என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non Veg Recipes"

    • சிக்கனில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம்.
    • தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    சர்க்கரை - 1 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    வரமிளகாய் - 2

    கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    அரைத்த தக்காளி - 1 கப்

    நெய் - 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)

    கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும்.

    பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கிய பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    பிறகு அதில் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    பின் மூடியைத் திறந்து, அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

    சிக்கனானது நன்கு வெந்தது நெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!

    • சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று சிக்கன் சூப் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 300 கிராம்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    தண்ணீர் - 2 கப்

    அரைப்பதற்கு...

    சின்ன வெங்காயம் - 10

    கொத்தமல்லி - 1/4 கப்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

    ஏலக்காய் - 1

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    கறிவேறிப்பிலை - சிறிது

    பெரிய வெங்காயம் - 1 சின்ன வெங்காயம்

    செய்முறை:

    * முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

    * பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    * பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

    * பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    * பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.

    • ஆட்டு கறியில் பல வகையான உணவுகளை செய்யலாம்.
    • இன்று ஆட்டுக் குடலில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஆட்டுக் குடல் - அரை கிலோ

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்

    மஞ்சள்த்தூள் - சிறிதளவு

    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய்,

    தண்ணீர் - தேவைக்கேற்ப

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில், குடலை நன்றாக வாசனை வராத அளவு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுத்து இஞ்சி, பெருஞ்சீரகத்தை தட்டி வைக்கவும்.

    மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம் இஞ்சியை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்த வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் கழுவிய குடல், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம் 1 டீஸ்பூன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 15 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    கடைசியாக சிறிது கொத்தமல்லி, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான ஆட்டுக் குடல் சூப் ரெடி

    • குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று மீன், தேங்காய் சேர்த்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    துண்டு மீன் - 250 கிராம்

    சோளமாவு - 2 ஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்

    எலுமிச்சை பழம் - பாதி

    மிளகு பொடி - 1 ஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    தேங்காய் துருவல் - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.

    அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.

    • ஹோட்டலில் இந்த பரோட்டா வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று இந்த பரோட்டாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 500 கிராம்

    தயிர் - 3 தேக்கரண்டி

    பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

    வெண்ணெய் - 3 தேக்கரண்டி

    முட்டை - 2

    உப்பு - தேவையான அளவு

    கொத்துக்கறி மசாலாவிற்கு தேவையான பொருட்கள்

    கொத்துக் கறி - 500 கிராம்

    பெரிய வெங்காயம் - 2

    பூண்டு - 4 பல்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 2

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 4 மேஜைக் கரண்டி

    செய்முறை:

    கொத்துக் கறியுடன் மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, கொத்துக் கறியைப் போட்டு கிளறவும்.

    மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு போட்டுக் கிளறி நன்றாக வதக்கி, கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.

    பரோட்டா செய்முறை:

    மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், வெண்ணெய், தயிர் இவற்றைப் போட்டுக் கலந்து, பிசைந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.

    முட்டையுடன் சிறிது உப்புத் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும்.

    மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, மிக மெல்லியதாக தேய்க்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் விரித்த மாவைப் போட்டு, முட்டையை கரண்டியில் எடுத்து பரவலாக தடவவும்.

    கொத்துக்கறி மசாலாவை இதன் மீது பரப்பவும். மாவை, இடது பக்கமும், வலது பக்கமும் மடக்கி மூடவும். கவனமாக திருப்பிப் போட்டு, பொன்நிறமானதும் எடுத்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான முட்டை கொத்துக்கறி பரோட்டா ரெடி.

    • இதில் புரோட்டின் சத்து அதிகம் உள்ளது.
    • இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

    தேவையான பொருட்கள் :

    கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    முட்டை - 3

    மிளகுத் தூள், சீரகத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்

    ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லித் தழை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வையுங்கள். மறுநாள் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வையுங்கள்.

    வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள்.

    முட்டை உதிரியாக வந்ததும் வேக வைத்த கடலையைச் சேர்த்து சிறு தீயில் சிறிது நேரம் வையுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரியுங்கள்.

    புரோட்டின் சத்து அதிகம் உள்ள இந்த சுண்டல், வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

    • ஒரு முட்டையில் 72 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் இருக்கிறது.
    • முட்டையை வைத்து ஏராளமான உணவு வகைகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    வேக வைத்த முட்டை- 4

    சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்

    சீரகத் தூள்- 1/4 டீஸ்பூன்

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்

    மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    சோள மாவு- ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்

    மல்லித் தூள்- 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

    உப்பு- 1/4 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை- சிறிதளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    மசாலா செய்ய :

    வெங்காயம் - 1

    சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்

    தக்காளி - 1

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட்- ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

    உப்பு- 1/4 டீஸ்பூன்

    கொத்தமல்லி தழை- சிறிதளவு

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    வேக வைத்த முட்டையை துருவிக் கொள்ளவும்.

    துருவிய முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

    இப்போது இந்த கலவையில் சோள மாவு சேர்த்து உருண்டையாக பிடிக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    இதே தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.

    இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

    ஒரு கொதி வந்தவுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம்.

    கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவவும்.

    இந்த சமயத்தில் நாம் தயார் செய்து வைத்த முட்டை கபாபை சேர்த்து விடலாம்.

    அவ்வளவு தான்… ருசியான முட்டை கபாப் தயார்.

    • வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும்.
    • முட்டைப் பிரியர்களுக்கு கரண்டி ஆம்லெட் நல்ல மாற்று.

    தேவையான பொருட்கள் :

    முட்டை - 1

    சின்ன வெங்காயம் - கைப்பிடி

    ப.மிளகாய் - 1

    கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், கறிவேப்பிலை, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஒரு குழிக்கரண்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.

    இப்போது சூப்பரான கரண்டி ஆம்லெட் ரெடி.

    ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இது போன்று செய்து கொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.

    • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    முட்டையை நிரப்புவதற்கு

    முட்டை - 4

    எண்ணெய் - 3 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    உப்பு - 1/4 தேக்கரண்டி

    மிளகு - தேவைக்கு

    முட்டை மஞ்சள் கரு - 1

    கொத்துமல்லி தழை - சிறிதளவு

    மாவு தயாரிக்க

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

    உப்பு - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    ஓமம் - 1/4 தேக்கரண்டி

    தண்ணீர்

    செய்முறை

    * வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முட்டையை வேக வைத்து கொள்ளவும். வெந்த முட்டையின் ஓடுகளை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டி வைத்து மஞ்சள் கருவையும் வெள்ளை கருவையும் தனி தனியாக எடுத்து வைக்கவும்

    * முட்டையின் வெள்ளை கருவை நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்தது வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகு தூள், முட்டையின் வேகவைத்த மஞ்சள் கரு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    * தயாரான கலவையை முட்டையின் வெள்ளை கருவில் சேர்த்து வைக்கவும்

    * போண்டா மாவு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கரைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூடான மற்றும் சுவையான முட்டை போண்டா தயார்.

    • பன்னீரில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவும்.
    • சிறு வயதிலே மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பன்னீர் சிறந்த தீர்வு.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 5

    பன்னீர் - அரை கப்

    பச்சை மிளகாய் - 4

    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவைகேற்ப

    செய்முறை

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், ப.மிளகாய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பன்னீர் ஆம்லெட் ரெடி.

    • இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    ஈரல் - 500 கிராம்

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    பச்சை மிளகாய் - 2

    வர மிளகாய் - 5

    மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை - இரண்டு கொத்து

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஈரல் கலவையை சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொழுது தான் ஈரல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும்.

    பின்னர் மீதமுள்ள மிளகு தூளை தூவி கரண்டி போட்டு கிளற வேண்டும்.

    எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

    கடைசியாக அதன் மீது கொத்தமல்லித்தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.

    • குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிக்கனை ஊறவைக்க...

    சிக்கன் லெக் பீஸ் - 7

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்

    தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    முட்டை - 1

    சோள மாவு - 1 டீஸ்பூன்

    மைதா - 1 டீஸ்பூன்

    எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

    சாஸ் செய்ய

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    பூண்டு - 2 பல்

    இஞ்சி - 2

    சிவப்பு மிளகாய் - 2

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்

    தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு

    வெங்காய தால் - கார்னிஷ் செய்ய

    செய்முறை

    பூண்டு, சிவப்பு மிளகாய், வெங்காய தாள், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி கெட்ச்அப், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், முட்டை, சோள மாவு மற்றும் மைதா மாவு போட்டு நன்றாக கலந்து அதில் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும், அதனை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். சிக்கன் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.

    ஒரு காடாயினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி, புதிய சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், மிளகாய் சாஸ் மற்றும் தக்காளி கெட்ச்அப் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    கடைசியாக அதில் வறுத்த சிக்கன் போட்டு மசாலா சிக்கனை சேரும் படி 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    இறுதியாக, அதில் வெங்காய தாள் தூவி இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் லாலிபாப் மசாலா ரெடி.

    ×