என் மலர்
நீங்கள் தேடியது "MIvCSK"
- சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார்
- ஆயுஷ் மாத்ரே தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் இழந்ததை அடுத்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவை சூர்யகுமார் யாதவ் தட்டி கொடுத்து பாராட்டினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- 76 ரன்கள் விளாசி ரோகித் 'ஆட்ட நாயகன்' விருதை வென்றார்.
- 'ஹிட்மேன் இஸ் பேக்' என்று மும்பை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் சீசனின் தொடக்கம் முதலே சொற்ப ரன்களின் அவுட்டாகி வந்த ரோகித் சர்மா, இந்த போட்டியில் 76 ரன்கள் விளாசி 'ஆட்ட நாயகன்' விருதை வென்றார். இதனால் 'ஹிட்மேன் இஸ் பேக்' என்று மும்பை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்தார்.
- ஆயுஷ் மாத்ரே தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார்.
ஆயுஷ் மத்ரேவின் துணிச்சலான ஆட்டத்தை டிரஸ்ஸிங் ரூமில் நின்றிருந்த சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனி புன்னகையுடன் ரசித்து பார்த்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
- டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 38-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஷேக் ரஷீத் 19 ரன்னில் வெளியேறினார்.
அறிமுக வீரரான ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடி 15 பந்தில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த ஜடேஜா-ஷிவம் துபே ஜோடி 79 ரன்கள் சேர்த்தது, ஷிவம் துபே அரை சதம் கடந்து அவுட்டானார்.
ஜடேஜா அரை சதம் கடந்து 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அவருக்கு சூர்யகுமார் யாதவ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அரை சதம் கடந்தனர்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
இது மும்பைக்கு கிடைத்த 4வது வெற்றி ஆகும். சென்னை அணியின் 6வது தோல்வி இதுவாகும்.
- சிஎஸ்கே முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை மோதுகிறது.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை 7 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. 5-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.
அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடம் தொடர்ச்சி யாக தோற்றது.
தனது 7-வது ஆட்டத்தில் லக்னோவை (5 விக்கெட்) வீழ்த்தியது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்திக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்கஸ் முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
இதற்கிடையே, சி.எஸ்.கே. எஞ்சி இருக்கும் 7 போட்டியில் 6-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும்.
இதனால் மும்பையை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அந்த அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலானது. மும்பையை மீண்டும் வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
- முதலில் ஆடிய மும்பை 157 ரன்கள் எடுத்தது.
- ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.
மும்பை:
16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இன்று மும்பையில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர்.
அணியின் எண்ணிக்கை 38 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 21 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.
கேமரூன் கிரீன் 12 ரன்னும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது.
சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
மும்பை:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 29-வது ஐபிஎல் லீக் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், சி.எஸ்.கே .அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி பிசிசிஐ தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த 2011 உலகக் கோப்பை டிராபி மற்றும் சாம்பியன் டிராபி கோப்பையைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
மேலும், மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிய புகைப்படங்கள் வைரலானது.
- கேப்டனாக 2-வது அரை சதத்தை ருதுராஜ் பதிவு செய்தார்.
- மும்பை அணி தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டும் ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மும்பை:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னையின் தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரகானே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ரச்சின் 21 ரன்னில் வெளியேறினர்.
இதனையடுத்து ருதுராஜ் - துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் அரைசதம் விளாசினார். கேப்டனாக அவரின் 2-வது அரைசதம் இதுவாகும். அவர் 69 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே அரைசதம் விளாசினார்.
இந்த தொடரில் மோசமாக விளையாடி வரும் மிட்செல் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 4 பந்துகளுக்கு களம் புகுந்த டோனி ஹட்ரிக் சிக்ஸ் விளாசி அசத்தினார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டும் ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- 2008-ல் சிஎஸ்கே அணிக்கெதிராக ஜெயசூர்யா சதம் அடித்திருந்தார்.
- அதன்பின் ரோகித் சர்மா தற்போது சிஎஸ்கே அணிக்கெதிராக சதம் அடித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். அவர் 63 பந்துகளில் 11 பவுண்டரி, ஐந்து சிக்ஸ் உடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எப்போதும் மிகப்பெரிய ஆட்டமாக பார்க்கப்படும். இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் அறிய ஆவலாக இருப்பார்கள்.
இரு அணிகளுக்கு இடையில் ஐபிஎல் தொடங்கிய முதல் வருடமான 2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் சனத் ஜெயசூர்யா சதம் அடித்திருந்தார். அதற்குப் பிறகு சுமார் 16 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தற்போது சதம் அடித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்த இரண்டாவது மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். டோனி 4 பந்தில் 3 சிக்சருடன் 20 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷிவம் டுபே, ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசினர்.
- எம்.எஸ். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
சென்னையிடம் தோல்வியடைந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
207 இலக்கு என்பது எட்டக்கூடியதுதான். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். திட்டத்திலும் அணுமுறையிலும் ஸ்மார்ட்டாக இருந்தனர். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஸ்டம்பிற்கு பின்னால் இன்று சொல்லிக்கொடுக்கும் டோனி என்ற நபரை அவர்கள் பெற்றிருந்தனர். அது அவர்களுக்கு உதவியாக இருந்தது.
பதிரனா பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்துவதற்கு முன்பு வரை நாங்கள் நல்ல நிலையில்தான் இருந்தோம். அடுத்த நான்கு போட்டிகளை எதிர்நோக்கி இருக்கிறோம். அதை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். தீவிரம் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டுபே அரைசதம் அடித்தனர். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார். பதிரான நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
- எங்களுக்கு 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது.
- நாங்கள் பேட்டிங் செய்தபோது மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மகிழ்ச்சியில் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-
இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. அது வித்தியாசம் என்பதை நிரூபித்தது. இது போன்ற மைதானத்தில் எங்களுக்கு 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்தபோது மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்த போதிலும், நாங்கள் எங்கள் பந்து வீச்சின் திட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்து என நினைக்கிறேன். நாங்கள் பவர்பிளேயில் 60 ரன்கள் எடுத்திருக்கனும். எங்களுடைய மலிங்காவின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. தேஷ்பாண்டே, ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
ரகானேவுக்கு சிறிய அளவில் காயம் இருந்ததால் தொடங்க வீரராக களம் இறக்கினால் சிறப்பானதாக இருக்கும் என நினைத்தோம். எந்த இடத்தில் களம் இறங்கினாலும் எனக்கு சரியானதுதான். அது ஒரு கேப்டனாக கூடுதலாக பொறுப்பு.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டுபே அரைசதம் அடித்தனர். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார். பதிரான நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
- சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு- பரோடா அணிகள் மோதின.
- இதில் பரோடா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான தமிழ்நாடு அணியும் குர்ணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற பரோடா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தமிழ்நாடு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. 222 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 30 பந்தில் 69 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய குர்ஜப்னீத் சிங்கை சமீபத்தில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இந்த போட்டியில் குர்ஜப்னீத் சிங் ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 சிக்சர் 1 பவுண்டரி விளாசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே பந்து வீச்சாளர் ஓவரை பறக்க விட்ட மும்பை கேப்டன் என சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்த போது ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஏலம் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் விஜய் ஷங்கர் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார் என பதிலடி கொடுத்து வருகின்றனர். ஐபிஎல் தொடங்க இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மும்பை - சிஎஸ்கே என்ற போட்டி ஆரம்பித்து விட்டது.