என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neer Mor Pandal"

    • பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    நடிகர் விஜய் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர்.புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி திருப்பூர் வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டரணி சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.வடக்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் குத்புதின் தலைமை தாங்கி நீ மோர் பந்தலை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சின்னதுரை,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ்,மாவட்ட நிர்வாகி பாஷா, சதாசிவம், காங்கேயம் நகர தலைவர் கிருஷ்ணசாமி,அங்கு ராஜ் மற்றும் கார்த்திக் மோகன், செல்வா நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை- திண்டிவனம் பைபாஸ் சாலை நாவற்குளத்தில் இளைஞர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • நீர்-மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை- திண்டிவனம் பைபாஸ் சாலை நாவற்குளத்தில் இளைஞர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவற்குளம் இளைஞர்கள் சார்பில் புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயனடையும் வகையில் கோடை காலத்தையொட்டி நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    இதில், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன், ஊராட்சி துணைத் தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நீர்-மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நாவற்குளம் வார்டு உறுப்பினர் நவநீத் என்ற நவநீதகிருஷ்ணன், வசந்தபுரம் வார்டு உறுப்பினர் கணேசன், உதயராஜ், நரேஷ்,நகுல், சுந்தரமூர்த்தி, சாமி, ஆகாஷ், ரமேஷ் உள்ளிட்ட நாவர்குளம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    நீர் மோர்- பந்தல்ஏற்பாட்டினை சிங்காரவேல் செய்திருந்தார்.

    • சு.ரவி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தக்கோலம், சேந்தமங்கலம், அருகில பாடி, அரக்கோணம் நகரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டது.

    சு.ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் ஒன்றிய மாணவரணி செயலாளர் வழக்கறிஞர். ஆர். பிரகதீஸ்வரன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட இளைஞரணி இணை செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் எல். வினோத்குமார் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் என். சங்கர், அவைத் தலைவர் தயாளன், பேரூராட்சி செல்வம், மாவட்ட பாசறை செயலாளர் கே. அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நெமிலி ஏ.ஜி. விஜயன், அரக்கோணம் பிரகாஷ், மாவட்ட ஜெ. பேரவை துணைத் தலைவர் ஆட்டுப்பாக்கம் ஏ.வி. ரகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    அரக்கோணம் நகர கழக செயலாளர் பாண்டுரங்கன், இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் ஷாம்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.ம.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
    • நகர செயலாளரும், கவுன்சிலருமான ஆனந்த் தலைமை தாங்கினார்.

    மேலூர்

    மேலூர் பஸ் நிலையம் அருகே அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆணைக்கிணங்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேலூர் ஆர். சாமி நினைவாக அ.ம.மு.க. கட்சிகொடியேற்று விழா, நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.பேரவை செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான டேவிட் அண்ணாதுரை கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் கட்சி அலுவலகம் அருகே உள்ள நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். நகர செயலாளரும், கவுன்சிலருமான ஆனந்த் தலைமை தாங்கினார். மேலூர் ஆசையன் சாமி, மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சோமாசி, சந்திரசேகரன், ராமகிருஷ்ணன், சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி தலைவர் கமல், நகர் துணைச் செயலாளர் செல்வம், சுக்காம்பட்டி ராசு, பேரவை வாசுதேவன், முன்னாள் கவுன்சிலர்கள் அன்புக்கரசு, சோனை, பெரியதுரை, கொட்டாம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் புருசோத்தமன், துரை, பிச்சன்செட்டி, நத்தர் அலி, வக்கீல்கள் முத்தையா, சுரேந்திரன், மேகவர்ணன், சிட்டம்பட்டி முருகேசன், கீரனூர் பிச்சை ராஜன், மில்கேட் ராஜேந்திரன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×