என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
மகளிர் பிரீமியர் லீக்- 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி
By
மாலை மலர்11 March 2025 11:09 PM IST (Updated: 11 March 2025 11:28 PM IST)

- டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மும்பை அணி 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பார்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53, ரிச்சா கோஷ் 36, பெர்ரி 49 ரன்கள் அடித்துள்ளனர்.

இதையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை களமிறங்கியது.
இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டி ஆர்சிபி அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
Next Story
×
X