என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "net practice"

    • ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன்.
    • நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்திய சமி, கடந்த நவம்பருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் சமி விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 34 வயதான முகமது சமி தற்போதைய தனது உடல்தகுதி குறித்து கூறியதாவது:-

    நான் சில காலமாக இந்திய அணிக்கு விளையாடாமல் இருப்பதை அறிவேன். அதனால் அணிக்கு விரைவாக திரும்ப கடுமையாக முயற்சித்து வருகிறேன். இருப்பினும் நான் அணிக்கு திரும்பும் போது, உடல் அளவில் எந்த வித அசவுகரியமும் இன்றி இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். நான் எவ்வளவு வலிமையாக திரும்புகிறேனோ, அது எனக்கு நல்லது.

    அடுத்து வரும் வங்காளதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என எந்த அணிக்கு எதிரான தொடராக இருந்தாலும் அவசரப்பட்டு அணிக்கு வந்து, மறுபடியும் காயமடைந்தால் சிக்கலாகி விடும். அதனால் இந்த விஷயத்தில் நான் எந்த 'ரிஸ்க்'கும் எடுக்க விரும்பவில்லை.

    ஏற்கனவே பந்துவீச்சு பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன். ஆனால் 100 சதவீதம் உடற்தகுதியை அடையும் வரை அணிக்கு திரும்புவதில் எந்த ஒரு வாய்ப்பையும் எடுக்கபோவதில்லை. எனது உடற்தகுதியை சோதிக்க உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் அதற்கும் தயார். எந்த அணிக்கு எதிராகவும், எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

    இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. கடந்த தொடரில் அங்கு நாம் இளம் வீரர்களுடன் விளையாடினோம். சில சீனியர் வீரர்கள் இல்லை. ஆனாலும் நாம் தான் சிறந்த அணி என்று நிரூபித்து காட்டினோம். இந்த முறை கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறேன். ஆனால் இந்தியா வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு சமி கூறினார்.

    இதுவரை 64 டெஸ்டுகளில் விளையாடி 229 விக்கெட் வீழ்த்தி இருக்கும் முகமது சமி அடுத்த மாதம் நடக்கும் ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக ஏதாவது ஒரு ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.

    • பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் சுப்மன் கில்லுக்கு முகமது சமி பந்துவீசியுள்ளார்.
    • முகமது சமி இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணியின் தோல்விக்கு மத்தியில் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. சின்னசாமி மைதானத்தில் வலைப்பயிற்சியின் போது பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் சுப்மன் கில்லுக்கு முகமது சமி பந்துவீசியுள்ளார்.

    கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷமி 11 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத முகமது சமி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை முகமது சமி வீழ்த்தியிருந்தார்.

    முகமது சமி இந்த ஆண்டு தொடக்கத்தில் இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வரும் சமி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.
    • இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி, ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் மோதுவதாக இருந்தது. இந்நிலையில் அந்த 3 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியை இந்திய அணி தற்போது ரத்து செய்துள்ளது. மேலும் இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மற்றும் மூத்த வீரர்கள் வலை பயிற்சியை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

    ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • அருண் ஜெட்லி மைதானத்தில் இளம் வீரர்களுடன் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.
    • ரெயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

    புதுடெல்லி:

    விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

    இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.

    இந்நிலையில், ரஞ்சி டிராபி போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி நேற்று ஈடுபட்டார். 36 வயதான அவர் டெல்லி அணி வீரர்களுடன் அருண் ஜெட்லி மைதானத்தில் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.

    விராட் கோலி பயிற்சி தொடங்கும் முன்னர் தனது கிட் பையை இழுப்பதைக் கண்ட டெல்லி அணி மேலாளர், அவருக்கு உதவுமாறு சில இளம் வீரர்களிடம் சைகை செய்தார். ஆனால் இந்த வாய்ப்பை கோலி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

    கோலியின் ஆரம்ப நாட்களில் பயிற்சியாளராக இருந்த பதி, விராட் அவர்கள் உங்களுக்கு உதவட்டும் என கூறியதற்கு, கோலி, என்ன சொல்கிறீர்கள்? இது என்னுடைய கிட், நானே அதை எடுத்துச் செல்கிறேன் என தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×