என் மலர்
நீங்கள் தேடியது "Nalini"
- முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாக நளினியின் தாயார் பத்மா சிறைத்துறை தலைவருக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்துள்ளார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் விடுப்பு வழங்க கோரி அவரது மனைவி நளினியும், மாமியார் பத்மாவும் சிறைத் துறைக்கு மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவை ஜெயில் சூப்பிரண்டு கடந்த மாதம் 28-ம் தேதி நிராகரித்திருந்தார். முருகன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவருக்கு பரோல் விடுப்பு வழங்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாக நளினியின் தாயார் பத்மா சிறைத்துறை தலைவருக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பரோலில் உள்ள எனது மகள் நளினிக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கு பல் தொடர்பாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனக்கு வயது மூப்பு காரணமாக நளியை பராமரிக்க முடியவில்லை. முருகன் இதுவரை ஒரு நாள் கூட சிறை விடுப்பில் வந்தது இல்லை. மேலும் முருகன் மீது எந்த வழக்கும் எந்த கோர்ட்டிலும் நிலுவையில் இல்லை.
ஆகவே சிறைக் கண்காணிப்பாளர் கடந்த மாதம் 28-ம் தேதி தனது மனுவை நிராகரித்து உத்தரவிட்டதை மறுபரிசீலனை செய்து தனது மகளின் கணவரான முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் விடுப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- முருகன் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார்
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரோலில் வெளியில் வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் இதே வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முருகனின் மருத்துவ சிகிச்சைக்காக 6 நாட்கள் அவசர விடுப்பாக கருதி பரோல் வழங்க வேண்டும் என நளினியும், அவரது தாயார் பத்மாவும் சிறைத்துறை நிர்வாகத்துக்கு மனு அளித்திருந்தனர்.
அந்த மனுக்களை பரிசீலனை செய்த சிறைத்துறை சூப்பிரண்டு அப்துல்ரகுமான், முருகன் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி, அவர் விடுப்புக்கு தகுதி பெறவில்லை என்று கூறி நளினியின் மனுவை நிராகரித்துள்ளார்.
இந்த படத்தில் அவரது பேரன் கபிலேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு எதிர்மறை நாயகனாக அவரது தம்பி மகன் பால சபரீஸ்வரன் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - சந்துரு, இசை - மகேந்திரன், தயாரிப்பு - வீர ஸ்ரீ சந்தன கருப்பராயன் புரொடக்ஷன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஈரோடு செளந்தர்.

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது,
10-ஆம் வகுப்பு பள்ளிக்கூட கதை என்பதால் இந்த கதைக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது பேரன் சரியாக இருப்பான் என்பதால் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்.
மாணவர்களின் எதிர்காலம் என்பது 10-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு கால கட்டம் தான். அதை மட்டும் மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட்டால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடம் மாறினாலும் அவர்கள் வாழ்க்கை திசை மாறி விடும் என்கிற கருத்தை சொல்கிற படமாக இது உருவாகிறது என்றார். படப்பிடிப்பு 4ம் தேதி ஈரோட்டில் துவங்கிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் கைதிகளாக சிறைகளில் உள்ளனர். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்ககோரி தமிழக கவர்னருக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்படாமல் அப்படியே உள்ளது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். அதில், ‘எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து ஆவணங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியாக மனு கொடுத்தோம். அந்த மனுவை விரைவாக பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் இன்று விசாரித்தனர்.
மனுதாரர் சார்பில் வக்கீல் புகழேந்தி ஆஜராகி வாதிட்டார். மனு மீதான விசாரணையை வருகிற 27ந்தேதி (சனிக்கிழமைக்கு) தள்ளி வைத்து உத்தரவிட்டனர். #RajivMurderCase
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலைக்காக போராடி வருகின்றனர். இதுவரை விடுதலை கிடைக்காததால் முருகன் கடந்த 7-ந் தேதி முதல் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கணவருக்கு ஆதரவாக நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
சிறை விதிகளை அவர்கள் மீறியதால், பார்வையாளர்களை சந்திப்பது உள்பட சிறை சலுகைகள் அவர்களுக்கு ரத்து செய்யப்பட்டது. தொடர் உண்ணாவிரதம் அவர்களை சோர்வடையச் செய்தது. டாக்டர்கள், ஜெயில் அதிகாரிகள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வந்தனர். அவ்வப்போது ஜெயில் அதிகாரிகளும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நளினியை சந்திக்க அவரது தாயார் பத்மா வேலூர் சிறைக்கு வந்தார். நளினி, முருகனுக்கு சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் நளினியை அவர் சந்திக்க முடியவில்லை. அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இதையடுத்து நேற்று மாலை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, முருகன் மற்றும் நளினியிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார். சிறைக்குள் உள்ள கோவில் பூட்டை சோதனை என்ற பெயரில் காவலர்கள் உடைக்கக்கூடாது என்ற முருகனின் கோரிக்கையையும், பரோல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நளினியின் கோரிக்கையையும் ஏற்கப்பட்டதாக தெரிகிறது.
அதன்பின் முருகன் உண்ணாவிரதத்தை இளநீர் அருந்தி கைவிட்டார். அதைத்தொடர்ந்து நளினியும் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினி-முருகன் சந்தித்து வருகின்றனர். உண்ணாவிரதத்தை நேற்று கைவிட்ட நிலையில் இன்று நளினி, முருகன் சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இது தற்காலிக நிறுத்தம் மீண்டும் அவர்கள் சந்திப்பு நடைபெறும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறை விதிகளை மீறி முருகன்-நளினியும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் நளினியின் தாய் பத்மா (80). இன்று நளினியை சந்திக்க வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு வந்தார். அப்போது ஜெயில் அதிகாரிகள் நளினியை சந்திக்க தடை இருப்பதால் அவரை பார்க்க முடியாது என்று கூறினர்.
ஜெயில் அதிகாரிகள் நளினியை பார்க்க அனுமதிக்காததால் பத்மா ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதேபோல் முருகனை பார்க்கவும் ஜெயிலுக்கு சென்ற அவர் அங்கும் அனுமதியில்லாததால் திரும்பி சென்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.
7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 6-வது நாளாக அவர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.
சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகன் ஆகியோரை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று நளினியின் தாயார் பத்மாவதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நளினி தாயார் பத்மாவதி தாக்கல் செய்த மனு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகன் ஆகியோரை காப்பாற்ற கோரி தமிழக அரசு, டிஜிபி, சிறைத்துறையிடம் நளினி தயார் பத்மா ஏற்கனவே மனு அளித்துள்ளார். #nalinimurugan #rajivgandhi #vellorejail
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
விடுதலை செய்யக்கோரி முருகன் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நளினி 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரும் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து விட்டனர்.
ஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தால் நளினியின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சிறை விதிகளின்படி கைதி உணவு உண்ணாமல் இருத்தல் கூடாது. அவ்வாறு உண்ணாமல் இருந்தால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்படும். அதன்படி முருகன், நளினி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்களுக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இனி தனது வக்கீலை தவிர பிற பார்வையாளர்கள் உறவினர்களை சந்திக்க முடியாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒருமுறை நளினி- முருகன் சந்தித்து பேசுவதையும் ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை குற்றவாளிகளை தமிழக அரசே விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ராஜிவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை அவசர கூட்டம் நாளை நடக்கிறது. இதில் 7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு எடுக்கிறார்கள்.
வேலூர் ஜெயிலில் உள்ள நளினி அவரது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நேற்று வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் நளினி அவரது கணவர் முருகன் சந்திப்பு இன்று காலை நடந்தது. இருவரும் விடுதலை தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் அவர்கள் மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது.
காலை 8.5 மணி முதல் 9.5 மணி வரை சந்திப்பு நடந்தது. காட்பாடி டி.எஸ்.பி. அலெக்ஸ் தலைமையிலான போலீசார் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். சந்திப்புக்கு பின் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை அவரது வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு நளினி மற்றும் முருகன் உள்ளிட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், முதல்வர் பழனிசாமி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் நளினி மற்றும் முருகன் நன்றி தெரிவித்தனர்.
கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப தங்களை விரைந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக உள்துறை செயலருக்கும், சாந்தன் தமிழக முருல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.#RajivGandhiCase #Nalini

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பதுதான் கலைஞர் ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த கழகத்தின் நிலைப்பாடாகும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்திருக்கும் 161 விதியின் படி உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #RajivCaseConvicts #DMK #MKStalin