என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Netflix"

    • கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம்
    • கர்மா டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    தென்கொரிய படங்களுக்கும் வெப் சீரிஸ்களுக்கும் இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக தென்கொரிய திரில்லர் திரைப்படங்களுக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    அவ்வகையில் கர்மா என்ற புதிய தென்கொரிய வெப் சீரிஸ் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தலத்தில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    கர்மா என்ற வார்த்தை இந்தியாவில் மிக பிரபலம். அதாவது கடந்த பிறவி அல்லது இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களின் விளைவு ஆகும்.

    • கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
    • வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி ஆகியோரும் கங்குலியுடன் நடித்திருக்கின்றனர்.

    அவர் போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலாகியது.

    இந்நிலையில் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தை நீரஜ் பாண்டே இயக்கும் 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார். இந்த படத்தின் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடிகராக அறிமுகமாகிறார். இந்த தொடர் வரும் 20-ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

    • மும்பையில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்க முயன்ற முதியவர் சைபர் மோசடியில் சிக்கி இருக்கிறார்.
    • இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்கள் 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃப்ளிக்ஸ் இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர் ஒருவர் சந்தாவை புதுப்பிக்க முயன்று சைபர் மோசடியில் சிக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த மோசடியில் மும்பையை சேர்ந்த முதியவர் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய புகார் மும்பையை அடுத்த ஜூஹூ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    காவல் நிலைய தகவல்களின் படி, முதியவருக்கு நெட்ஃப்ளிக்ஸ் ஆட்டோ-ஜெனரேட் செய்த மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிப்பதற்கான நினைவூட்டல் தொடர்பான தகவல் இடம்பெற்று இருந்தது. அதில் அவர் மாதாந்திர கட்டணமான ரூ. 499 செலுத்தி ஸ்டிரீமிங் சந்தாவை புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மின்னஞ்சலுடன் வந்த இணைய முகவரியை 73 வயதான நபர் க்ளிக் செய்துள்ளார்.

    இவர் க்ளிக் செய்ததும் திறந்த மற்றொரு வலைப்பக்கத்தில் இவரின் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட கேட்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்து நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்-ஐ புதுப்பிக்கலாம் என்றும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பின் இவரது மொபைல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒடிபி) அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கான குறுந்தகவலில் தொகையை சரியாக பார்க்காமல், முதியவர் ஒடிபி-யை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு செய்ததும், அவரின் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் உடனடியாக காணாமல் போய்விட்டது.

    சைபர் செக்யுரிட்டி வல்லுனர்கள், சட்ட நிறுவனங்கள் பொது மக்களிடம் ஒடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும், இது போன்ற சைபர் குற்றங்களுக்கு மக்கள் தொடர்ந்து பலியாவது வாடிக்கையாகவே உள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி சார்பில் இவ்வளவு பெரிய தொகைக்கான பரிவர்த்தனையை உண்மையில் நீங்கள் செய்தீர்களா? என்ற கேள்வியுடன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த அழைப்பில் தான் முதியவர், ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார். இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்களை பற்றிய தகவல் தெரிவிக்கும் முனையத்தில் புகார்களின் எண்ணிக்கை 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது பற்றிய தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

    • நெட்ஃப்ளிக்ஸ் உலகளவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஒடிடி தளமாக விளங்குகிறது.
    • கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்துவதை தாமதப்படுத்தி வந்த திட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் அடுத்த ஆண்டு செயல்படுத்த இருக்கிறது.

    நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட் பாஸ்வேர்டை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. பாஸ்வேர்டு ஷேரிங் வியாபாரத்தை நிறுத்தும் முயற்சியில் நெட்ஃப்ளிக்ஸ் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் இதற்கு முடிவுகட்டும் இலக்கை நெட்ஃப்ளிக்ஸ் அடைய இருக்கிறது.

    அடுத்த ஆண்டு துவக்கம் முதலே நெட்ஃப்ளிக்ஸ் அதன் பயனர்கள் பாஸ்வேர்டுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்க போவதில்லை. இது குறித்த தகவலை தி வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டு இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் தங்களது குடும்பத்தார் தவிர வெளியில் உள்ள நண்பர்கள் மற்றும் வேற்று நபர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படாது. பாஸ்வேர்டு ஷேரிங்கை தடுத்து நிறுத்த பல்வேறு வழிகளை நெட்ஃப்ளிக்ஸ் கடந்த சில மாதங்களாக கண்டறிந்து வருகிறது.

    நெட்ஃப்ளிக்ஸ் சந்தா முறை அறிவிக்கப்பட்டதில் இருந்தே பாஸ்வேர்டு ஷேரிங் பெரும் சிக்கலான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. எனினும், சந்தாதாரர்கள் குறைய துவங்கும் வரை இந்த பிரச்சினை குறித்து நெட்ஃப்ளிக்ஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை. இந்த ஆண்டு வருவாய் சரிய துவங்கியதில் இருந்து பாஸ்வேர்டு ஷேரிங்கிற்கு முடிவு கட்ட நெட்ஃப்ளிக்ஸ் தீவிரமாக செயல்பட துவங்கி இருக்கிறது.

    சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், பாஸ்வேர்டு ஷேரிங்கை நிறுத்தவும் நெட்ஃப்ளிக்ஸ் பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து வருகிறது. இதன் பகுதியாகவே நெட்ஃப்ளிக்ஸ்-இல் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மாதம் 6.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் நெட்ஃப்ளிக்ஸ் - மொபைல் ஒன்லி, பேசிக் பிலான், ஸ்டாண்டர்டு பிலான் மற்றும் பிரீமியம் பிலான் என நான்கு சந்தாக்களை வழங்கி வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 149, ரூ. 199, ரூ. 499 மற்றும் ரூ. 649 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • நெட்ஃப்ளிக்ஸ் ஸ்டிரீமிங் தளத்தின் சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • விலை மாற்றம் மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் புதிய சந்தா தொகுப்புகளை அறிவித்து இருக்கிறது.

    உலகளவில் முன்னணி ஒடிடி தளமாக இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தனது விலையை 50 சதவீதம் வரை குறைத்து விட்டது. உலகின் சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு வட அமெரிக்காவில் சந்தா விலையை உயர்த்திய நிலையில், தற்போது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கிற்கு பிந்தைய மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்கும் விதம் மாறி இருக்கிறது. இதற்கு ஏற்ப வருவாய் மற்றும் சந்தாதாரர் வளர்ச்சியை நெட்ஃப்ளிக்ஸ் அதிகப்படுத்த பல்வேறு வழிகளை பரிசோதனை செய்து வருகிறது.

    தற்போதைய விலை குறைப்பு மத்திய கிழக்கு, துணை சகாரா ஆப்ரிக்க பகுதிகள், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அமலுக்கு வந்துள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி 12 நாடுகளில் குறைந்த விலை சந்தா திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் டிஸ்னி பிளஸ், ஹூலூ மற்றும் ஸ்லிங் டிவி உள்ளிட்டவை தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்திய நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தற்போது விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களின் லாக்-இன் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோருக்கு புதிய மாதாந்திர கட்டணத்தை அறிவித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் IP முகவரிகள், டிவைஸ் ஐடி மற்றும் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்து கடவுச்சொல் பகிரப்படுவதை தடுக்க முயற்சித்து வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் விதிகளின் படி ஒரே கடவுச்சொல்லை பலர் பயன்படுத்தும் வசதியை அந்நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்தது.

    புதிய கட்டண முறை லத்தீன் அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வந்ததை அடுத்து கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. புதிய கட்டணம் கனடா மற்றும் நியூசிலாந்தில் 8 டாலர்கள், போர்ச்சுகலில் 4 டாலர்கள், ஸ்பெயினில் 6 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கட்டணங்கள் அமெரிக்காவில் இந்த ஆண்டே அமலுக்கு வர இருக்கிறது.

    • பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுத்துகிறது.
    • கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்வதை கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்ப முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நெட்ஃப்ளிக்ஸ் சேவையில் பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைக்கு முற்றிப்புள்ளி வைக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த நடவடிக்கையை சில நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸ் ஏற்கனவே துவங்கி விட்டது.

    இது தொடர்பாக அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை காரணமாக சுமார் பத்து லட்சம் பயனர்களை நெட்ஃப்ளிக்ஸ் இழந்துள்ளது. 2023 முதல் காலண்டில் நெட்ஃப்ளிக்ஸ் சுமார் பத்து லட்சம் பயனர்களை இழந்துள்ளது என்று ஆய்வு நிறுவனமான கந்தர் தெரவித்து இருக்கிறது. பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுத்துவதால், பயனர் எண்ணிக்கை குறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

    பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்வதை கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்ப முறைகளை கடந்த பிப்ரவரி மாத வாக்கில் ஸ்பானிஷ் பயனர்களிடையே நெட்ஃப்ளிக்ஸ் செயல்படுத்தியது. மேலும் 5.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 500 கட்டணம் கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • நெட்ப்ளிக்ஸ் சேவையில் புதிதாக 60 லட்சம் பேர் இணைந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவிப்பு.
    • இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தள பயன்பாடுகளில் புதிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்டு ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய அறிவிப்பு காரணமாக இந்திய பயனர்கள் இனி தங்களது அக்கவுன்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.

    கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்டு ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் தான், நெட்ப்ளிக்ஸ் சேவையில் ஒரே அக்கவுன்ட்-ஐ பலர் பயன்படுத்துவதற்கான வசதி நீக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-ஐ அவர்களது வீடு, வெளியில் செல்லும் இடங்கள் மற்றும் பயணங்கள் என எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதோடு டிரான்ஸ்பர் ப்ரோபைல், மேனேஜ் அக்சஸ் மற்றும் டிவைசஸ் போன்ற புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும். நெட்ஃப்ளிக்ஸ்-இன் புதிய அறிவிப்பு மூலம், அந்நிறுவனம் IP முகவரி, டிவைஸ் ஐடி, அக்கவுன்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில், அக்கவுன்ட்-ஐ யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்கிறது.

    புதிய மாற்றம் காரணமாக பயனர்கள், நெட்ப்ளிக்ஸ் ஹவுஸ்ஹோல்டு-ஐ செட்டப் செய்து கொள்ள வேண்டும். இந்த அக்கவுன்ட் பயனர் வீடு அல்லது வசிக்கும் இடமாக இருத்தல் அவசியம் ஆகும். ஒரே இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்துவோர் மட்டுமே இந்த அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த முடியும்.

    மற்ற இணைப்பில் இருந்து நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-இல் லாக் இன் செய்தால், அவ்வாறு செய்வோருக்கு புதிய அக்கவுன்ட் உருவாக்குவதற்கான நோட்டிபிகேஷன் அனுப்பப்படுகிறது.

    • நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.
    • இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    பிரபல ஓ.டி.டி. நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்திய பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. அதில், இனி பயனர்களின் கணக்கை அவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். குடும்பத்திற்கு வெளியே யாரேனும் தங்கள் கணக்கை பயன்படுத்தினால் அவர்கள் தங்கள் புரொபைலை புதிய கணக்கிற்கு மாற்ற வேண்டும்.

    அதன் பின்னர் பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, பாஸ்வேர்டு பகிர முடியாத தொழில்நுட்பத்தை ஏற்கனவே அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கடந்த மே மாதமே கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுதொடர்பான தங்கள் கருத்துக்களை நெட்பிளிக்ஸ் பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • 5ஜி மொபைல் வைத்திருப்போர் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
    • ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றன.

    ஜியோ நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 1099 மற்றும் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு புதிய சலுகைகளும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவுடன் வழங்கப்படுகின்றன. இவற்றில் முறையே ரூ. 149 மற்றும் ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றன.

    இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 5ஜி டேட்டா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரூ. 1099 ஜியோ சலுகையுடன் நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் திரைப்படங்களை 480 பிக்சல் ரெசல்யூஷனில் பார்க்க முடியும்.

     

    இந்த சலுகையில் வழங்கப்படும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா கொண்டு ஒற்றை மொபைல் சாதனம் அதாவது ஆண்ட்ராய்டு, ஐபோன் அல்லது டேப்லெட் உள்ளிட்டவைகளில் மட்டுமே தரவுகளை பார்க்க முடியும். மற்ற பலன்களை பொருத்தவரை 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எஸ்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் 5ஜி மொபைல் வைத்திருப்போர் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வசதி ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

    ஜியோ ரூ. 1499 சலுகையிலும் நெட்ஃப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் விரும்பிய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை 720 பிக்சல் தரத்தில் கண்டுகளிக்க முடியும். முந்தைய பேசிக் திட்டத்தை போன்றே இந்த சந்தாவிலும் பயனர்கள் ஒரு சமயத்தில் ஒரே சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    ஆனால், இதில் மொபைல் போன், டேப்லெட்கள், லேப்டாப் மற்றும் டி.வி. போன்ற சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் மற்ற பலன்களை பொருத்தவரை 3 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.

    • நெட்பிளிக்ஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் மிகப்பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது.
    • இந்நிறுவனம் கடந்த ஆண்டு ‘லியோ’ உள்ளிட்ட மிகப்பெரிய படங்களை வெளியிட்டது.

    சினிமா துறையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள ஓடிடி தளம் நெட்பிளிக்ஸ். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் மிகப்பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு 'லியோ' உள்ளிட்ட மிகப்பெரிய படங்களை வெளியிட்டது.


    இந்நிலையில், நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டு எந்தெந்த படங்களை வெளியிடவுள்ளது என்ற பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2'. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்'. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் 'சொர்க்க வாசல்'.



    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்.கே.21'. இயக்குனர் கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'ரிவால்வர் ரீட்டா'. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து அரும் 'மகாராஜா'. இயக்குனர் கணேஷ் ராஜா இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' போன்ற படங்களை வெளியிடவுள்ளது. இது தொடர்பான போஸ்டர்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.


     


    • லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
    • மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது லவ்வர் திரைப்படம்.

     

    இந்த வார ஓடிடி ரிலீஸ் - 4 படங்கள்

    1. லால் சலாம் {lal salaam} - Netflix

    பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான லால் சலாம் படம். மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ரஜினியின் மகளான ஐஷ்வர்யா தான் இத்திரைப்படத்தின் இயக்குனர். இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரகுமான் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

     

     

    2. லவ்வர் {lover} - Hot star

    பிப்ரவரி 9-ஆம் தேதி நடிகர் மணிகண்டன், ஸ்ரீகௌரி ப்ரியா, கண்ணா ரவி நடித்து வெளியான படம் தான் "லவ்வர்".இத்திரைப்படத்தை பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவரின் முதல் படம் இதுவே. இவர் இதற்கு முன்பு 'லிவ் இன்"என்ற வெப் சீரீஸை யூ ட்யூபில் இயக்கியுள்ளார்.

    படம் வெளியான சில நாட்களிலையே மக்கள் இடையே நல்ல பெயரையும், நம்பிக்கையையும் இப்படம் பெற்றது. 25 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்து. தற்போது வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

     

    3. மெரி கிறிஸ்துமஸ் {merry christmas} - Netflix

    விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடித்து ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது மெரி கிறிஸ்துமஸ் படம். இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் வெளியானது. இத்திரைப்படத்தை "அந்தாதுன்" படத்தின் இயகுனரான ஸ்ரீராம் ராஹவன் இயக்கியிருந்தார். மெரி கிறிஸ்துமஸ் வரும் மார்ச் 8-ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

     

    4. ஹனுமான் {Hanu-man} - zee 5

    ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான மற்றொரு படம் ஹனுமன். தெலுங்கு மொழியில் திரையரங்கில் வெளியானது. தேஜா சஜ்ஜா முன்னணி ஹீராவாக நடித்திருந்தார். வரலக்ஷ்மி சரத்குமார், அமிர்தா ஐயர், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ப்ரசாந்த் வர்மா என்பவர் இயக்கியுள்ளார். ஹனுமன் திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது




     


     

     

    • இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
    • இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இதுவே மிக அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது என சொல்லப்படுகிறது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை விட இரண்டு மடங்கு தொகைக்கு 'அமரன்' விற்பனையாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது

    1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×