என் மலர்
நீங்கள் தேடியது "Melur Municipality"
- மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
- தி.மு.க. நிர்வாகிகளை நியமித்ததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தார்.
மேலூர்
மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் உள்ளாட்சி தினத்தைமுன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் முகமது யாசின் தலைமை தாங்கினார்.ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சுகாதார அலுவலர் மணிகண்டன், நகர் அமைப்பு ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மலம்பட்டி, முகமதியாபுரம், மில்கேட், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தெரு விளக்கு, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் மேல்நிலைத் தொட்டி வசதி, பொது சுகாதார கட்டிட வசதி, ரேசுன் கடை வசதி, அங்கன்வாடி கட்டிடம் ஆகிய வசதிகளை கேட்டு மனு கொடுத்தனர். இதில் துணைத் தலைவர் இளஞ்செழியன், நகர் மன்ற உறுப்பினர்கள் பாண்டி, ஆனந்த், அறிவழகன், அருண் சுந்தர பிரபு, ரமேஷ், கமால் மைதீன், செல்வராஜ், மனோகரன், கலைச்செல்வி செந்தில்குமார், வசந்தா ராஜா, செல்வி மகாதேவன், ஜெயஸ்ரீ மகேந்திரன், மல்லிகா தெய்வேந்திரன், சைபுனிசா அலாவுதீன், ரிம்யா செந்தில், பிரேமா பழனிச்சாமி, சத்யா மந்தைச்சாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன், மற்றும் நகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
23-வது வார்டு நகர் மன்ற அ.தி.மு.க. உறுப்பினர் திவாகர் தமிழரசன் தனது பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகளை நியமித்ததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தார்.