search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEET UG"

    • நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
    • பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கடந்த மாதம் நீட் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும் எனவும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட NEET UG கலந்தாய்வின் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    நீட் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதை விமர்சித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • வருகிற 8-ந்தேதி உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணையை தொடங்குகிறது.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக பேப்பர் லீக் ஆனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

    இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில்தான் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்துள்ள 56 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தேர்வை ரத்து செய்வது தொடர்பான எந்த முடிவையும் மத்திய தேர்வு முகை மற்றம் மத்திய அரசு எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    கடந்த மே மாதம் 4750 மையங்களில் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். கருணை மதிப்பெண் அளித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கருணை மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் எம்பிபிஎஸ் படிப்பு தொடர்பான நடவடிக்கையை நிறுத்த மறுப்பு தெரிவித்து விட்டது.

    உச்சநீதிமன்றம் தீர்வை ரத்து செய வேண்டும். மீண்டும் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர்மட்ட தேர்வு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட மனுக்களை ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

    மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "நீதிமன்றம், NEET-UG-ஐ மீண்டும் நடத்த வேண்டாம் என்று எதிர்மனுதாரர்களுக்கு (மத்திய அரகு மற்றும் NTA) உத்தரவிடலாம். ஏனெனில் அது நேர்மையான மற்றும் கடினமான படித்த மாணவர்களுக்கு நியாயமற்றதாகவும் கடுமையானதாகவும் மட்டுமல்ல, மீறலுக்கும் வழிவகுக்கும். கல்விக்கான உரிமை மற்றும் அரசியலமைப்பின் 14-வது பிரிவு (சமத்துவத்திற்கான உரிமை) மீறப்பட்டதாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    • நாடு முழுக்க 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்.
    • கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுக்க நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுக்க 24 லட்சம் பேர் எழுதினர். சமீபத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின.

    இதனிடையே நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதாகவும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதோடு ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் மையத்தில் இருந்து அதிகம் பேர் முதலிடம் பெற்றது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்தனர்.

    இந்த வரிசையில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான பிரச்சினை பூதாகாரம் ஆகியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் சிங் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சிங் கரோலா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றப்பட்டு இருப்பதோடு, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ-இடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என இது தொடர்பான அனைத்து பிர்ச்சினைகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ. துவங்கியுள்ளது.

    முன்னதாக போட்டி தேர்வுகளை கண்காணிக்க உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. மேலும், மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வு விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  

    ×