என் மலர்
நீங்கள் தேடியது "NCP (SP)"
- எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- இந்த தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபைத் தேர்தல் நடக்கலாம்.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தச் சட்டசபைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம்.
கடந்த பல தேர்தலில் பா.ஜ.க. உடனான கூட்டணி அனுபவம், அதிக எம்.எல்.ஏ.க்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை உணர்ந்திருக்கிறோம்.
அதனால் அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கட்சிக்கு முதல் மந்திரி பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.
மகா விகாஸ் அகாதியின் முதல் மந்திரி வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். நான் அதனை ஆதரிப்பேன்.
காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல் மந்திரி வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன்.
ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மக்கள் விரும்புவது எங்களைத் தான், உங்களை அல்ல என தெரிவித்தார்.
- மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
- மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
முதல் மந்திரி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக கூட்டணி கட்சிகள் இடையே ஒருமித்த முடிவு எட்டப்படாமல் இருந்தது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல் மந்திரி வேட்பாளர் யார் என்பதை மகா விகாஸ் அகாடி கூட்டணி முடிவு செய்யும்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) முதல் மந்திரி வேட்பாளராக யாரை அறிவித்தாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு.
ஏனென்றால் மகாராஷ்டிரா மக்களைக் காப்பாற்ருவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
- அஜித் பவார் கட்சி தலைவர்கள் சரத் பவார் கட்சியில் இணைந்தனர்.
- வயதை சுட்டிக்காட்டியபோது, வயது பற்றி கவலைப்பட வேண்டாம் என சரத் பவார் விளக்கம்.
தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்) கட்சி தலைவர் சரத் பவார், தன்னுடைய வயது என்னவாக இருந்தாலும் சரி, மகாராஷ்டிரா மாநிலத்தை சரியான வழியில் கொண்டும் வரும் வரை ஓயமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராம்ராஜே நாய்க் நிம்பால்கரின் சகோதரர் சஞ்சீவ் ராஜே நாய்க் நிம்பால்கர், பால்டன் தொகுதி எம்.எல்.ஏ. தீபக் சவான் ஆகியோர் சரத் பவார் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் பேசும்போது சரத் பவார் கூறியதாவது:-
சில இளைஞர்கள் தங்களுடைய கையில் பேனர்கள் ஏந்தியதை பார்த்தேன். அதில் என்னுடைய படம் இருந்தது. அதில் 84 வயதான நபர் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், நீங்கள் வயதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், 84 வயதாக இருந்தாலும் சரி அல்லது 90 வயதாக இருந்தாலும் சரி. இந்த வயதான மனிதன் நிறுத்தமாட்டார். மாநிலத்தை மீண்டும் சரியான வழியில் கொண்டு வரும்வரை நான் ஓயமாட்டேன். உறுதியாக உங்களுடைய உதவியை பெறுவேன்.
சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்து சேதமடைந்தது. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாத் துறைகளிலும் ஊழலில் ஈடுபடுவது அவர்களின் கொள்கை. அதனால் அவர்கள் கையிலிருந்து அதிகாரத்தைப் பறிப்பது உங்களுடைய மற்றும் என்னுடைய பொறுப்பாகும்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதி நடைபெற இருக்கிறது. 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரேயின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காண இருக்கின்றன.