என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal news"

    • பள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • மேம்பாலம் கட்டுமான பணியை தரமாகவும், விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிப்பாளையத்தில் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து 3 கீ.மீட்டர் துாரத்திற்கு 98 பில்லருடன் உயர் மட்ட மேம்பாலம், மற்றும் சாலை விரிவாக்கம் ரூ.200 கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தற்போது மேம்பாலம் பணிகள் 40 சதவீதம் முடிந்து விட்டது. பில்லர் மேற்பரப்பில் நேற்று கான்கீரிட் தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நெடுஞ்சாலைதுறை சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் நேரில் ஆய்வு செய்தார். பணியை தரமாக நடக்க வேண்டும் எனவும், விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    அப்போது, திருச்செங்கோடு உதவி பொறியாளர் கபில் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

    • பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகருக்கு பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதேபோல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர்,கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநா யகர், பேட்டை விநாயகர், பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்க ளில் சதுர்த்தியை முன்னி ட்டு சிறப்பு அபி ஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூரை அடுத்த வாழவந்தி அருகே தீயில் காயம் அடைந்த இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
    • சம்பவத்தன்று இளம்பெண் அடுப்பை பற்ற வைக்க மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ பிடித்ததால் கருகி பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன். கூலித் தொழி லாளி. இவரது மனைவி நீலாவதி (வயது 34). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள்ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    நீலாவதி கடந்த 17-ம் தேதி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடுப்பு எரியாததால் மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென தீ குபுவென வெளியேறி நீலாவதி அணிந்திருந்த துணியில் பிடித்தது.

    தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. அவருடைய அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீலாவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்தி அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி பெண் பலியானர்.
    • விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்திவேலூர்,

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌஸ். இவரது மனைவி சசிகலா என்கிற மும்தாஜ் (வயது 64). இவர் நேற்று காலை பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சசிகலா என்கிற மும்தாஜ் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து பார்த்து இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் வேல்முருகன்(வயது 40). இவர் அப்பகுதியில்  காளான் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்  கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரத்தில் வந்து பார்த்த போது அதை காணவில்லை. 

    இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில்  வாகனத்தை திருடியவர், வாகனத்தை திரும்ப ஒப்படைக்கும் எண்ணத்தில் காவேரி நகர் பகுதியில் வந்தார்.

    இதையடுத்து வேல்முருகனின்  நண்பர்கள் அந்த நபரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வாகனத்தை திருடிய நபர் குளத்துக்காடு பகுதியை சேர்ந்த முருகன்(52) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து, திருடப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
    பரமத்தி வேலூர் பகுதிகளில் தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கபிலர்மலை, பரமத்தி, கந்தம்பாளையம், மணியனூர், நல்லூர், சோழசிராமணி, பெருங்குறிஞ்சி, ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், அண்ணாநகர், செல்லப்பம்பாளையம், கபிலக் குறிச்சி, கவுண்டம் பாளையம், சிறுநல்லி கோவில், கொத்தமங்கலம், சுள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.

    தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்காயைப் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கைகளை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். 

    வாங்கிய தேங்காய் சிரட்டைகளை தேங்காய்சிரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பலர் தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டியல், பொம்மைகள் என பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ 8-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்தார்.
    பரமத்திவேலூர்,:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே எறையம்பட்டி ஆதிதிராவிடர் தெரு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர் .இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆகாத 2 மகள்கள் வீட்டில் இருந்து வருகின்றனர். 

    இந்நிலையில் பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இவர் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். 

    இந்நிலையில் பழனிசாமி நேற்று  வீட்டிலிருந்த  மருந்தை எடுத்து குடித்து விட்டார். தனது மகளுக்கு போன் மூலம் அவரே தகவல் சொன்னதால் மகள்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல் மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.100யை தொட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு,  ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை அதிகரித்து விற்றது.  பின்னர் படிப்படியாக குறைந்து மீண்டும் 10 ரூபாய்க்கு வந்தது. விலை வீழ்ச்சியால் செடியில் பறிக்காமல் விடப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில் தக்காளி விளைச்சல்  குறைவு காரணமாக சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து காரணமாக விலை அதிகரித்துள்ளது. 

    தரமான ஒரு கிலோ தக்காளி பழம், தற்போதைய  நிலையில் சில்லரை மார்க்கெட்டில் 100 ரூபாயினை எட்டி உள்ளது. மொத்த மார்க்கெட்டிலேயே 80 ரூபாயினை கடந்து விட்டது. இரண்டாம் ரக தக்காளி கிலோ 85 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    வைகாசி மாதம் பிறந்து விட்டதால் அத்தனை வகை காய்கறிகளின் தேவைகளும் அதிகரித்துள்ளன. இதனால் சராசரியாக எல்லா காய்கறிகளின் விலைகளும் கடந்த மாதத்தை விட இந்த மாதம் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    பெட்ரோல், டீசல் கலால் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    அகில இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளருமான சண்முகப்பா பரமத்தி–வேலூரில் நிருபர்களிடம்  கூறியதாவது:

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தால் தான் லாரி தொழில் இலாபகரமான நடத்த முடியும்.

    டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததால் அண்டை மாநிலங்களுக்கு சென்று சரக்கு வாகனங்கள் எரிபொருளை பிடித்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கலாவதியான சுங்சாவடிகளை அகற்ற வேண்டும்.

    பழைய மற்றும் புதிய வாகனங்களுக்கு ஆயுள் வரி 6 சதவீகிதம் மட்டுமே வசூலித்தால் அரசுக்கு  வருவாய் அதிகரிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் டீசல் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட தென்மாநிலங்களில் விலை குறைக்கபடாதது அதிர்ச்சியை அளிக்கிறது.

    சரக்கு வாகனங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதன் மூலம் ஒளிவு மறைவின்றி சரக்கு எடுத்து செல்லப்படுவதால் ஆர்.டி.ஒ செக் போஸ்ட்களை அகற்ற வேண்டும்.கொரோனா காலத்திலும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

    லாரி உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் தமிழக முதல்வரிடம் எடுத்து கூறி சுமூக தீர்வை ஏன்படுத்தி தருவார் என எதிர்பார்க்கிறோம்.

    மத்திய,மாநில அரசுகள் வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை  குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில்  வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அனல் வீசி வருகிறது. இதனால் மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கோடைகாலம் தொடங்கி விட்டாலே மக்கள் வெயி–லின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக உடலுக்கு இதமான குளிர்ச்சி தரும் கனிகளான தர்ப்பூசணி, நுங்கு, இளநீர், மற்றும் வெள்ளரிக்காய், மோர் போன்றவற்றை நாடத் தொடங்குவது வழக்கம்.

    அதன்படி குமார–பாளையம் நகரின் பிரதான வீதிகளில் தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவை மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களின் முதல் தேர்வாக நுங்கு உள்ளது. நுங்கு சுவையானது மட்டுமல்லாமல் அதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது.

    வெயில் காலத்தில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தைக்  கொண்டுள்ளது நுங்கு. அதுமட்டுமின்றி உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படு–வதற்கு பெரிதும் உதவியாக நுங்கு இருக்கிறது. நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.

     இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவ–தோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. இதனால் தற்போது நுங்கு வியாபாரம் சற்று அதிகரித்து உள்ளது. சாலையோரத்தில் சிறு சிறு கடைகள் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். நுங்கு 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் மற்றும் பூ மிதி திருவிழா கம்பம் நடுதலுடன் கடந்த 8-ந் தேதி‌ தொடங்கியது. 

    விழாவை தொடர்ந்து 14-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    15-ந் தேதி மறு காப்பு கட்டுதலும்,16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிங்கம்,காமதேனு, அன்னம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன் தினம்  வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று மாலை திருத்தேர்  முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்ந்தது.

    இன்று மாலை பூமிதி விழாவும், நாளை புதன்கிழமை பொங்கல், மாவிளக்கு பூஜையும்,நாளை மறுநாள் வியாழக்கிழமை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடலும், 28-ந் தேதி சனிக்கிழமை இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
    மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பள்ளிப்பாளையம்

    பள்ளிப்பாளையம் காவிரி ஆர்.எஸ். புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 39). ஈரோட்டில் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்திருந்தார். 

    இவருடைய மனைவி மேகலா (35). இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் ஒரு மகன் இறந்து விட்டான். இதனால் நடராஜன் மன வேதனையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரோட்டில் உள்ள மெக்கானிக் கடையை காலி செய்து விட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மது குடித்து வந்தார். இதற்கிடையே கடந்த 17-ந் தேதி மேகலா வேலை விஷயமாக ஈரோடுக்கு சென்று விட்டார். 

    அப்போது வீட்டில் இருந்த நடராஜன் விஷம் குடித்து விட்டார். இதையடுத்து  அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். 

    அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இறந்தார். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×