என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLAs"

    • கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.பரபரப்பு தகவல்
    • பிரச்சினையில் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜோசப், சந்திரசேகர் கொலை செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருந்து கம்பெனியை விரிவாக்கம் செய்ய கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 8.5.2018-ல் தேதியில் அனுமதி கொடுத்தனர். அங்கு ஏற்பட்ட பிரச்சினையில் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜோசப், சந்திரசேகர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது.

    இந்த கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க மத்திய மந்திரி அமித்ஷாவிடம் மனு அளிக்க உள்ளேன். புதுவை கலால்துறையில் சாராயக்கடை, பெட்ரோல், டீசல் பங்க் நடத்திய முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள் ரூ.200 கோடி வரி பாக்கி வைத்துள்ளனர். இதை வசூலிக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.
    • அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளு மன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.

    அதனை தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம் தலைமையில் ஜான்குமார், வெங்கடேசன், அசோக் பாபு, பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி உயர்த்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று முன்தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் நேற்று அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை சந்தித்தனர்.

    மதியம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அங்காளன் எம்.எல்.ஏ. தனித்தனியாக கவர்னரை சந்தித்துபேசினர்.

    இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் கேட்ட போது தொகுதியில் நிறை வேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.
    • என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    புதுவை அமைச்சரவை யில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் 4 அமைச்சர்களும், பா.ஜனதா தரப்பில் 2 அமைச்சர்களும், சபாநாயகரும் உள்ளனர். என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜனதாவுக்கும் 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.

    இதோடு புதுவை சட்ட மன்றத்தில் உள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவை ஆதரிக்கின்ற னர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஆட்சி அமைந்தது முதலே என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது.

    முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலும் சட்ட சபைக்கு வெளியிலும் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    புதிய மது ஆலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக சட்டசபையிலேயே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அதோடு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கூட தங்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அளிப்பதில்லை என்றும் புகார் செய்தனர்.

    வளர்ச்சிப் பணிகளில் தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி சட்டசபை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நடத்தியுள்ளனர். கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் தொடர்ந்து சலசலப்புகள் இருந்தாலும் ஆட்சி தொடர்ந்தது.

    இந்தநிலையில் பாராளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி சார்பில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வி என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.

    அதோடு தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தி உள்ளனர். தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்தில் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.

    இதன் தொடர்ச்சியாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.

    ஆனால், கவர்னருடனான சந்திப்பு குறித்து கேட்ட போது தொகுதியில் வளர்ச்சி பணிகளை துரிதப் படுத்தவும், குடியிருப்பு, பள்ளி, கல்லூரிகளிடை யிலான ரெஸ்டோ பார் களை அகற்றவும் கவர்னரி டம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் நேற்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்த திருபு வனை தனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசிய ஆடியோ வெளியானது. இதில் அங்காளன் எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து பேசிய விரங்களை தெரிவித்துள் ளார்.

    அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜனதா அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களையும் புரோக்கர் கள் துணையோடு முதல்- அமைச்சர், அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாகவும் கவர்னரிடம் எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்ததாக பகிரங்கமாக தெரிவித்துள் ளார்.

    இதேநிலை நீடித்து கூட்டணி ஆட்சி தொடர்ந் தால் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்திக்க வேண்டியதிருக்கும். கூட்டணி தர்மத்தை மதிக்காத முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்ததாகவும் அங்காளன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    இந்த ஆடியோ புதுவை மக்களிடம் வைரலானது. மேலும் பா.ஜனதா தலைமையை சந்தித்து பேச எம்.எல்.ஏ.க்கள் நேரம் கேட்டு கடிதமும் எழுதியுள்ளனர். இதனால் புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    இது புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
    • கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா உள்ளார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவியும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரி பதவி ஆளுக்கு 2½ ஆண்டுகள் அதிகாரத்தை பகிா்ந்து அளிப்பது என்று வாய்மொழியாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் அவ்வப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி உருவாக்க வேண்டும் என்றும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையாவின் ஆதரவு மந்திரி கே.என்.ராஜண்ணா மேலும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேலும் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதாவது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். அவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என மந்திரி கே.என் ராஜண்ணா மறைமுகமாக கூறி வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில் கே.என்.ராஜண்ணாவின் பேச்சுக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி சித்தராமையா, முதல்-மந்திரி மாற்றம் பற்றி டி.கே.சிவக்குமாரின் தூண்டுதலின் பேரில் மடாதிபதி, சிலர் பேசி வருவதாக கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளித்து இருந்தார்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாரும் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி கேட்டு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பேசி வருவதை கூறியதுடன், எக்காரணம் கொண்டும் துணை முதல்-மந்திரிகளை கூடுதலாக நியமிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 190 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்துகொண்ட டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும் சில நிர்வாகிகள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசும் மந்திரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதுகுறித்து விரைவில் முடிவு செய்வதாக டி.கே.சிவக்குமாா் உறுதியளித்தார். சில மந்திரிகள் தன்னை பணிய வைத்துவிடலாம் என்று கருதி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் பணிந்து செல்பவன் நான் கிடையாது என்று டி.கே.சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

    அதனால் முதல்-மந்திரி சித்தராமையா இல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே கர்நாடக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதிசுரேஷ் கூறியதாவது:-

    கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை. கூடுதலாக 4 அல்லது 5 துணை முதல்-அமைச்சர்கள் பதவி ஏற்பதா என்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

    • ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 81 எம்எல்ஏ-க்களில் 56 பேர் ‘கோடீஸ்வரர்கள்’.
    • இந்த ஆண்டு 71 கோடீஸ்வர எம்எல்ஏ-க்களில் 28 பேர் ஜேஎம்எம், 20 பாஜக, 14 காங்கிரஸ்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் ஜேஎம்எம் பாஜகவை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 89 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களை விட இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    ஜார்கண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களில் 89 சதவீதம் பேர் 'கோடீஸ்வரர்கள்' என்றும், அவர்களில் காங்கிரஸின் ராமேஷ்வர் ஓரான் ரூ.42.20 கோடி மதிப்பிலான சொத்துக்களுடையவர் என்றும் தெரிய வந்துள்ளது.

    ஜார்கண்ட் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெற்றி பெற்ற 81 வேட்பாளர்களில் 80 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து, 2024-ல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.எல்.ஏக்கள் 'கோடீஸ்வரர்கள்' என்பதை கண்டறிந்துள்ளது. இது 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட 20% அதிகம்.

    ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 81 எம்எல்ஏ-க்களில் 56 பேர் 'கோடீஸ்வரர்கள்' என்றும், 2014-ல் 41 பேர் என்றும் அறிக்கை கூறுகிறது.

    இந்த ஆண்டு 71 கோடீஸ்வர எம்எல்ஏ-க்களில் 28 பேர் ஜேஎம்எம், 20 பாஜக, 14 காங்கிரஸ், 4 ஆர்ஜேடி, சிபிஐ (எம்எல்) லிபரேஷன் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்), ஜேடி(யு) மற்றும் ஏஜேஎஸ்யுவைச் சேர்ந்த தலா ஒருவர் எம்.எல்.ஏ.-க்கள் ஆவார்கள்.

    ஜேஎம்எம் 34 சட்டமன்ற இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 4 மற்றும் சிபிஐ (எம்எல்) லிபரேஷன் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மறுபுறம், பாஜக 21 சட்டமன்ற தொகுதிகளையும், அதன் கூட்டணியான எல்ஜேபி (ராம் விலாஸ்), ஜேடி(யு) மற்றும் ஏஜேஎஸ்யு கட்சி தலா ஒரு இடத்தை பெற்றன.

    வெற்றி பெற்ற வேட்பாளர்களில் காங்கிரஸ் லோஹர்டகா எம்எல்ஏ ராமேஷ்வர் ஓரான் மொத்த சொத்து மதிப்பு ரூ.42.20 கோடியுடன் அதிக பணக்காரர் ஆவார்.

    பாங்கி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜகவின் குஷ்வாஹா சஷி பூஷன் மேத்தா, மொத்தம் ரூ.32.15 கோடி சொத்துக்களுடன் வெற்றி பெற்ற 2-வது பணக்கார வேட்பாளராகவும், கோடா தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்ஜேடியின் சஞ்சய் பிரசாத் யாதவ், ரூ.29.59 கோடி மொத்த சொத்துக்களுடன் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    • கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்தனர்.
    • ஆட்டோ டிரைவர்களின் தற்கொலைகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் துயரமாக மாறிவிட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் கே.டி. ராமராவ் தலைமையில் ஆட்டோ டிரைவர் சீருடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

    ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அவர்கள் வந்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 நிதியுதவி மற்றும் நல வாரியம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. ஆட்டோ டிரைவர்களின் தற்கொலைகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் துயரமாக மாறிவிட்டது.

    ஆட்டோ டிரைவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

    தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்த ப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்டோ டிரைவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ஆட்டோ டிரைவர்கள் சீருடை அணிந்து வந்ததால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் பலம் 234 ஆகும்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது தி.மு.க. வசமாகி உள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.) பதவி ஏற்றதன் மூலம் சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்களின் பலம் 134 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் பலம் 234 ஆகும். இதில் சபாநாயகருடன் சேர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 133 ஆக இருந்தது. காலம் காலமாக காங்கிரஸ் வசம் இருந்த ஈரோடு கிழக்கு தொகுதியை தமிழக காங்கிரஸ் கமிட்டி இந்த முறை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்து விட்டது.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது தி.மு.க. வசமாகி உள்ளது. வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றதன் மூலம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சபாநாயகருடன் சேர்த்து 134 ஆக உயர்ந்துள்ளது.

    கட்சி வாரியாக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை வருமாறு:-

    தி.மு.க.-134, அ.தி.மு.க.-66, காங்கிரஸ்-17, பா.ம.க.-5, பா.ஜ.க.-4, விடுதலை சிறுத்தை-4, இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2.

    • விமானம் மூலம் நேபாளம் தலைநகர் காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.
    • 5-ந் தேதி பசுபதி நாதர் கோவில், கால பைரவர் கோவில்களையும், 6-ந் தேதி புத்தநாத், ஜெய் நாராயண கோவில், சந்தரகிரி மலையை பார்வையிடுகின்றனர்.

    புதுச்சேரி:

    நேபாள அரசு அங்குள்ள சட்டசபையைக்காண புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்தது.

    நேபாள அரசின் அழைப்பின் பேரில் புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் ஒரு வார கால சுற்றுலா பயணமாக நேபாளம் செல்கின்றனர். இதன்படி எம்.எல்.ஏ.க்கள் இன்று (சனிக்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கு தங்குகின்றனர்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேபாளம் தலைநகர் காத்மாண்டு சென்று, பதான் என்ற இடத்தை சுற்றி பார்க்கின்றனர்.

    3-ந் தேதி காலை விமானம் மூலம் போகரா செல்லும் எம்.எல்.ஏ.க்கள், அங்கு சட்டசபையை பார்வையிடுகின்றனர். அதன்பிறகு அங்குள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கின்றனர்.

    4-ந் தேதி போகராவில் இருந்து காத்மாண்டு திரும்புகின்றனர். மாலையில் பதான்தர்பார், சுயம்புநாதர் கோவிலை பார்வையிடுகின்றனர்.

    5-ந் தேதி பசுபதி நாதர் கோவில், கால பைரவர் கோவில்களையும், 6-ந் தேதி புத்தநாத், ஜெய் நாராயண கோவில், சந்தரகிரி மலையை பார்வையிடுகின்றனர்.

    7-ந் தேதி காத்மாண்டில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்புகின்றனர். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் நேபாளம் செல்வார்கள் என கூறப்படுகிறது.

    சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இதற்கிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க சட்டசபை செயலகத்திடம் அ.தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 9 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பத்விப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்களது பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இதற்கிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோர் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்க சட்டசபை செயலகத்திடம் தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.



    இந்நிலையில், தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். சபாநாயகர் தனபால் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து தற்போது சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக, அண்ணா அறிவாலயம் சென்ற 13 எம்.எல்.ஏ.க்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  
    பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு பேரணியாக சென்றார்.



    அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்டு அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் வெற்றி கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்து உள்ளார். #Siddaramaiah

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை விலைக்கு வாங்க பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக மிக உயர்ந்த பரிசை அவர்களுக்கு தர பா.ஜனதா காத்திருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    கடந்த முறை நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் கூட்டத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கி ஹோளி, எம்.எல்.ஏ.க்கள் உமேஷ் ஜாதவ், நாகேந்திரா, மகேஷ் கும்டஹள்ளி ஆகிய 4 பேர் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் மும்பையில் பா.ஜனதா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இவர்களிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் சார்பில் 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதனால் அவர்களை தமிழக அரசியல் பாணியில் தகுதிநீக்கம் செய்ய காங்கிரசார் முடிவு செய்து உள்ளனர்.


    காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு 4 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க அவர்கள் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மட்டுமல்ல பி.சி.பாட்டில், நாராயணகவுடா உள்ளிட்ட மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

    நேற்று நடந்த சட்டசபை கூட்டத்திற்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் வரவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் விதான் சவுதா வளாகத்தில் இன்று நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்து உள்ளார். இதன்படி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் இன்று நடைபெறும் கூட்டத்தையும் புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி கூட்டத்தை புறக்கணித்தால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் உணவு கிடங்கு வாரிய தலைவராக பதவி வகித்து வந்தார். அவரது வாரிய தலைவர் பதவியை முதல் மந்திரி குமாரசாமி பறித்து உள்ளார். புதிய வாரிய தலைவராக பிரதாப் கவுடா பாட்டில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    பெரும்பான்மை இல்லாத குமாரசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக நடந்த சட்டசபை கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இன்று சட்டசபையில் பட்ஜெட்டை முதல் மந்திரி குமாரசாமி தாக்கல் செய்கிறார். அப்போதும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தர்ணா நடத்தி ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக பா.ஜனதா மீது முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

    சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் பா.ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபை சுமூகமாக நடைபெற அவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் நினைத்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரலாம். நாங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதாவின் தர்ணா போராட்டத்திற்கு சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி அரசுக்கு பெரும்பாண்மை இல்லை என்று பா.ஜனதா கூறி வருகிறது. அப்படி கூறும் அவர்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவர வேண்டியது தானே. அவர்களை கொண்டு வராமல் தடுப்பது யார்?

    இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah

    ×