என் மலர்
நீங்கள் தேடியது "Mohammad Azharuddin"
- புனேவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கம் திருடுபோயுள்ளது.
- போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.
புனே மாவட்டம் லோனாவாலாவில் உள்ள அவரது பங்களாவில் இருந்து ரூ.50,000 ரொக்கமும், ரூ.7,000 மதிப்புள்ள டிவியும் திருடு போயிருப்பதாக அசாருதீன் புகார் அளித்துள்ளார். மேலும், கொள்ளையடித்தவர்கள் வீட்டையும் சேதப்படுத்தியதாக அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 'VVS லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என்பது முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- அப்போது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் இருந்தார்.
ஐதராபாத் உப்பல் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு, முன்னாள் வீரர் முகமது அசாருதின் பெயர் சூட்டப்பட்டதை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் குறைகேட்பு அதிகாரி.ரத்து செய்தார்
'VVS லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என இருந்ததை, 2019ம் ஆண்டில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் தலைமையிலான நிர்வாகக் குழு, 'முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்தது
இது அதிகார துஷ்பிரயோகம் என அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குறைகேட்பு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
- கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் விளையாட்டின் மூலம் ஏற்கனவே பிரபலமானவர்.
- தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 9 தொகுதிகளில் அசாருதீன் பிரசாரம் செய்ய உள்ளார்.
திருப்பதி:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வெளி மாநிலங்களில் இருந்து பிரபலங்களை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, கோமதி ரெட்டி ராஜகோபால ரெட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரசார பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு, அருணாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் விளையாட்டின் மூலம் ஏற்கனவே பிரபலமானவர்.
இவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 9 தொகுதிகளில் அசாருதீன் பிரசாரம் செய்ய உள்ளார்.
அவர் விரைவில் தமிழகத்திற்கு வருவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- முகமது அசாருதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார்.
- அப்போது 20 கோடி ரூபாய் அளவில் நிதியை தவறாக பயன்படுத்தியமாக வழக்கு.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான முகமது அசாருதீனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான முகமது அசாருதீன் மீது, அவரது காலத்தில் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய முதல் சம்மன் இதுவாகும். இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவித்துள்ளது.
ஐதாராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்திற்கு டீசல் ஜெனரேட்டர்கள், தீயணைப்பு சிஸ்டம்கள் உள்ளிட்டவைகள் வாங்கியதில் 20 கோடி ரூபாய் நிதியை தவறான முறையில் பயன்படுத்தியதாக வழகட்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் அணடு நவம்பர் மாதம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தெலுங்கானாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 இடத்தில் சோதனை நடத்தினர். இதில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றிய தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் வீடுகள் அடங்கும்.
அப்போது கைப்பற்ற ஆவணங்கள் மூல் பண மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இவரது பதவிக்காலத்தில் நிதி பரிமாற்றம் தொடர்பாக தங்களுடைய பணி என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த சம்மனில் தெரிவித்துள்ளது.
119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். #MohammadAzharuddin #TelanganaCongressCommittee

லோகேஷ் ராகுல் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் அணியில் நீண்ட காலம் விளையாடுவார். அணியில் நிரந்திரமாக இடம் பெற அவருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. #ENGvIND #1000thTest #Azharuddin
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் 2014-ம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தானின் டோங்-சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலத்தின் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அசாருதீன் தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செகந்திராபாத் தொகுதி மக்களுக்கு பணி செய்ய விரும்புகிறேன். இந்த தொகுதியில் நான் கடினமாக உழைத்து வருகிறேன். இங்குள்ள ஏராளமான கிராமங்களுக்கு சென்று விவசாயிகள் மற்றும் பிற மக்களிடம் பேசினேன். அப்போது அவர்கள், தங்கள் தொகுதியில் நான் போட்டியிடுவதை வரவேற்றனர்.
இந்த தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைமையிடமும், மாநில பொறுப்பாளரிடமும் எனது விருப்பத்தை தெரிவித்துள்ளேன். நான் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவதையே கட்சியும் விரும்புவதாக நினைக்கிறேன். எனினும் இங்கு நான் கேப்டன் இல்லை. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது கட்சிதான்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த முறை போட்டியிட்ட போதும் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன். ஆனால் எப்போதும் உங்களால் பாதுகாப்பாக விளையாட முடியாது. எப்போதும் பாதுகாப்பான விளையாட்டை விரும்பும் நபர் நான் இல்லை.
இவ்வாறு அசாருதீன் கூறினார்.
முன்னதாக, தெலுங்கானாவில் இருந்து பாராளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலில் அசாருதீன் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநிலப்பிரிவு அவருக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது. #MohammadAzharuddin #IndianCricketCaptain #tamilnews
அதேபோல் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி யோ-யோ டெஸ்ட் தோல்வியால் அணியில் இடம்பெறவில்லை.
இதனால் யோ-யோ டெஸ்ட் மீது முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் வீரர்கள் தேர்விற்கு முன்பே யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரையில் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.
ஆனால், அணியில் தேர்வானபின், யோ-யோ டெஸ்டால் அவரது வாய்ப்பு பறிபோகியுள்ளது. அணி தேர்வுக்கு முன் யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும். தற்போதுள்ள நிலை எல்லோருக்கும் தர்மசங்கடமாக உள்ளது’’ என்றார்.