என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro"

    • புயல் வெள்ள பாதிப்பால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு இரு தினங்களாக ஆய்வு செய்தது. மிச்சாங் புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு அதிகாரி தெரிவித்தார்.

    இதற்கிடையே, மிச்சாங் புயலால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. இதற்காக வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களில் டோக்கன் வினியோகம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன்கடைகளில் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் வெள்ள பாதிப்புகளால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், 2ம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடியும் சேத மதிப்பாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

    • ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்
    • இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.

    2016 ஆம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ், பாபி சிம்ஹா , சென்ராயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் ஸ்னாட்சிங் பற்றியும், இளைஞர்கள் எப்படி இந்த தொழிலுக்கு வருகிறார்கள் எதற்காக இப்படி செய்கின்றனர் என்று பேசிய திரைப்படம், படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். . படத்தை சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

    'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

    இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.

    இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படம் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்.
    • 2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது.

    ஹைதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்ட பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக அதன் இயக்குநர் ஷங்கர் ராமன் அறிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் உள்ள மெட்ரோ திட்டத்தில் 90 சதவீத பங்குகள் எல்&டி நிறுவனத்திடம் தான் உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் தான் தெலுங்கானா அரசிடம் உள்ளது. மெட்ரோ ரயில்களை இன்னும் 65 ஆண்டுகள் இயக்குவதற்கான உரிமை எல்&டி நிறுவனத்திடம் உள்ளது.

    பிசினஸ் டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்த எல்&டி நிறுவன இயக்குநர் ஷங்கர் ராமன், "தெலுங்கானாவில் பேருந்துகளின் எண்ணிக்கை உயரவில்லை என்ற போதும், பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால், மெட்ரோ பயணங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. பாலின பாகுபாடு ஏற்படுகிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது. மெட்ரோ திட்டம் லாபகரமானதாக இயங்க ஒரு நாளைக்கு 5 லட்சம் மெட்ரோ பயணிகள் பயணிக்க வேண்டும்.

    பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியது.

    தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாலக்ஷ்மி திட்டத்தின் மாநிலத்தில் அரசால் இயக்கப்படும் ஏசி அல்லாத பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கமுடியும்.

    • சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
    • ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

    சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோது வழக்கம்.

    ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். இது குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு பெரிய சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.

    இந்நிலையில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார ரெயில் சேவை இயங்காது. சென்னை கடற்கரையில் இருந்து நண்பகல் 12.40- க்கு புறப்படும் மின்சார ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்களது பயணத்தை திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    • எதிரே மெட்ரோ ரெயில் வந்துகொண்டுருக்கும்போது அதை நோக்கி ரெயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • துகாப்பு அதிகாரிகள் மீட்டு துண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்பார்முக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டெல்லியில் எதிர் திசையில் மெட்ரோ ரெயில் வந்துகொண்டுருக்கும்போது அதை நோக்கி ரெயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த புதன்கிழமை மதியம் ராஜேந்திர நகர் மெட்ரோ ஸ்டேஷன் அருகே நடந்த இந்த சம்பவத்தில் ரெயில் தடத்தின் அருகே ஓடிக்கொண்டிருத்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு துண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்பார்முக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    அதன்பின் அந்த பெண் மெட்ரோ போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கிய மெட்ரோ போலீஸ் பெற்றோரிடம் அவரை ஒப்படைத்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த பெண் முயற்சி செய்தாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. 

    • YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் [என்ஜிஓ] சர்சசை ஒன்றில் சிக்கியுள்ளது. YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் மார்பக புற்றுநோய் குறித்த விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    அந்த விளம்பரத்தில் கையில் 2 ஆரஞ்சு பழங்களுடன் சேலை அணிந்த பெண் ஒருவர் பேருந்தில் நின்றுகொண்டிருக்கும் சித்திரம் உள்ளது. அவருக்கு அருகே கூடை நிறைய ஆரஞ்சு பழங்களுடன் முதிய பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். 'மாதத்துக்கு ஒரு முறை உங்களின் ஆரஞ்சுகளை பரிசோதனை செய்யுங்கள்' என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. இங்கு பெண்களின் மார்பங்கள் ஆரஞ்சுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

     

    பெண்கள் 25 வயதை எட்டியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் மார்பக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதே இந்த விளம்பரத்தின் நோக்கம் ஆகும். ஆனால் அதற்காக அவர்கள் கையாண்ட வழிமுறை தவறாக முடிந்துள்ளது.

    இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் டெல்லி மெட்ரோ சேவை நிர்வாகம் இந்த போஸ்டர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது.

    பயணிகளின் வசதி கருதி மெட்ரோ ரெயில் நிலையங்களின் அருகில் பஸ் நிறுத்தத்தை அமைக்க விரைவில் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. #Metrotrain

    சென்னை:

    சென்னையில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் ஆகிய 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

    பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. ரூ.100 கட்டணத்துடன் கூடிய அட்டையில் ரூ.50 கூடு தலாக செலுத்தி நாள் முழுவதும் செல்லும் வகையில் சுற்றுலா அட்டை வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திய பிறகு ரூ.50 திருப்பி அளிக்கப்படுகிறது. பயணிகள் பயணம் செய் வதற்கு ஏற்ப 6 வகையான கார்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கியவுடன் பஸ் ஏறி செல்வதற்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பயணிகளின் வசதி கருதி மெட்ரோ ரெயில் நிலையங்களின் அருகில் பஸ் நிறுத்தத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பணிகளில் மெட்ரோ ரெயில் நிறுவன மும், மாநகர போக்குவரத்து கழகமும் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் சில இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் அருகில் மாநகர பஸ் நிறுத் தங்கள் உள்ளன. அசோக் பில்லர், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டியே மாநகர பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதனால் இந்த இடங்களில் பயணிகள் மெட்ரோ ரெயிலில் இருந்து இறங்கி பஸ்களில் பயணிப்பதும், பஸ் பயணிகள் மெட்ரோ ரெயிலில் செல்வதும் சுலபமாக உள்ளது.

    ஆனால் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும், பஸ் நிறுத்தத்துக்கும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. அதேபோல் செனாய்நகர், வடபழனி மற்றும் அரும்பாக்கம் ஆகிய இடங்களிலும் மெட்ரோ ரெயில் நிலையமும், பஸ் நிலையமும் மிக தொலைவில் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் பயணிகள் சிரமத்தை சந்திப்பதால் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதை தவிர்க்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே அனைத்து மெட்ரோ ரெயில் நிலை யங்கள் அருகிலும் பஸ் நிறுத்தங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் பஸ் நிறுத்தங் களை அமைக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டு வருகிறது.

    எல்.ஐ.சி., தேனாம் பேட்டை, நந்தனம், ராணுவ குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டி பஸ் நிறுத்தங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    வேலை காரணமாக தினமும் வந்து செல்லும் பயணிகளுக்கு இது பயனுள் ளதாக இருக்கும். அதன் மூலம் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கையும் உயரும் என்று கருதப்படுகிறது.

    ×