என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Nanguneri Student"
- எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்கத்தின் நெல்லை மாவட்ட கிளை சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
நெல்லை:
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டித்து மத்திய- மாநில அரசின் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்கம் நெல்லை மாவட்ட கிளை சார்பில் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோபாலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்கள் மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும், கலவரத்துக்கு துணை போகும் மாநில அரசை உடனடியாக கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிராம், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், பகுஜன் சமாஜ் தேவேந்திரன், முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேகர், தென்காசி மாவட்ட தலைவர் முருகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சக மாணவர்களால் தாக்கப் பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரை , அவரது சகோதரி சந்திரா செல்விக்கு நெல்லை பல்நோக்கு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஒரே போலீஸ் நிலையங்களில் 5 முதல் 10 வருடங்கள் வரை பணிபுரியும் உளவு பிரிவு போலீசார் மற்றும் மற்ற போலீசார்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஜான் பாண்டியன் கூறினார்.
நெல்லை:
நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப் பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்விக்கு நெல்லை பல்நோக்கு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் 2 பேரையும் இன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டி யன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜான்பாண்டியன் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
பள்ளி மாணவர் சின்னத் துரை மீது ஜாதி ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஒரு சில குக்கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
இதனை காவல்துறை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தற்போது மாணவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி கால கட்டங்களிலேயே மாணவர்கள் இடையே இது போன்ற ஜாதி மோதல், வன்மம் போன்றவை ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஒரு சில ஆசிரியர்களும் துணை போகிறார்கள். அவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் ஜாதி கயிறு கட்டக்கூடாது என்பதை பள்ளி நிர்வாகம் உன்னிப் பாக கவனிக்க வேண்டும். பள்ளி மாணவர் தாக்கப் பட்டதற்கு காவல்துறை தான் காரணம்.
ஒரே போலீஸ் நிலையங்களில் 5 முதல் 10 வருடங்கள் வரை பணிபுரியும் உளவு பிரிவு போலீசார் மற்றும் மற்ற போலீசார்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
மாணவர் விவகாரத்தில் ஒரு நபர் கமிஷன் என்பது கண்துடைப்பு. நீட் மசோதா குறித்து தி.மு.க. அரசு மாணவர்களை குழப்புகிறது. மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கு வர வேண்டாம். நன்றாக படியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவன் சின்னத்துரை, அவரது சகோதரி இருவரும் சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
- தச்சை கணேசராஜா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவரிடம் நலம் விசாரித்தார்.
நெல்லை:
நாங்குநேரியை சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி இருவரும் சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவலை அறிந்து நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினார். அப்போது நாங்குநேரி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நாங்குநேரி பேரூர் செயலாளர் சங்கரலிங்கம், மேலப்பாளையம் கிழக்கு பகுதி செயலாளர் சண்முக குமார், மாவட்ட இளைஞர்-இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச் செயலாளர் விக்னேஷ், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன், வட்ட செயலாளர்கள் பாறையடி மணி, ஜெகநாதன், கச்சி முகமது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- அரிவாள் வெட்டில் காயமடைந்த சின்னத்துரை,சந்திரா செல்வி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மாணவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை:
நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை மற்றும் 9-ம் வகுப்பு படித்து வரும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவரும், சக மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரிவாள் வெட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேலும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு மருத்துவர்களை சந்தித்து அவர்கள் இருவரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராஜா, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலை வர் ராஜ்குமார், காங்கிரஸ் நிர்வாகி சுடலை குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.