என் மலர்
நீங்கள் தேடியது "MK Azhagiri"
- முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- மு.க.அழகிரி, மு.க.தமிழரசு ஆகியோர் பொன்முடியை இன்று சந்தித்து பேசினர்.
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பொன்முடியுடன் மு.க.அழகிரி சந்தித்து பேசினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லத்தில் மு.க.அழகிரி, மு.க.தமிழரசு ஆகியோர் பொன்முடியை சந்தித்து பேசிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
- சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக நேரில் சென்று சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், துரை தயாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் வருகையொட்டி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி தனது தி.மு.க. எதிர்ப்பை கைவிட்டு மவுனம் காத்தார்.
- மன்னிப்பு கடிதம் தி.மு.க. முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை:
தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தி.மு.க.வினரின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் மு.க.அழகிரி. கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மு.க.அழகிரி அமோக வெற்றி பெற்று மத்திய கேபினட் மந்திரியானார். இதனால் தி.மு.க.வில் மு.க.அழகிரியின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி உத்தரவின் பேரில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மு.க.அழகிரியை தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 15 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து மு.க.அழகிரி தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு சமயங்களில் அரசியல் வியூகங்களை கையாண்டார். மு.க.ஸ்டாலினையும் பொது நிகழ்ச்சிகளில் விமர்சித்தார்.
கடந்த 2016 சட்டசபை தேர்தல் மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களை எதிரணிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தினார். இது தி.மு.க. தலைமைக்கு மு.க.அழகிரி மீது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி தனது தி.மு.க. எதிர்ப்பை கைவிட்டு மவுனம் காத்தார். பின்னர் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலினை பாராட்டி கருத்துக்களை தெரிவித்தார். மு.க. அழகிரியின் திடீர் மனமாற்றம் தி.மு.க.வினர் மத்தியில் பரவலாக பேசும் பொருளானது. மு.க.அழகிரியை தி.மு.க.வில் மீண்டும் கட்சி தலைமை சேர்த்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதற்கிடையே மு.க.அழ கிரி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்து கட்சி பணி ஆற்ற விருப்பம் தெரிவித்தனர். இது தொடர்பாக மு.க.அழகிரி தனது கண்ணசைவை காட்டாத நிலையில் ஆதரவாளர்கள் 15 பேரில் 9 பேர் மட்டும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மதுரை நகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. மூலம் கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.
மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டல தலைவர் கோபிநாதன், உதய குமார் எம்.எல்.ராஜ், முபாரக் மந்திரி, அன்பரசன், கொட்டாம்பட்டி ராஜேந்திரன், இசக்கிமுத்து ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது மன்னிப்பு கடிதம் தி.மு.க. முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில் இரண்டு மாதங்கள் ஆகியும் கட்சி தலைமையிடம் இருந்து எவ்வித பதிலும் வராததால் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மன்னிப்பு கடிதம் எழுதியவர்களில் ஒருவர் கூறுகையில், அண்ணன் மு.க. அழகிரி தலைமையில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தி.மு.க.வை வளர்க்க அயராது பாடுபட்டோம். பல தேர்தல்களில் இரவு-பகல் பாராது உழைத்து தி.மு.க.வுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளோம். அந்த தகுதியின் அடிப்படையில் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இதற்காகவே மன்னிப்பு கடிதத்தை தி.மு.க. தலைமைக்கு எழுதி அனுப்பினோம். ஆனாலும் இதுவரை மேலிடத்திலிருந்து எந்தவிதமான உத்தரவும் வரவில்லை என்று தெரிவித்தார்.
மு.க.அழகிரி ஆதரவாளர்களின் மன்னிப்பு கடிதம் கொடுக்காத சிலர் கூறும்போது, தி.மு.க.வில் சேர அண்ணன் அழகிரி இதுவரை யாருக்கும் அனுமதி தரவில்லை. ஆனால் சிலர் அவர்களாகவே தனிப்பட்ட முறையில் கட்சியில் சேர ஆர்வம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து தங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்களது விருப்பத்தை கட்சி மேலிடம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்றார்.
எனவே மன்னிப்பு கடிதம் கொடுத்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்படுவார்களா? அல்லது தனித்து விடப்படுவார்களா? என்பது கட்சி மேலிடத்தின் கையில் தான் இருக்கிறது என்று மதுரை முக்கிய தி.மு.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
- சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
- தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வயது மூப்பின் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.
அங்கு தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். இதனை தொடர்ந்து தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க மு.க.அழகிரியும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், தாயார் தயாளு அம்மாளின் நலம் குறித்து விசாரிக்க இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வருகை தந்துள்ளார்.
மேலூர்:
தி.மு.க. கூட்டணி சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் இன்று மேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலத்திலேயே மதுரை மாவட்டம் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இதனை மாற்ற பாடுபடுவேன்.
அதேபோல் மேலூர் பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ள நிலையில் தற்போது விவசாயம் மிகவும் பாதித்துள்ளது. இதனை மாற்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வெற்றி பெற்றவுடன் பாடுபடுவேன்.

இரண்டொரு நாட்களில் கட்சியின் வெற்றிக்காக மு.க.அழகிரியை சந்திக்க உள்ளேன்.
அழகிரி மட்டுமல்ல, மதுரை பாராளுமன்ற தொகுதியிலுள்ள 15 லட்சம் வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளேன்.
தொழில் வளர்ச்சியில் மதுரை முன்னேற்றமடையும் வகையில் தேர்தல் அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட்டு பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #DMK #MKAzhagiri
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்பதற்காக முத்தலாக் சட்ட மசோதா பாராளு மன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
மேல்-சபையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பெண்களின் உரிமையை பாதுகாக்க முன்வராமல் எதிர்ப்பது முறையல்ல
புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும் கூறி வருகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு கிரண்பேடி முன்னுரிமை வழங்குகிறார்.
புதுச்சேரி அரசில் தலையிடாமல் தனக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு செயல்படுகிறார். அவரை திரும்பப்பெற வேண்டும் என்பது புதுச்சேரி அரசின் கையாலாகாததனம்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை கொண்டு வருவது நியாயமானது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க இந்த தடை அவசியம். அதை எதிர்க்க கூடாது.
பெட்ரோல்-டீசல் விலை ஏற்ற, இறக்கத்தை வைத்து அரசியல் நடத்த பா.ஜனதா விரும்பவில்லை. பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மு.க.அழகிரி பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘பா.ஜனதாவில் மு.க.அழகிரி சேருவது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை’’ என்று கூறினார். #ponradhakrishnan #MKAzhagiri #bjp
மதுரை:
பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் மண்டல தலைவர் சின்னான், நிர்வாகிகள் உதயகுமார், எம்.எல்ராஜ், வாவா புகர்தீன், பக்ருதீன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
அப்போது மன்னன் நிருபர்களிடம் கூறுகையில், மு.க.அழகிரியையும், எங்களையும் தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். இதற்காக தொண்டர்களை திரட்டி, இன்று முதல் கிளை கழகம் முதல் ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். அதனை தி.மு.க. தலைமைக்கு மின்னஞ்சல் மற்றும் பேக்ஸ் மூலம் அனுப்ப உள்ளோம். அழகிரியின் வீட்டில் இருந்து கையெழுத்து இயக்கம் தொடங்குகிறது என்றார்.
முன்னதாக மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் அண்ணா சிலை முன்பு திரண்டிருந்த போது, தி.மு.க.வினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது அஞ்சா நெஞ்சன் வாழ்க, கலைஞர் வாழ்க என அழகிரி ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது. #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, கருணாநிதியின் உயிரோடு இருக்கும் வரையில் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதன் பின்னர் தி.மு.க.வில் சேருவதற்கு அழகிரி மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து மதுரையில் தனது வீட்டில் வைத்து ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தினார்.
செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் பேரணி நடத்தப்போவதாகவும், இதில் 1 லட்சம்பேர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்துள்ள மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களையும் திரட்டி வருகிறார்.
சென்னை அண்ணா சாலை அருகில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி ஊர்வலமாக செல்வதற்கு மு.க.அழகிரி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முறைப்படி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்து போலீசார் அழகிரியின் பேரணிக்கு அனுமதி வழங்கி உள்ளனர்.
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகில் இருந்து அழகிரி தலைமையில் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் அழகிரி ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். நாளை நடைபெறும் இந்த பேரணிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது. பேரணிக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மு.க.அழகிரி, நேற்று காலையிலேயே மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். நாளை காலையில் பேரணியில் பங்கேற்கும் அழகிரி தனது அடுத்தக்கட்ட முடிவு என்ன? என்பதை அறிவிக்க உள்ளார். #MKAzhagiri
கருணாநிதியின் 30-வது நினைவு நாளையொட்டி, சென்னையில் வருகிற 5-ந்தேதி அமைதி பேரணி நடத்தப் போவதாக மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.
அமைதி பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கே:- தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். அவரை சந்திப்பீர்களா?
ப:- சந்திக்க மாட்டேன்
கே:- சென்னையில் நீங்கள் நடத்த இருக்கும் அமைதி பேரணியில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள்?

ப:- 5-ந்தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து அப்போது முடிவை தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மு.க.அழகிரியின் பேரணிக்கு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்து அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், மு.க.அழகிரியின் பேரணிக்கு எழுத்துபூர்வமாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பேரணி செல்லக்கூடிய சாலையில் வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை. அதனால் பேரணிக்கு உறுதியாக அனுமதி கிடைக்கும் என்றார். #DMK #MKStalin #MKAzhagiri
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த 30-வது நாளில் சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணி நடத்தப்போவதாக அவரது மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி அறிவித்தார்.
தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனையிலும் ஈடுபட்டார். முதலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த மு.க.அழகிரி திடீரென மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

5-ந்தேதி சென்னையில் தி.மு.க. உண்மை தொண்டர்களுடன் அமைதி பேரணி அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் என்றார்.
இந்த நிலையில் மு.க.அழகிரி மதுரையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அப்போது பேரணியின் எழுச்சி எப்படி இருக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். 5-ந்தேதி நடக்கும் பேரணியை தொடர்ந்து 6-ந்தேதி தொண்டர்களின் எழுச்சி அனைவருக்கும் தெரியவரும் என்று பதில் அளித்தார். #DMK #MKAzhagiri