என் மலர்
நீங்கள் தேடியது "Mumbai Indians Women"
- ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஹெய்லி மேத்யூஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் தடுமாறினர்.
இதனால் ஹெய்லி மேத்யூஸ் 3, யாஸ்திகா பாட்டியா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடி கவுர் அரை சதம் அடித்து அசத்தினார். மந்தமாக விளையாடிய நாட் சிவெர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அமெலியா கெர் 2, சஜனா 0 என அடுத்தடுத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கவுர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனஸ்சென், நல்லபுரெட்டி சரணி, மாரிசேன் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
- டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் முடிவில் மும்பை, குஜராத், டெல்லி ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதில் டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்றில் குஜராத்தை வீழ்த்தி மும்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
- மும்பை-குஜராத் ஆகிய இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது.
மும்பை:
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (தலா 10 புள்ளிகள்), குஜராத் ஜெயன்ட்ஸ் (8) ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (6), உ.பி. வாரியர்ஸ் (6) ஆகியவை வெளியேற்றப்பட்டன.
டெல்லி, மும்பை அணிகளில் ரன்ரேட் அடிப்படையில் டெல்லி முதல் இடத்தை பிடித்தது. அந்த அணி 15-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
இறுதிப்போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது? என்பது நாளை தெரியும். மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லியை சந்திக்கும். தோற்கும் அணி வெளியேறும்.
இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டங்களில் மும்பையே வெற்றி பெற்றது. வதோதராவில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் 9 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் நம்பிக்கையுடன் விளையாடும்.
அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் இறுதிப் போட் டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மும்பை அணி 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பார்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53, ரிச்சா கோஷ் 36, பெர்ரி 49 ரன்கள் அடித்துள்ளனர்.

இதையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை களமிறங்கியது.
இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டி ஆர்சிபி அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
- காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை.
- பெங்களூரு அணி 2-வது தோல்வியை சந்தித்தது.
பெங்களூரு:
5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் மோதியது. காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. அவருக்கு பதிலாக நாட் சிவெர் கேப்டன் பொறுப்பை கவனித்தார்.
'டாஸ்' ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 9 ரன்னிலும், அடுத்து வந்த சப்னினி மேக்னா 11 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீராங்கனை சோபி டெவின் 9 ரன்னிலும், ரிச்சா கோஷ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 42 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
4-வது வீராங்கனையாக களம் கண்ட எலிசி பெர்ரி நிலைத்து நின்று ஆடி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தார். அவருடன் இணைந்த சோபி மொலினிஸ் 12 ரன்னிலும், ஜார்ஜியா வார்ஹம் 27 ரன்னிலும் வெளியேறினர். 20 ஓவரில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. எலிசி பெர்ரி 44 ரன்களுடனும் (38 பந்து, 5 பவுண்டரி), ஸ்ரேயங்கா பட்டீல் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் நாட் சிவெர், பூஜா வஸ்ட்ராகர் தலா 2 விக்கெட்டும், இஸ்சி வோங், சாய்கா இசாக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகள் யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் அளித்தனர். ஸ்கோர் 45 ரன்னை எட்டிய போது (3.5 ஓவரில்) யாஸ்திகா பாட்டியா 31 ரன்னில் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) சோபி டெவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ்சிடம் சிக்கினார். அடுத்து ஹீலி மேத்யூஸ் 26 ரன்னிலும் (21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), நாட் சிவெர் 27 ரன்னிலும் (25 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர்.
15.1 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமெலி கெர் 40 ரன்களுடனும் (24 பந்து, 7 பவுண்டரி), பூஜா வஸ்ட்ராகர் 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 3-வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு அணி 2-வது தோல்வியை சந்தித்தது. மும்பை வீராங்கனை அமெலி கெர் ஆட்டநாயகி விருது பெற்றார்.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
- 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.
- குஜராத்துக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 4 ஆட்டங்களிலும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத்தின் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. குஜராத்துக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 4 ஆட்டங்களிலும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32, காஷ்வி கௌதம் 20 ரன்கள் எடுத்தனர்.
- மும்பை அணி தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டும் அமெலியா கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத்தின் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32, காஷ்வி கௌதம் 20 ரன்கள் எடுத்தனர். அவர்களை தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணி தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டும் அமெலியா கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது.
- டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பெங்களூரு:
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் ஆகியோர் களமிறங்கினர். யாஸ்திகா பாட்டியா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மேத்யூஸ் 22 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி நாட் ஸ்கைவர்-பிரண்ட் 18, ஹர்மன்ப்ரீத் கவுர் 22, அமெலியா கெர் 17, சஜீவன் சஜனா 5, கமலினி 1, சமஸ்கிருத குப்தா 3 என வெளியேறினார்.
இறுதியில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் - அமெலியா கெர் களமிறங்கினர். இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களில் மேத்யூஸ் 27 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தது. அமன்ஜோத் கவுர் 27 ரன்களிலும், சஜீவன் சஜனா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்க உள்ளது.
- மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத் அணிக்கு வலு சேர்த்தனர்.
- மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் - அமெலியா கெர் களமிறங்கினர். இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களில் மேத்யூஸ் 27 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்கி உள்ளது.
இறுதியில் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிபெற 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் கன்வர் 10 ரன்களிலும், சிம்ரன் ஷேக் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதன்மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்து.