என் மலர்
நீங்கள் தேடியது "National Health Mission"
- லாஸ்பேட்டை விவேகானந்தா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
- மாநில நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் பள்ளிகளுக்கான நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மதிவாணன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தார்கள்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை விவேகானந்தா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் 7 நாட்கள் நடைபெறவுள்ளது. அதற்கான தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாணவர் கிருஷ்ணன் ஷர்மா வரவேற்பு உரையாற்றினார். பள்ளி முதல்வர் கீதா முன்னிலை வகித்தார். மாநில நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் பள்ளிகளுக்கான நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மதிவாணன் ஆகியோர் முகாமை ெதாடங்கி வைத்தார்கள்.
2-ம் நாள் முகாமில் இயற்கை பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி சத்யசாய் பவுண்டேஷன் சார்பில் பயிற்சியாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன் மற்றும் பயிற்சியாளர் ராஜ்கமல் ஆகியோர் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அருண் நாகலிங்கம் செய்து இருந்தார்.
- "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" செலவினங்களில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பு
- டயாலிசிஸ் சிகிச்சைக்கு மட்டுமே ரூ.7 கோடி நிலுவையில் உள்ளதாக வீணா தெரிவித்தார்
நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மத்திய அரசின் நிதியாலும் மாநில அரசின் நிதியாலும் கூட்டாக இயங்கி வருபவை.
கேரளாவில் "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" என செயல்படும் இம்மையங்களின் செலவினங்களில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன.
இந்நிலையில், இந்த மருத்துவ மையங்களை "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசாங்கம் வற்புறுத்துவதாகவும், அதனை கேரள அரசு மறுப்பதால், தர வேண்டிய நிதியை தர மறுப்பதாகவும் கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
முதலில் நிதியை நிறுத்தி வைத்து தர மறுத்தனர். பிறகு மத்திய அரசின் பங்களிப்பை உறுதி செய்யும் விதமாக இம்மையங்களில் பெயர் பலகைகள் இடம் பெற வேண்டும் என்றனர்.
ஆனால், தற்போது நிதியை கேட்டால், பெயரை "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என மாற்ற சொல்லி வற்புறுத்துகின்றனர்.
நிதி இல்லாததால் அனைத்து சுகாதார பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சைகள் கிடைப்பது கடினமாகிறது.
டயாலிசிஸ் சிகிச்சைக்கு மட்டுமே ஆன செலவு தொகை ரூ.7 கோடி மத்திய அரசால் இன்னமும் வழங்கப்படவில்லை.
மேலும், இத்திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட மருத்துவர்களுக்கும் இன்னமும் ஊதியம் வழங்க முடியவில்லை.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தேசிய சுகாதார இயக்கம், "பிரதான் மந்திரி சமக்ர ஸ்வாஸ்த்ய மிஷன்" என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வீணா தெரிவித்தார்.
கேரள மக்களின் கலாச்சாரம் மற்றும் மாநில மொழியுடன் பொருந்தாமல் இருப்பதாலும், கிராமப்புற மக்களுக்கு புரியாத வகையில் உள்ளதாலும், பெயர் மாற்றத்திற்கு கேரள அரசு சம்மதிக்கவில்லை.
- தேசிய சுகாதார திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்று இலக்குகளை எட்டிள்ளது.
- நாட்டில் 40 சதவீதம் விவசாயிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சணல் தொழிலை நம்பி உள்ளனர்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டன. இந்த திட்டத்தின் சாதனைகள் மந்திரிசபைக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் உலக அளவில் நோக்கும்போது இந்தியாவில் 60 சதவீதம் குறைந்திருப்பதை தெரிவித்தனர். 2015-ம் ஆண்டு ஒரு லட்சம் மக்களுக்கு 237 பேராக இருந்த காசநோய் வீதம் 2023-ம் ஆண்டு 195 ஆக குறைந்ததும் தெரிவிக்கப்பட்டது. காசநோய் இறப்பு வீதமும் 28 சதவீதத்தில் இருந்து 22 சதவீதம் குறைந்ததையும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதைப்போல பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டமும் நடந்தது. இதில் சணல் உற்பத்தி மற்றும் சணல் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பின்னர் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய சுகாதார திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்று இலக்குகளை எட்டிள்ளது. 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையே 12 லட்சம் சுகாதார பணியாளர்கள் தேசிய சுகாதார திட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும் இந்தியா இந்த திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றை மிக திறமையாக எதிர்த்து போராடியது.
சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது.
இதைப்போல பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபையின் நிதிக்குழு 2025-26-ம் ஆண்டு சந்தை பருவத்துக்கு சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
அதன்படி குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.5,650 ஆக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட குவிண்டாலுக்கு ரூ.315 அல்லது 6 சதவீதம் அதிகம் ஆகும். இதன்மூலம் உற்பத்திச்செலவில் 66.8 சதவீதம் விவசாயிகளுக்கு திரும்ப கிடைக்கும்.
2014-ம் ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.2,400 மட்டுமே வழங்கப்பட்டது. 2004-2005-ம் ஆண்டு முதல் 2013-2014 வரை ரூ.441 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்ட நிலையில், 2014-2015-ம் ஆண்டு முதல் 2024-2025-ம் ஆண்டுவரை ரூ.1,300 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
நாட்டில் 40 சதவீதம் விவசாயிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சணல் தொழிலை நம்பி உள்ளனர். சணல் ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.