என் மலர்
நீங்கள் தேடியது "Minister Udhayakumar"
மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் மகாலில் இன்று ஜெயலலிதா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட பேரவைச் செயலாளர் சரவணன் எம்.எல்.ஏ. வரவேற்றுப் பேசினார்.
புறநகர் மாவட்ட பேரவைச் செயலாளர் தமிழரசன், மாநில பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், நீதிபதி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசு நிலைக்குமா? ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற முடியுமா? என்று கேள்வி கேட்டவர்களுக்கு முதல்வரும், துணை முதல்வரும் பதிலடி கொடுத்துள்ளார்கள்.
ஏளனம் பேசியவர்களை எல்லாம் ஏறெடுத்து பார்க்க வைத்துள்ளோம். அதற்கு காரணம் கர்வமில்லாத முதல்வரும், துணை முதல்வரும் தான்.
ஜெயலலிதா காட்டிய அறவழியில் தொண்டர்களோடு இணைந்து அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. யாரும் பிறக்கும்போது தலைவர்களாக பிறக்கவில்லை. மக்கள் பணி மூலமும், பொதுப்பணி மூலமும் தலைவர்களாக முதல்வரும், துணை முதல்வரும் உயர்ந்திருக்கின்றனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் செய்யும் பொய் பிரசாரத்தை முறியடிப்பது அம்மா பேரவையின் நோக்கமாகும்.

ஸ்டாலின் ஊர், ஊராக சென்று கிராம சபை கூட்டம் நடத்தி அ.தி.மு.க. குறித்து பொய் பிரசாரம் செய்கிறார். ஸ்டாலின் கிராம சபை கூட்டத்துக்கு கூட்டம் வரவில்லை.
தி.மு.க. ஆட்சியில் முதியோர் ஓய்வூதியத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க. அரசு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
கடுமையான நிதிச் சுமையிலும், பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கியவர்கள் முதல்வரும், துணை முதல்வரும் தான்.
தமிழகத்தில் காவல் துறையை நவீனமாக்க ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் 60 லட்சம் குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முதல்வரும், துணை முதல்வரும் மதி நுட்பத்துடன் செயல்படுத்தி வழங்க உள்ளார்கள்.
ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் சென்றால் அவர்கள் எப்படி மக்களிடம் வர முடியும்?
ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தியும், அவர்களை அரவணைத்து பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் உதவாக்கரை பட்ஜெட் என கூறியுள்ளார். எல்லோரும் பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர்.
இந்தியாவில் உள்ள 29 முதல் அமைச்சர்களிலேயே அதிக தூரம் பயணம் செய்து மக்களை சந்தித்து அதிக கோப்புகளில் கையெழுத்திட்டு திட்டங்களை செயல்படுத்தி வருபவர் நமது முதல்-அமைச்சர்.
அம்மா அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி ராஜ்ய கூட்டணி. தி.மு.க. அமைப்பதோ பூஜ்ய கூட்டணி ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், அய்யப்பன், பகுதி செயலாளர்கள் முத்திருளாண்டி, மாரிச்சாமி, மாநில இணைச் செயலாளர்கள் இளங்கோவன், முகில், சதன் பிரபாகரன், ரமேஷ், ராஜசேகர், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், மார்க்கெட் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #RBUdhayakumar #DMK
மதுரை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியில் இருந்து குன்னத்தூர், புதூர், பெரியபூலாம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் 12 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்.
இதுதொடர்பாக அச்சம்பட்டி கிராமத்தில் நடந்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
காலை 10 மணிக்கு மேல்தான் அரசு அதிகாரிகள் பணி செய்வார்கள் என்ற நிலையை மாற்றி 24 மணி நேரமும் செயல்படும் அரசு தான் அம்மாவின் அரசு என்பதை நிரூபித்து காட்டும் வகையில் இந்த இரவு நேரத்திலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இன்றைக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை வழங்கப்படுகின்றன. அவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. பானையில் பொங்கல் பொங்கும்போது மக்களின் உள்ளமும் மகிழ்ச்சியில் பொங்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.
மறைந்த முதல்- அமைச்சர் அம்மா அவர்களும் பொங்கல் பரிசாக ரூ.100 தந்தார்கள். அன்றைக்கு விலைவாசி அப்படி. இன்றைக்கு ரூ.100 கொடுத்தால் சிறு பிள்ளைக்கூட கேள்வி கேட்கிறது?.
மக்கள் நலன்பேணும் அம்மாவின் அரசுதான் ரூ.1000 பொங்கல் பரிசை உங்களுக்கு தந்துள்ளது. இதை நீங்கள் மறந்து விடக்கூடாது. பொங்கல் பண்டிகை என்பது தமிழர் திருநாள். இங்கே பொங்கல் பரிசு பெறுபவர்கள் ரூ.1000 ரொக்கத்தை பிரதமர் மோடி தருவதாக நினைக்கிறார்களாம். அப்படி அல்ல. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் தருகிறார்.
இதனை பொதுமக்களிடம் விளக்கி சொல்ல வேண்டியது இருக்கிறது. எனவே தான் பொங்கல் பரிசு கிராம மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நேரில் வந்து கொடுத்து வருகிறோம். கிராம மக்கள் வேலைக்கு சென்று விட்டு மாலையில்தான் வீடு திரும்புகிறார்கள். இதனால் இரவானாலும் மக்களுக்கு பொங்கல் பரிசை அதிகாரிகள் ஆர்வத்துடன் வழங்குகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #PongalGift #MinisterUdhayakumar
தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் பொங்கல் பரிசு வழங்கினர்.

இந்த நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரவு 8 மணி வரை கிராம மக்களுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை 8 மணியில் இருந்து குன்னத்தூர், புதூர், பெரியபூலாம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் 12 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார். #PongalGift #MinisterUdhayakumar
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர் .
பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் கஜா புயலின் போது அதிக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் நிவாரண நிதியாக ரூ.1,104 கோடி வழங்கியுள்ளது. வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இன்னமும் ரூ.2500 கோடி தேவைப்படுகிறது.

வருகிற 16-ந்தேதி வரக்கூடிய புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. புயலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். புயல் எந்த திசையில் வரும் என்று உறுதி செய்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல் மக்களிடம் தெரியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-
ஆயிரம் பேர் ஆயிரம் பேசலாம். ஆனால் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் கஜா புயலின் போது அதிக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 99 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. அடுத்தது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மின் கம்பங்களை சீரமைக்கும் பணி தொடங்க உள்ளது என்றார்.
விழாவில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:-
கஜா புயலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய அரசாக தமிழக அரசு இருந்தது. கஜா புயலை வைத்து எதிர்க்கட்சிகள் தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற நினைத்தால் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு சோதனையான காலகட்டத்தை கடந்து சுகாதாரத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவர் பதவியிலேயே தொடர முடியாது என்று பேசப்பட்ட சோதனை காலக்கட்டத்தில் கூட கலங்கி விடாமல், சோர்ந்து போகாமல் சோதனைகளை சாதனைகளாக மாற்றியமைத்தவர் விஜயபாஸ்கர்.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களோடு களத்தில் நின்று மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டவர். அவர் மேற்கொண்ட நடவடிக்கையால் தான் புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்று நோய் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நிவாரண பணிகள் முடிந்த பிறகு எந்த விவாதத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #TNCyclone #MinisterUdhayakumar #TNGovt
தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிதி கமிஷன் மூலமாக மத்திய அரசு, ஆண்டு தோறும் தேசிய பேரிடர் பணிக்காக 2 கட்டமாக நிதி வழங்கி வருகிறது. வழக்கமாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் தேசிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கும், ஏற்கனவே ஜூன் மாதத்திற்கான நிதியை வழங்கிவிட்டது.
தற்போது டிசம்பர் மாதத்திற்கான 2-வது கட்ட நிதியை தான் முன்கூட்டி வழங்கியுள்ளது. ஆனால் சிலர் இதனை தவறுதலாக புரிந்து கொண்டு மத்திய அரசு வழங்கிய 354 கோடி ரூபாய் கஜா புயல் நிவாரணத்துக்கு போதாது என்று கூறுகின்றனர். கஜா புயல் நிவாரணத்துக்கு இன்னும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
மத்தியக்குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை அரசுக்கு கொடுத்துள்ளது. ஆகையால் நல்ல அறிவிப்பு வரும் என்று நம்புகிறோம். கேரளாவிற்கு 3458 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். அதே போன்று 12 மாவட்டங்கள் தமிழகத்தில் கஜா புயலால் சேதமடைந்துள்ளன. அதில் 4 டெல்டா மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து முதல்வர், பிரதமரிடம் எடுத்து கூறி நிவாரணம் கேட்டுள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணையலாம் என்று ஏற்கனவே முதல்வர், துணை-முதல்வர் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களும் இணைவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது, இணைந்தால் வரவேற்போம், யார் வேண்டுமானாலும் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CentralGovt #MinisterUdhayakumar
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்த பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:-
புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைக்கு 465 முகாம்கள், 535 மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் உள்ளன. கஜா புயலால் 2,17,935 மரங்கள் சாய்ந்துள்ளன, 91,960 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் மழை பெய்து வருகிறது. மழையால் மீட்பு பணிகள் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழையிலும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். துண்டிக்கப்பட்ட 58 லட்சம் மின் இணைப்புகளில், 38 லட்சம் இணைப்புகள் சீரானது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் சீரானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், கிராம பகுதிகளில் 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #GajaCyclone #RBUdhayakumar
டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் மீட்பு நடவடிக்கை திருப்தி இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் உதயகுமார், தந்தி டிவிக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற மக்கள் எண்ணத்திற்கு ஏற்ப அரசு செயல்பட்டு வருகிறது. புயல் பாதிப்பால் உயிரிழப்புகளை தடுக்க, மக்களை பாதுகாப்பு வளையத்திற்குள் அரசு கொண்டு வந்தது.

குக்கிராமங்களிலும் கூட மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; 100% முழுமையாக நிறைவேற்ற, அரசுக்கு அவகாசம் தேவை. விழுந்த மின்கம்பங்கள், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைப்பதே அரசின் முதல் பணி ஆகும்.
சிலர் திட்டமிட்டு அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள்; இது நிவாரண பணியில் தொய்வை ஏற்படுத்தும். அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பதாக கூறப்படுவது தவறு; சாமானிய மக்களை போராட சிலர் துண்டிவிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #CycloneGaja #ReliefOperation #RBUdhayakumar
சென்னை:
கரையை கடந்த கஜா புயலால் நிறைய அனுபவங்கள் தங்களுக்கு கிடைத்ததாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கூறினார்.
இதுபற்றி அவர் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை துறையை நாங்கள் முன் கூட்டியே உஷார்படுத்தி இருந்தோம்.
இந்த நிலையில் கஜா புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தகவல்களை வழங்கிக் கொண்டே இருந்தது.
புயல் வருவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அது காற்றழுத்த தாழ்வு நிலையாக இருக்கும்போதே நாங்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினோம்.
மரங்கள் சாய்ந்தால் அதை அகற்றுவதற்கான எந்திரங்கள், மரம் அறுக்கும் மிஷின், ஜே.சி.பி. எந்திரங்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், தகர கொட்டகையில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள ‘கான்கிரீட்’ கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், சமுதாய நல கூடங்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்குமாறு முன் கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம்.
கடலோர மாவட்டங்களில் இந்த பணிகளை மேற்பார்வையிட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் வருவதற்கு முன்பே அனுப்பி வைத்தார். அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் முன்கூட்டியே சென்று தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் கஜா புயலின் நகர்வை சிறப்பாக கணித்து எங்களுக்கு அவ்வப்போது தகவல்களை வழங்கியது. இந்த தகவல் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

இந்த தகவல்கள் மூலம் பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்க முடிந்தது. அதிகளவு உயிரிழப்பு ஏற்படாமல் மக்களை காப்பாற்றியது அரசின் சாதனையாகும்.
இப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் புயலால் ஏற்பட்டதா? அல்லது சுவர் இடிந்து மின்சாரம் தாக்கிய காரணங்களால் ஏற்பட்டதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம்.
கடலில் புயல் மெதுவாக நகர்ந்து வந்த காரணத்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள அனைத்து மக்களையும் நாம் வெளியேற்றி விட்டோம். புயலால் சேதம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்ததால் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் ரத்து செய்தோம்.
மின்கம்பங்கள் சாய்ந்தால் உடனே அதை சரிசெய்வதற்கு 15 ஆயிரம் மின் கம்பங்களை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
கடந்த காலங்களில் புயலால் ஏற்பட்ட பாடங்களை முன்நிறுத்தி இந்த முறை அதிகளவு முன்எச்சரிக்கை எடுத்தோம். புயல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்ததால் போதிய கால இடைவெளியுடன் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிந்தது.
புயல் கடந்த உடனேயே இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கையிலும் இப்போது முழு வீச்சுடன் இறங்கி உள்ளோம். நிவாரண முகாம்களில் உள்ள மக்கள் விரைவில் வீடு திரும்புவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.
சேத விவரங்களை தனித் தனியாக கணக்கெடுத்து வருகிறோம். இடிந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் சாய்ந்து முறிந்த தென்னை மரங்கள், மாமரம், பலா, முந்திரி, புளிய மரங்கள், வாழை மற்றும் சேதமான நெற்பயிர்களையும் கணக்கெடுத்து வருகிறோம். பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும். மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடக்கிறது.
இனி எத்தனை புயல் வந்தாலும் அதனை எளிதாக எதிர்கொண்டு விடுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
இவ்வாறு உதயகுமார் கூறினார். #TNMinister #Udhayakumar #Gajastorm
சென்னையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் நாகை அருகே இன்றிரவு கடக்க உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றம் என்பது மிக முக்கியம் என்பதால் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு உரிய காலத்தில் எச்சரிக்கை தகவல்களை தெரிவிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு அமைப்புகள், கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் எல்காட் நிறுவனம் மூலமாக ரூ.50 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை இன்று எழிலகத்தில் தொடங்கி வைத்தேன்.

இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய கடல்சார் தகவல் மையங்களிலிருந்து பெறப்படும் எச்சரிக்கை தகவல்களை ஒலி அலைகள் மூலமாகவும் முன்பதிவு ஒலி எச்சரிக்கை செய்திகள் மூலமாகவும், நேரடி ஒலி எச்சரிக்கை செய்திகள் மூலமாகவும் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்றடையும் வகையில் இது செயல்படும். மேலும் இவ்வமைப்பின் சிறப்பு அம்சமாக பேரிடரால் பாதிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும், பிரத்யேக அவசர தகவலை மென்பொருள் மூலம் தேர்வு செய்து அனுப்ப இயலும்.
புயல் சம்பந்தமாக யாரேனும் வீண் வதந்தி பரப்பினால் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.
புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 5067 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterUdhayakumar #CycloneGaja
சென்னையில் அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘கஜா’ புயல் நெருங்கி வருவதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கஜா புயல் 3 முறை திசை மாறி உள்ளது. தற்போதும் அதன் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
கடலூர் முதல் பாம்பன் வரை புயல் சேதம் அதிகம் ஏற்படும் என்பதால் சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தயார் நிலையில் முன் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

புயலால் 2559 இடங்கள் பாதிக்கப்பட கூடும் என கண்டறியப்பட்டு உள்ளதால் அங்கு மரம் அறுக்கும் மிஷின், ஜே.சி.பி., எந்திரங்கள், மீட்பு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரிகளில் உள்ள ஜெனரேட்டர்களை மேல்தளத்தில் வைக்கும் படியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் முழுமையாக நிரப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளோம்.
ஆக்சிஸன் சிலிண்டர், அத்தியாவசிய மருந்து பொருட்களை தேவையான அளவு இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்தால் அவற்றை சரி செய்ய தேவையான ஊழியர்களும் 1125 நீச்சல் வீரர்களும், 657 பாம்பு பிடிப்பவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
புயலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது பற்றி கலெக்டர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள். அரசு ஊழியர்கள் விடுமுறை இன்றி பேரிடர் சமயத்தில் பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Gaja #GajaCyclone #TNMinister #Udhayakumar
மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரில் ரூ. 7 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 32 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடலோர மாவட்டங்களில் கூடுதலாக பாதுகாப்புகளை ஏற்படுத்த அனைத்து கடலோர மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டு உள்ளது.
பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் தங்குவதற்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
4,399 இடங்கள் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு தேவையான முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேவைப்படும் பட்சத்தில் மத்திய பேரிடர் மீட்பு குழு பயன்படுத்தப்படும். 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே கடலுக்குள் சென்றவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Gaja #ADMK #TNMinister #RBUdhayakumar
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிக மழையினால் 4,399 இடங்கள் பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்டு, இப்பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 9500 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பருவ மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. சார்பில் சொல்லப்பட்டு வருகிறது.
அது அவர்களின் தொண்டர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக காலம் காலமாக இதுபோன்று சொல்லி வருகிறார்கள். இந்த அரசு 5 ஆண்டுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, அடுத்து வரும் தேர்தலிலும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முன்நிறுத்தி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran