என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Staliln"

    • மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    • மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.

    சென்னை:

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயில் மீது மோதியது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தகவல் கிடைக்கப் பெற்றவுடன், அமைச்சர் நாசர் அவர்களையும் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கென தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.

    விபத்துக்கு உள்ளான ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
    • பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!

    உலகத் தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!

    இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!

    அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!

    உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என்று தெரிவித்துள்ளார்.

    • வடசென்னை மக்களின் உயிர்களை காலங்காலமாய் காக்க பெரியார் அரசு மருத்துவமனை பயன்படும்.
    • மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறும்.

    சென்னை கொளத்தூரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பிறகு அவர் உரையாற்றியதாவது:-

    நமது கொளத்தூர் தொகுதியில் மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பி உள்ளோம். ரூ.210 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் பெரியார் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    வடசென்னை மக்களின் உயிர்களை காலங்காலமாய் காக்க பெரியார் அரசு மருத்துவமனை பயன்படும்.

    பெரியார் மருத்துவமனையை பொது மக்கள் சுகாதாரத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். நோயாளிகளை குடும்பத்தில் ஒருவராக நினைத்து சிறப்பாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் வகையில் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிய பிரதிநித்துவம் தரப்படும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் தரப்படும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் செய்யப்படும்.

    நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், ஊராட்கள் சட்டத்தில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திருத்தம் செய்யப்படும்.

    மாற்றுத்திறநாளிகள் என பெயர் கொடுத்து சுயமரியாதையை காத்தவர் நமது கலைஞர் கருணாநிதி. கலைஞர் வழியில் மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதையை காக்கும் வகையில் அதிகாரத்தில் பங்கு.

    மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரம் பொருந்திய அவைகளில் இடம்பெறும். இதுவே உண்மையான சமூக நீதி பெரியார் அரசு. வடசென்னையை வளர்ச்சி அடைந்த சென்னையாக மாற்றுவதில் பெரியார் மருத்துவமனை ஒரு மைல்கல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #Anbazhagan #AppolloHospital #MKStalin

    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் முதுமை காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

    நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான காய்ச்சல் இருந்தது. இதைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.இன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல் நிலை பற்றி விசாரித்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுச்செயலாளர் பேராசிரியர் நேற்றிரவு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருவதால் உடல்நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இரண்டொரு நாட்களில் உடல்நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் கழக நிர்வாகிகள்-தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    தற்போது அன்பழகனின் உடல்நிலை சீராகி வருவதாக டாக்டர்களும் தெரிவித்துள்ளனர். #DMK #Anbazhagan #AppolloHospital #MKStalin

    ×