search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NIT"

    • 2024 ஜேஇஇ தேர்வில் பழங்குடியின மாணவி சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
    • “கல்வி ஆகச்சிறந்த செல்வம்” அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்.

    2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

    ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற சுகன்யாவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "JEE நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி NIT யில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள். "கல்வி ஆகச்சிறந்த செல்வம்" அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜேஇஇ தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
    • தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது.

    திருச்சி:

    2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

    ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் ரோகிணி கூறுகையில்,

    பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் பழங்குடியினர் அரசு பள்ளியில் படித்தேன். ஜேஇஇ (JEE) தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

    திருச்சி என்ஐடியில் (NIT) சீட் பெற்று, கெமிக்கல் பாடத்தை தேர்வு செய்துள்ளேன். தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது. எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி. எனது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஊழியர்களால் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    • JEE தேர்வில் பழங்குடியின மாணவிகள் ரோஹிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை.
    • திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

    2024 JEE தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோஹிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.

    இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

    JEE தேர்வில் மாணவி ரோஹிணி 73.8% மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.

    திருச்சி NIT-ல் மாணவி ரோஹிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    • திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழக 18-வது பட்டமளிப்பு விழாவில் 1977 பேருக்கு பட்டங்களை அதன் தலைவர் பாஸ்கர் பட் வழங்கினார்
    • நம்பிக்கை, பொருத்தம், நம்பகத்தன்மை, பேச்சுவார்த்தைகள், சவால்கள் மற்றும் விநியோகம் அகியவற்றின் மீது பட்டதாரி மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சிறப்பு விருந்தினர் பேசினார்

    திருச்சி:

    திருச்சி தேசிacய தொழில் நுட்பக்கழகத்தில் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் திருச்சி என்.ஐ.டி. தலைவர் பாஸ்கர் பட் கலந்துகொண்டு பி.ஆர்க்கில் 38 பேர், பி.டெக்கில் 881 பேர், எம்.டெக்கில் 572 பேர், எம்.எஸ்சியில் 92 பேர், எம்.பி.ஏ.வில் 96 பேர் உள்பட 1977 பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 131 பேருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கினார்.

    மேலும் என்.ஐ.டி. தலைவரின் தங்கப்பதக்கத்தை பி.டெக். மெட்டலர்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் பிரிவு மாணவி கிமாரா பிரசாத் சூரியராவுக்கு ஷியாம் சீனிவாசன் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    விழாவில், பெடரல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அலுவலருமான ஷியாம் சீனிவாசன் பேசுகையில், நம்பிக்கை, பொருத்தம், நம்பகத்தன்மை, பேச்சுவார்த்தைகள், சவால்கள் மற்றும் விநியோகம் அகியவற்றின் மீது பட்டதாரி மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்றாலும், அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் சரிவை சந்தித்தாலும் வெற்றியை நோக்கி செல்ல முடியாது. நிறுவனங்களுக்கு பிராண்டட் என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தங்களுக்கான பிராண்டட் யார் என்பதை தேர்வு செய்து செயல்பட வேண்டும்.

    அப்துல்கலாம், சச்சின் டெண்டுல்கர், மும்பை டப்பாவாலா என சாதனையாளர்கள் யாரை வேண்டுமானாலும் முன்னுதாரணமாக கொண்டு தங்களது வளர்ச்சியை நிலைநிறுத்த வேண்டும். இக்கட்டான சூழ்நிலையை எதிர்த்து போராடி உயர் தரத்துடன் வெளிவருவதால் பட்டதாரி மாணவர்கள் சிறந்த முன்னோடிகளை தேர்வு செய்து அவர்களது வாழ்க்கையில் இருந்து சிறந்தவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

    திருச்சி என்.ஐ.டி. தலைவர் பாஸ்கர் பட் பேசுகையில், இந்தியாவில் உள்ள என்.ஐ.டி.க்களில் திருச்சி முதலிடத்தை பெற்றிருப்பது பாராட்டுதலுக்குரியது. மாணவர்கள் அறிவை மேம்படுத்தும் வகையில், நவீன உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதிநவீன உந்து சக்திக்கான ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை வளர்ப்பதற்காகவும் திருச்சி என்.ஐ.டி. தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்றார்.

    திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் அகிலா பேசுகையில், ஒருங்கிணைந்த எம்.டெக்., பி.எச்.டி. படிப்புகளுடன் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவதிலும் முன்னிலை வகிக்கிறது.

    தென்னிந்தியாவில் 67 கல்லூரிகள், 15 தொழில்கள் மற்றும் 5 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு பரிமாணமங்களில் வேலை வாய்ப்புகளை என்.ஐ.டி. உருவாக்கியுள்ளது என்றார்.

    விழாவில் பல்வேறு துறைகளின் புல முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    ×