என் மலர்
நீங்கள் தேடியது "Murderer"
- முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதி வைத்துள்ளார்
- கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்
பஞ்சாபில் கடந்த 18 மாதங்களுக்குள் 11 ஆண்களை கொன்ற சீரியல் கில்லர் கொலையாளி போலீசில் பிடிபட்டுள்ளார்.
ஹோஷியார்பூரில் உள்ள கர்ஷங்கரின் சௌரா கிராமத்தில் வசித்து வருபவர் 33 வயதான ராம் சரூப். போலீஸ் கூற்றுப்படி கொலை செய்யப்பட்ட அனைவருக்கும் தனது வாகனத்தில் லிப்ட் கொடுத்து அழைத்து சென்று அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, அதன்பின் அவர்களை கொலை செய்து கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், துணியால் அவர்களின் கழுத்தை நெரித்ததாகவும்,சிலருக்குத் தலையில் காயங்கள் இருந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
அவ்வாறு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதி வைத்துள்ளார் ராம் சரூப்.
ஆகஸ்ட் 18 அன்று மோத்ராவில் உள்ள சுங்கச்சாவடி அருகே டீ மற்றும் தண்ணீர் விற்கும் 37 வயது நபரை கொன்ற வழக்கில் ரூப்நகர் மாவட்டத்தில் வைத்து நேற்று [செவ்வாய்க்கிழமை] ராம் சரூப் கைது செய்யப்பட்டார். அதன்பின் நடந்த விசாரணையில்தான் அவர் மேலும் 10 பேரை கொலை செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.
இவற்றில் 5 கொலை வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18 அன்று டோல் பிளாசா மோத்ராவில் டீ மற்றும் தண்ணீர் பரிமாறப் பழகிய 37 வயது நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் சரூப் மேலும் 10 பேரைக் கொன்றது தெரியவந்தது. இவற்றில் ஐந்து வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹோஷியார்பூர் மற்றும் ஃபதேகர் மாவட்டங்களில் இந்த கொலைகள் நடந்துள்ளன.
ஏப்ரல் 5 ஆம் தேதி 34 வயதான டிராக்டர் பழுதுபார்ப்பவரின் கொலை மற்றும் ஜனவரி 24 அன்று காரில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் கொலை ஆகியவற்றையும் ராம் சரூப் தான் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த ராம் சரூப் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிபோதையில் தான் குற்றங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்ட நிலையில் கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
ராம் சரூப் -க்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் ஓரினச்சேர்க்கை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குடும்பத்தினரால் கைவிடப்பட்டுள்ளார்.

- வேப்பூர் அருகே மணிமுக்தாற்றின் கரையோரத்தில் மூதாட்டியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
- நல்லம்மாள் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார்.
கடலூர்
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் அருகே கடந்த 18 ம் தேதி காலை மணிமுக்தாற்றின் கரையோரத்தில் 65வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் பிரேதம் மர்மமான முறையில் கிடந்தது . இதுகுறித்து தகவலறிந்து வந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் காவ்யா தலைமையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் திட்டக்குடி புதுதெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் ராஜேந்திரன்(61). இவரது மனைவி மணிமேகலை அகரம்சீகூரில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்து வந்தார் அதே அங்கன்வாடியில் சமையலராக பணிபுரிந்து வந்தவர் நல்லம்மாள் (66). மணிமேகலையும் நல்லமாளும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற பின் நல்லம்மாள் ராஜேந்திரனின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். ராஜேந்திரன் மனைவி மணிமேகலை கடந்த ஒன்றை வருடமாக உடல்நிலை சரியில்லாமல் வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். ராஜேந்திரன் மட்டும் தனியாக வீட்டில் சமைத்து சாப்பிட்டு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் தன்னை திருப்பதிக்கு அழைத்துச் செல்லுமாறு நல்லம்மாள் ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார் அவர் திருப்பதிக்கு அழைத்துச் செல்லவில்லை. தனக்கு கடன்சுமை அதிகமானதால் ராஜேந்திரன் நல்லம்மாளிடம் கடன் கேட்டுள்ளார் நல்லம்மாள் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார். நல்லம்மாலிடம் நகைகளை வைத்து கொண்டு தர மறுத்ததையறிந்து நல்லம்மாவை எப்படியாவது பணம் நகை ஆகியவற்றை எடுத்து தனது கடனை அடைக்க ராஜேந்திரன் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நல்லம்மாள் தனக்கு மனசு சரியில்லை நல்லூரில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டுமென ராஜேந்திரனிடம் கூறியுள்ளார் நல்லம்மாவை கொலை செய்வதற்கு இதை சரியான சந்தர்ப்பமாக நினைத்துக் கொண்டு ராஜேந்திரன் கடந்த 17 -ந் தேதி மாலை நல்லம்மாளை திட்டக்குடியில் இருந்து நல்லூர் வில்வனேஸ்வரர் கோயிலுக்கு ராஜேந்திரன் நல்லம்மாளை அழைத்துச் சென்றுள்ளார்.
கோயில் பூட்டி இருந்ததால் கோயில் வெளியே இருந்து சாமி கும்பிட்டனர் நல்லம்மாள் சிறுநீர் கழிக்க கோயிலின் மேற்கு பக்கம் நோக்கி சென்றுள்ளார் அவரை பின் தொடர்ந்து சென்ற ராஜேந்திரன் நல்லமாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நல்லம்மாள் சுயநினைவு இழந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்ததை தெரிந்த பின் அவர் அணிந்திருந்த கம்மல், மோதிரம், ஜெயின் நகைகளை எடுத்துக்கொண்டு நல்லம்மாவின் உடலை அங்கிருந்த புதரில் போட்டுவிட்டு ராஜேந்திரன் தப்பி திட்டக்குடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வேப்பூர் போலீசார் மூதாட்டியை ஆதாயம் தேடி கொலை செய்த ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.