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
முக்கிய வீரரான ஷகிப் அல் ஹசன் டி20 போட்டியில் இருந்து சமீபத்தில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.