என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Corporation"

    • தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் 30 பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    மாநகராட்சிகளில் அனைத்து பணிகளையும் ஒப்பந்ததாரர் மூலம் வழங்குவதற்கான அரசாணை 152 ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று நடந்த முற்றுகை போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், கணக்கர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தற்காலிக முறைப்படி அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 30 பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
    • தியாகராஜநகர், டி.வி.எஸ். நகர், தாமிரபரணி காலனி உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்்கு கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    பாளை தியாகராஜநகரை சேர்ந்த சமூக ஆர்வலரான செல்வகுமார் என்பவர் அளித்த மனுவில், தியாகராஜநகர், டி.வி.எஸ். நகர், தாமிரபரணி காலனி உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே அந்த நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மாநகராட்சி 55- வது வார்டு உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் அளித்த மனுவில், குமரேசன் நகர் முன்பு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரும் அங்கு இதுவரை பூங்கா அமைப்பதற்கான நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே காலம் தாழ்த்தாமல் விரைவில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மாநகரம் முழுவதும் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தர விட்டார்.
    • முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகள் செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மாநகரம் முழுவதும் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தர விட்டார்.

    அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில், சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் முதற்கட்ட மாக தச்சநல்லூர் மண்டலம் சிந்துபூந்துறை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ. 1,500 ஆகும். மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகள் செய்யப்பட்டது. இந்த பணியானது மாநகராட்சிக்கு கீழ் உள்ள அனைத்து சுகாதார மையத்திலும் தூய்மை பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

    • நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலம் 22-வது வார்டில் வரிவசூல் மேம்படுத்தும் விதமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
    • இம்முகாமில் அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் , பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரி யினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி டவுன் மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலம் 22-வது வார்டில் வரிவசூல் மேம்படுத்தும் விதமாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி அறிவுரையின்படி நாளை மறுநாள் (சனிக்கிழமை) பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் , பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரி யினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். மேலும் சொத்துவரி, குடிநீர்கட்டண வரிவிதிப்பு, பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் விண்ணப்பங்கள் அளிக்கலாம். இச்சிறப்பு முகாம் வார்டு 22-ல் பின்தங்கியுள்ள வரிவசூலை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங் களை நிலுவை யின்றி செலுத்தி ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சுத்தமல்லி விலக்கு அருகில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும்.

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வழிகாட்டுதலில் சுத்தமல்லி விலக்கு அருகில் நெல்லை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக ரூ.5 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும். நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் (கிராமப்புற கோட்டம்) குத்தாலிங்கம், உதவி செயற் பொறியாளர் (கிராமப்புற உபகோட்டம்) அலெக்சாண்டர், உதவி மின் பொறியாளர் (சுத்தமல்லி பிரிவு) வேலுசாமி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதிகளில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
    • 4 மண்டல உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதிகளில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. 4 மண்டல உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    நெல்லை மண்டலத்தில் வார்டு 21-ல் உள்ள பேட்டை உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்திலும், தச்சநலல்லூர் மண்ட லத்தில் வார்டு 29-ல் உள்ள மீனாட்சிபுரம் நகர்மன்ற மகளிர் மேல்நிலைப்பள்ளி யிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு 31-ல் உள்ள புனித தோமையார் பள்ளி வளாக கூட்டரங்கிலும் பாளையங்கோட்டை மண்டலத்தில் வார்டு 55-ல் உள்ள 8-வது வடக்கு தெரு விக்னவிநாயகர் கோவில் எதிரில் உள்ள கலையரங்கிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாம்களில் அந்தந்த வார்டு பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள், வணிகவளாக உரிமையாளர்கள், தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை சேவை கட்டணம் போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக செலுத்திடவும், மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணவரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவை களுக்கும் கோரிக்கை மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பின்தங்கியுள்ள வரிவசூல் மேம்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங்களை அன்றைய தினமே நிலுவையின்றி செலுத்திட மாநகராட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மேயர் சரவணன் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
    • டவுன் ரத வீதிகள் முழுவதிலும் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப் பட்டது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மாநகராட்சி சார்பில் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நிலவேம்பு கசாயம்

    அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.

    டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு நடந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்து கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கடைக ளுக்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் அந்தோணி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து டவுன் ரத வீதிகள் முழுவதிலும் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப் பட்டது. தொடர்ந்து மாநகரப் பகுதி முழுவதும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நில வேம்பு கசாயம் வழங்குவ தற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    • நெல்லை மாநகர பகுதியில் பருவமழையை முன்னிட்டு அங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • டெங்கு தடுப்பு மற்றும் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் பருவமழையை முன்னிட்டு அங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுரையின்படி உதவி பொறியாளர் வாசுதேவன் வழிகாட்டுதலின்படி டெங்கு தடுப்பு மற்றும் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் நிலவேம்பு கசாயம் போலீசாருக்கு வழங்கப்பட்டது. டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை டவுன் ரத வீதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள், டவுன் மார்க்கெட் பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் காவலர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரை யாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர்.
    • மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேரும் இருக்கின்றனர்.

    மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து அவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்கள் உள்ளிட்டவற்றை கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் மக்கள் திட்ட பணிகள் நடைபெறாமல் முடங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மாநகராட்சிக்கு நேரில் வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி சென்றனர்.

    ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்து மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


    இந்த கூட்டத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீதமுள்ள கவுன்சிலர்கள் மேயர் சரவணனை கண்டித்து புறக்கணித்தனர்.

    இந்நிலையில் தி.மு.க தலைமையகத்தில் இருந்து மேயர் சரவணனுக்கு அழைப்பு வந்ததன் பேரில் அவர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு உள்ளார்.

    அவரை அமைச்சர் கே.என். நேரு நேரில் அழைத்து மாநகராட்சி பிரச்சனை குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். இந்நிலையில் தற்போது மேயர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் வழங்கி விட்டதாக பரவலான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி தலைமையால் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், புதிய மேயரையும் கட்சியே அறிவிக்கும் என்றும் தகவல்கள் பரவலாக இருந்து வருகிறது.

    • மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.

    கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மேயர் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஆணையர் ஏற்றுக் கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.

    இந்நிலையில், ஜூலை 8ம் தேதி நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறும் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் அறிவித்துள்ளார்.

    வெறுப்பு மேயராக, துணை மேயர் கூட்டத்தை நடத்துவார் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவை தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற கூட்டம் அறிவித்துள்ளது.

    • நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.
    • நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்தார்.

    நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர்.

    நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் இருந்தார். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தனர்.

    மேயர் மீது தலைமைக்கு வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விசாரணை நடத்தினார். அமைச்சரின் விசாரணையை தொடர்ந்து கட்சி மேலிட அறிவுறுத்தலின்படி மேயர் ராஜினாமா செய்தார்.

    திருநெல்வேலி மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆகஸ்ட் 5-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைமுகத் தேர்தல் 5-ந் தேதி நடக்க உள்ள நிலையில், நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது.

    நெல்லை மேயர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் மத்தியில் கடும் போட்டி என தகவல் வெளியாகி உள்ளது. கே.ஆர்.ராஜூ, கிட்டு, உலகநாதன், கருப்பசாமி கோட்டையப்பன், பவுல்ராஜ் ஆகியோர் தீவிரமாக உள்ளனர்.

    கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களை சந்தித்து மேயர் நாற்காலியை பிடிக்க காய் நகர்த்தி வருகின்றனர்.

    • மனுவை திரும்ப பெறுவதற்கு 11.30 முதல் 11.45 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • போட்டி இருந்தால் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் மோதல் போக்கு நீடித்ததால் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

    மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டு மறைமுக தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

    மேயர் வேட்பாளராக போட்டியிடும் கவுன்சிலர்கள் நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரை வேட்புமனுவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மைய கூட்ட அரங்கில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

    அதன் மீதான பரிசீலனை காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும், அதனை திரும்ப பெறுவதற்கு 11.30 முதல் 11.45 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

    இந்நிலையில் மேயர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லை வந்தனர்.

    இன்று காலை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் மாநகராட்சியில் உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    போட்டியின்றி கட்சி தலைமை முடிவு செய்யும் மேயர் வேட்பாளருக்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து மேயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

    பின்னர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனை அறிவித்தார். அவருக்கு கவுன்சிலர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

    கவுன்சிலர் கிட்டு அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளில் ஒருவர். அவர் நெல்லை மாநகராட்சியில் 3-வது முறையாக கவுன்சிலராக தேர்ந்ததெடுக்கப்பட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கிட்டு, தனது வார்டு பகுதி முழுவதும் எப்போதும் சைக்கிளில் தான் பயணம் செய்யக்கூடியவர்.

    ×