என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "northern Gaza"

    • கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
    • 'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல'

    கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர்.

    இரத்னனைதொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா தெரிவிக்கிறது. காசா நகரம் முற்றாக சிதைக்கப்பட்டு கட்டடங்கள் கற்கலாக மட்டுமே மிஞ்சின. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

     

    இதற்கிடையில் கடந்த ஜனவரியில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. இதன்மூலம் இஸ்ரேலிய பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் கடந்த மார்ச் 1 ஆம் தேதி போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இன்னும் 59 பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர். அவர்களில் 24 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    அவர்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. காசாவின் கிட்டத்தட்ட 2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியது.

    மேலும் கடந்த வாரம் முதல் இஸ்ரேல் மீண்டும் காசா மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர். காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 50,000 த்தை கடந்துள்ளது.

    இந்நிலையில் போரை நிறுத்த கோரி வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

    நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியாவில் சேதமடைந்த கட்டுமானங்களுக்கிடையே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்

    'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல' போன்ற முழக்கங்களை மக்கள் எழுப்பினர். "ஹமாஸே வெளியேறு!" என்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். ஹமாஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைப்பதை வீடியோக்களில் காண முடிகிறது.

    போராட்டத்தில் சேருமாறு டெலிகிராம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் ஹமாஸ் காசாவை நிர்வகித்து வருகிறது. காசா மக்களை பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.

    நினைத்த இடத்தில் குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கானோரை கொன்றுவிட்டு, ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் சாக்கு சொல்லி வரும் வேளையில் இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. போர் மற்றும் பட்டினியால் விரக்தியின் உச்சத்தில் உள்ள காசா மக்களுக்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்பதே சர்வதேச சமூகத்தில் கேள்வியாக உள்ளது. 

    • அல் ஷிபாவில் சுமார் 1500 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்
    • தாக்குதல்களிலிருந்து தப்பிக்க புகலிடம் தேடி 15 ஆயிரத்திற்கும் மேல் அங்கு சென்றுள்ளனர்

    வடக்கு காசாவில் அல் ஷிபா மற்றும் அல் குத்ஸ் எனும் 2 மருத்துவமனைகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அந்த மருத்துவமனைகள் புதிய நோயாளிகளுக்கு அனுமதியின்றி மூடப்பட்டுள்ளன.

    எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், முன்னரே அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    அல் ஷிபா மருத்துவமனையில் 1500 நோயாளிகள் மற்றும் 1500 மருத்துவ பணியாளர்களும் உள்ளனர்.

    இது மட்டுமின்றி, ஆங்காங்கே நடைபெறும் குண்டு வெடிப்புகளால், சுமார் 15 ஆயிரம் பேர் அங்கு புகலிடம் தேடி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மருத்துவமனை வாசலிலேயே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் சண்டை நடப்பதாகவும் மக்கள் வெளியேற உதவுவதாக இஸ்ரேல் கூறுவது உண்மையில்லை என்றும் மருத்துவ பணியாளர்கள் கூறுகின்றனர்.

    காசா மருத்துவமனைகளை ஹமாஸ் மறைவிடங்களாக பயன்படுத்துவதால் அவற்றின் அருகே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், மருத்துவமனைகளை அவ்வாறு பயன்படுத்தவில்லை என ஹமாஸ் மறுக்கிறது.

    இந்நிலையில், புகலிடம் தேடி அங்கு சென்றுள்ள 15,000 பேர் கதி குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.

    • வடக்கு காசாவுக்கு நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
    • பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.

    காசா:

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இதில் ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்தது. அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஒப்பந் தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண் பிணைக்கைதியை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

    அவர் விடுதலை செய்யப்படும் வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. அவர் வருகிற 1-ந்தேதி விடுவிக்கப்படுவார் என்று ஹமாஸ் தெரிவித்தது.

    இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதையடுத்து வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.

    இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காசாவுக்கு திரும்புகிறார்கள். அவர்கள் நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடற்கரையை ஒட்டிய பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.


    காசா மீது இஸ்ரேல் போரை தொங்கியபோது வடக்கு காசாவை முதல் முதலில் குறிவைத்து சரமாரியாக தாக்கியது. அங்கிருந்த கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.

    தாக்குதல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அகதிகள் முகாம், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

    • ஆறு வார போர்நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவடைய உள்ளது.
    • அவர்கள் கட்டடங்களை மட்டும் அழிப்பதில்லை, அவர்கள் எங்களையும் எங்கள் அடையாளத்தையும் அழிக்கிறார்கள்

    'தற்காலிக' போர் நிறுத்தம்

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    இந்நிலையில் இடிபாடுகளால் சூழப்பட்ட காசாவுக்கு திரும்பிய லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இடத்தையும் வாழ்க்கையும் மீண்டும் கட்டமைக்க போராடி வருகின்றனர்.

     

    இடிபாடுகளுக்கிடையில் வடக்கு காசா

    ஐநா கூற்றுப்படி, காசாவில் ஒரு மாதமாக நீடிக்கும் போர் நிறுத்தத்தின் கீழ் கிட்டத்தட்ட 600,000 பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்குள் மீண்டும் வந்தனர்.

    அவர்களின் ஒரு குடும்பம் ராவ்யா தம்பூராவினுடையது. தனது இளம் மகன்களுடன் இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் குவிந்த இடிபாடுகளுக்கிடையில் வாழ்ந்து வருகிறார்.

    16 மாத காலப் போருக்கு பிறகு தம்பூரா தனது இடிபாடுடைய வீட்டுக்கு திரும்பி வந்தார். குழாய் நீர், மின்சாரம் என அத்தியாவசிய வசதிகள் இல்லாமல், சுற்றியுள்ள இடிபாடுகளை அகற்ற எந்த கருவிகளும் இல்லாமல் அவர்கள் திகைத்து நிற்கின்றனர்.

    இதுவே அங்கு திரும்பி வந்த 600,000 சொச்சம் மக்களின் சிரமமும் ஆகும். மறுகட்டமைப்பு வேலையைத் தொடங்க வழி இல்லை. இடிபாடுகளுக்கிடையில் என்றென்றும் வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    "சிலர் போர் ஒருபோதும் முடிவடையாமல் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கொல்லப்படுவது நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார்கள்," என்று தம்பூரா கூறுகிறார். "நீண்ட காலத்திற்கு நாம் என்ன செய்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. என் மூளை எதிர்காலத்திற்கான திட்டமிடலை நிறுத்தியது" என்று அவர் கூறுகிறார்.

     

    எதிர்காலம் என்ன?

    ஆறு வார போர்நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவடைய உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடையும் போது அமைதி நீடிக்க உத்தரவாதம் இல்லை. மீண்டும் சண்டை வெடித்தால், வடக்கு காசாவுக்கு திரும்பியவர்கள் நிலை மீண்டும் முன்போலவே நரகமாக மாறும்.

    உலக வங்கி, ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல்களால் முழு இடமும் அழிந்த பின்னர், காசாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

     ஐ.நா.வின் கூற்றுப்படி, போர் நிறுத்தத்துக்குப் பின், மனிதாபிமான உதவி அமைப்புகள் பணிகளை முடுக்கிவிட்டன. இலவச சமையலறைகள் மற்றும் நீர் விநியோக நிலையங்களை அமைத்தல் மற்றும் காசா முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்குக் கூடாரங்கள் விநியோகித்தல் ஆகியவை முழு வீச்சில் நடந்தன.

    காசா நகராட்சி நீர் குழாய்களை சரிசெய்யவும், தெருக்களில் இருந்து இடிபாடுகளை அகற்றவும் தொடங்கியது. ஆனால் அதை முழு வீச்சில் செய்ய கனரக உபகரணங்கள் இல்லை. நகராட்சியின் 40 புல்டோசர்கள் மற்றும் ஐந்து டம்ப் லாரிகளில் சில மட்டுமே இன்னும் வேலை செய்கின்றன என்று செய்தித் தொடர்பாளர் அசெம் அல்னாபிஹ் கூறுகிறார்.

    காசா 50 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கட்டட இடிபாடுகளால் நிரம்பியுள்ளது. 100 லாரிகள் 15 ஆண்டுகள் முழு திறனில் இயங்கினால் மட்டுமே அதை அகற்ற சாத்தியப்படும் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது.

    அழிக்கப்படும் அடையாளம்

    காசா குடும்பங்கள் ஒவ்வொரு நாளாக வாழ்க்கையை கடந்த முயற்சிக்கின்றன. 25 வயதான பல் மருத்துவர் அஸ்மா த்வைமாவும் அவரது குடும்பத்தினரும் காசா நகரத்திற்குத் திரும்பிய மற்றொரு குடும்பம். டெல் அல்-ஹவா பகுதியில் உள்ள அவர்களின் வீடு அழிக்கப்பட்டது .

    திரும்பி வந்த சில வாரங்களுக்குப் பிறகு, இப்போது தட்டையான மற்றும் எரிந்த இடிபாடுகளின் குவியல் போல இருக்கும் அவர்களின் நான்கு மாடி வீட்டைப் பார்த்து அவர் பெருமூச்செறிகிறார்.

    இஸ்ரேல் மக்களை மட்டும் கொள்ளவில்லை. வீடு, நகரம் என்ற அவர்களுக்கு நெருக்கமானவற்றை அளிப்பதன் மூலம் அந்நகருடனான அவர்களது அடையாளத்தை அளிக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

    "நான் பயந்ததால் இங்கு வர முடியவில்லை. என் மனதில் என் வீட்டில் அழகு மற்றும் அரவணைப்பு இருந்தது. ஆனால் இப்போது அது இல்லை என்ற இந்த உண்மையை எதிர்கொள்ள நான் பயந்தேன். அவர்கள் கட்டடங்களை மட்டும் அழிப்பதில்லை, அவர்கள் எங்களையும் எங்கள் அடையாளத்தையும் அழிக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார். 

     

    ×