என் மலர்
நீங்கள் தேடியது "mudslides"
- எத்தியோப்பியாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
- இதில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அடிஸ் அபாபா:
தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதுவரை 5க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
- சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டன.
இதற்கிடையே தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி மண்ணில் புதைந்தனர். மீட்புக்குழு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பலர் பலியாகி இருப்பது தெரிந்தது. அவர்களது உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.
இதில் 157 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நடந்த மீட்புப்பணியில் மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 229-ஆக உயர்ந்துள்ளது. சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- எத்தியோப்பியாவில் பெய்த கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
- இதில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அடிஸ் அபாபா:
தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது. காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை 500-ஐ கடக்கலாம் என ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
- 63 மலை கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
- கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள், முதியோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் நேற்று அதிகாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக மலைகளில் ஆங்காங்கே சிறுசிறு அருவிகள் உருவாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரின் காரணமாக சித்தேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில், சூரியக்கடை பிரிவு சாலை அருகே மூன்றாவது முறையாக மண் சரிவு ஏற்பட்டு சூரியக்கடை சித்தேரி பேரரூபுதூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 63 மலை கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக இவ்வழியாக கார் மற்றும் பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள், முதியோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் சேதமான மண் சரிவை சீரமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
