என் மலர்
நீங்கள் தேடியது "National Green Tribunal"
- மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 5460.90 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் 157.68 ச.கி.மீ., ஆந்திராவில் 133.18 ச.கி.மீ., குஜராத்தில் 130.08 ச.கி.மீ., கேரளாவில் 49.75 ச.கி.மீ. பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மத்திய சுற்றுக்சூழல் அமைச்சகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வழங்கியுள்ள அறிக்கையில், நாட்டில் (மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்) 13 ஆயிரம் ச.கி.மீ. (13,05,668.1 ஹெக்டேர்) காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் அளவு டெல்லி, சிக்கிம், கோவை மாநிலங்களின் ஒட்டுமொத்த அளவைவிட அதிகமாகும்
அந்தமான், அசாம், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, சண்டிகார், சத்தீஸ்கார், தாதர்&நகர் மற்றும் டாமன்&டையு, கேரளா, லட்சத்தீவு, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், சிக்கிம், மத்திய பிரதேசம், மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதில் மார்ச் 2024 வரையிலான தரவுகளில், மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 5460.90 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 3620.9 ச.கி.மீ. பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் 863.08 ச.கி.மீ. காட்டுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 575.54 ச.கி.மீ., அருணாச்சல பிரதேசத்தில் 534.9 ச.கி.மீ., ஒடிசாவில் 405.07 ச.கி.மீ., உத்தர பிரதேசத்தில் 264.97 ச.கி.மீ., மிசோரமில் 247.72 ச.கி.மீ., ஜார்க்கண்டில் 200.40 ச.கி.மீ., சத்தீஸ்கரில் 168.91 ச.கி.மீ. நிலங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 157.68 ச.கி.மீ., ஆந்திராவில் 133.18 ச.கி.மீ., குஜராத்தில் 130.08 ச.கி.மீ., கேரளாவில் 49.75 ச.கி.மீ. நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
- கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
- இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.
நாட்டின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பலமாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது. கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாயும் கங்கை ஆறு பொதுமக்கள் குளிக்க தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. மேலும், ஒருநாளைக்கு 258 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் பாக்டீரியா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கங்கை நதியில் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஆலைகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் மேற்குவங்க அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
- சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை என கேரள அரசு வாதம்.
- கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.
இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.
இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என சமூக ஆவர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இதில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை. நீரை தடுத்து உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான கலிங்கு தான் அமைப்பட்டு வருகிறது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்த கட்டுமானது மேற்கொள்வதாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்றபின் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்நிலையில், உரிய அனுமதிகள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தால் அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால், சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
- தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரிய விவசாய நிலங்களில் 50% மரங்கள் காணாமல் போயுள்ளது.
- மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல் மரங்கள் காணாமல் போயுள்ளது.
2019 முதல் 2022 வரையிலான காலகட்டங்களில் மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்த சுமார் 60 லட்சம் மரங்கள் காணாமல் போயிருப்பதாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது
தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரிய விவசாய நிலங்களில் 50% மரங்கள் காணாமல் போயுள்ளதாகவும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 22 மரங்கள் வரை காணாமல் போயுள்ளதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல் மரங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகங்கள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜூலை 31-ம் தேதி ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்குடன் இந்த விஷயமும் விசாரிக்கப்படவுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் பேசியுள்ளார். அப்போது அவர் தமிழக மக்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும் தமிழக அரசு, கஜா புயலுக்கு கேட்டுள்ள நிவாரண நிதி குறித்தும் எதுவும் கூறவில்லை. ஆனால் தமிழகத்தில் அரசியல் நிலையை விமர்சித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்ட நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதனை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மேலும் இந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்ககோரியும், உயர்த்தப்பட்ட தொகையை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்ககோரியும் வருகிற 2-ந் தேதி முதல் 4-ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முழு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Sterlite #SC
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 26-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், உறுப்பினர் நீதிபதிகள் ரகுவேந்திர ரத்தோர், எஸ்.பி.வாங்டி, கே.ராமகிருஷ்ணன், நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (புதன்கிழமை) ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இன்று வழங்கப்போகும் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா அல்லது மீண்டும் திறக்கப்படுமா என்பது தீர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NGT #NationalGreenTribunal #SterlitePlant
சென்னை அடையாறு, கூவம் ஆற்றிலும் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுகிறது.
இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதி ஆகாஸ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அடையார் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்று உள்ளதாக நீதிபதிகள் கூறினர். இதில், பிரச்சனைகளை குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் அறிய முடிகிறது என்று தெரிவித்தனர்.
பருவமழை முன்னேற்பாடு பணிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.603 கோடி நிதியில் ரூ.80 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையில் கூட ஆற்றில் மிதக்கும் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
25,892 ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வழக்குகள் இருப்பதால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.
எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரடியாக பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.
இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்த தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்த நீதிபதிகள் இந்த தொகையை பொதுப்பணித்துறை அடுத்த 15 நாட்களுக்குள் தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கட்ட வேண்டும் என்று ஆணையிட்டனர். #TNGovt #NationalGreenTribunal

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை தொடர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #NeutrinoProject #NGT #TamilNaduPollutionControlBoard
சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து கேட்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேகலாய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் வனத்துறையின் விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வந்த வல்லுனர் குழுவினர் முன்னிலையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆஜராகி கருத்துக்களை தெரிவித்தனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் கீதாஜீவன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன், வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன், வக்கீல் தொண்டன் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் ஆஜரானார்கள்.
தீர்ப்பாயத்தின் முன்பு தூத்துக்குடி மக்கள் குவிந்திருந்தனர். பெண்கள் தங்களது நெத்தியில், ஸ்டெர்லைட் ஆலையை தடை செய் என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருந்தனர்.
பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள் அதிகமாக வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். #sterliteissue #vaiko
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.
இந்நிலையில் டாட்டா நிறுவனம் மத்திய அரசிடம் புதிதாக ஒரு மனு சமர்ப்பித்தது. இதை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடர அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு 4-ந்தேதி (நேற்று) விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பில் எந்த அதிகாரியும் ஆஜராகவில்லை. இதனால் விளக்கம் அளிக்காத மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து டாடா நிறுவனம் தரப்பில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்ட பிறகே ஆய்வு மையத்தை தொடங்க தீர்மானிக்கப்பட்டது என வாதிடப்பட்டது.
மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பு வக்கீல் வாதிடுகையில், சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு நிறுவனத்தில் சிறப்பு நிபுணர்கள் கிடையாது. அதனால் அந்த நிறுவனத்திடம் மத்திய அரசு கருத்து கேட்கவில்லை. மேலும் இந்த திட்டத்துக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராகேஷ் சர்மா, இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. இதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதி முடிவு எடுக்காத நிலையில் தமிழக அரசு எப்படி வனத்துறை நிலத்தை ஒதுக்கியது?. ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை இருக்கும்போது இந்த திட்டம் அதில் கூறப்பட்டு இருப்பதற்கு பாதிப்பு ஏற்படுத்தாதா?. அணுவை பல துகள்களாக சிதற அடிக்கும்போது சுற்றுச்சூழலும் பாதிப்பு அடையாதா?. இது தொடர்பாக மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஒரு மூத்த அதிகாரியோ, விஞ்ஞானியோ இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். டாடா நிறுவனமும் 8-ந்தேதிக்குள் எழுத்து வடிவில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். #Neutrino #NGT #NationalGreenTribunal #FederalGovernment