என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nr congress"

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.
    • என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    புதுவை அமைச்சரவை யில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் 4 அமைச்சர்களும், பா.ஜனதா தரப்பில் 2 அமைச்சர்களும், சபாநாயகரும் உள்ளனர். என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜனதாவுக்கும் 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.

    இதோடு புதுவை சட்ட மன்றத்தில் உள்ள 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவை ஆதரிக்கின்ற னர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஆட்சி அமைந்தது முதலே என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணியில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருகிறது.

    முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலும் சட்ட சபைக்கு வெளியிலும் பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    புதிய மது ஆலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக சட்டசபையிலேயே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அதோடு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கூட தங்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அளிப்பதில்லை என்றும் புகார் செய்தனர்.

    வளர்ச்சிப் பணிகளில் தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி சட்டசபை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நடத்தியுள்ளனர். கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் தொடர்ந்து சலசலப்புகள் இருந்தாலும் ஆட்சி தொடர்ந்தது.

    இந்தநிலையில் பாராளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி சார்பில் பா.ஜனதா அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வி என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.

    அதோடு தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகவே பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி உயர்த்தி உள்ளனர். தேர்தல் தோல்விக்கு பிறகு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என்றும் அரசு நிர்வாகத்தில் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.

    இதன் தொடர்ச்சியாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை கவர்னர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதங்கத்தை கவர்னரிடம் குமுறியுள்ளனர்.

    ஆனால், கவர்னருடனான சந்திப்பு குறித்து கேட்ட போது தொகுதியில் வளர்ச்சி பணிகளை துரிதப் படுத்தவும், குடியிருப்பு, பள்ளி, கல்லூரிகளிடை யிலான ரெஸ்டோ பார் களை அகற்றவும் கவர்னரி டம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் நேற்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்த திருபு வனை தனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசிய ஆடியோ வெளியானது. இதில் அங்காளன் எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்து பேசிய விரங்களை தெரிவித்துள் ளார்.

    அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜனதா அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களையும் புரோக்கர் கள் துணையோடு முதல்- அமைச்சர், அமைச்சர்கள் லஞ்சம் பெறுவதாகவும் கவர்னரிடம் எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்ததாக பகிரங்கமாக தெரிவித்துள் ளார்.

    இதேநிலை நீடித்து கூட்டணி ஆட்சி தொடர்ந் தால் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்திக்க வேண்டியதிருக்கும். கூட்டணி தர்மத்தை மதிக்காத முதல்-அமைச்சர் ரங்கசாமியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்ததாகவும் அங்காளன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    இந்த ஆடியோ புதுவை மக்களிடம் வைரலானது. மேலும் பா.ஜனதா தலைமையை சந்தித்து பேச எம்.எல்.ஏ.க்கள் நேரம் கேட்டு கடிதமும் எழுதியுள்ளனர். இதனால் புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

    இது புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா அரசை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவோம்.
    • புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளிக்கும்

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாக குழு கூட்டம் முதலியார்பேட்டை, கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    கட்சியின் மாநில செயலாளர் அ.மு.சலீம் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    தேர்தல் தோல்வியை மறைக்க என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா உட்கட்சி பிரச்சனை என்று நாடகமாடுகிறார்கள் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது.

    ஆட்சி ஆளும் தார்மீக உரிமையை இழந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த மக்கள் விரோத என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா அரசை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவோம்.

    மக்களை பாதிக்கின்ற 3 குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்த வேண்டாம் என்றும் அதற்காக போராடும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளிக்கும்

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
    • முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவரும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும்.

    புதுச்சேரி:

    த.வெ.க. தலைவர் விஜய்க்கும், புதுவை மாநில முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமிக்கும் இடையே வயதை தாண்டிய புரிதலும், நட்பும் உள்ளது.

    விஜய் கட்சி தொடங்கும் முன்பும், மாநாட்டுக்கு முன்பும் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியிடம் சில ஆலோசனைகளை பெற்றதாக கூறப்படுகிறது.

    இதனால் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவையில் த.வெ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுவையில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக புதுவை பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கூட்டணி அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அல்லது த.வெ.க. தலைவர் விஜய் ஏதாவது கூறியுள்ளார்களா? பொதுவாக தேர்தல் குறித்து மக்களிடம் பல்வேறு கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் நிலவுவது வழக்கம். அது பொய்யாகவும் இருக்கலாம், உண்மையாகவும் இருக்கலாம்.

    அந்த கருத்து யார் வாயால் கூறப்படுகிறது என்பதுதான் முக்கியம். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் கூறினால்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமியும், த.வெ.க. தலைவர் விஜயும் கூட்டணி குறித்து அறிவிக்கட்டும், அதன்பிறகு பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை சொல்லும். வதந்திகளுக்கு பதில் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
    • காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகிய ரங்கசாமி, பிப்ரவரி 7-ந் தேதி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழா இன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    முதலமைச்சர் ரங்கசாமி அலுவலக வாசலில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி கட்சி அலுவலகத்தில் உள்ள சாமி படங்களுக்கு பூஜை செய்தார்.

    தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் அரசு பணிகளே நடைபெறாத சூழ்நிலை இருந்தது. எமது அரசு பொறுப்பேற்றது முதல் காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். அரசின் அனைத்து துறையிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மீதமுள்ள காலிபணியிடங்களையும் நிரப்புவோம்.

    ஆளும்கட்சி, எதிர்கட்சி என எம்.எல்.ஏ.க்களில் வேறுபாடும், வித்தியாசமும் பார்க்காமல், மாநில வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்.

    கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது 11 தொகுதிகளுக்கு நிர்வாகிகள் நியமித்துள்ளோம். மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை இருந்து வருகிறது. தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும்.

    காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும். மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள். அரசிடமும் தெரிவியுங்கள், அரசு அதை நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரங்கசாமி-விஜய் இடையே சுமூக உறவு உள்ளது.
    • இவர்களுக்கு இணைப்பாக த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆண்டு விழா கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும் முதல்-அமைச்சருமான ரங்கசாமி பேசினார். அப்போது வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை அரசியல் ரீதியாக உருவாக்கியுள்ளது.

    தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் பா.ஜ.க. விரும்புகிறது.

    அதே நேரத்தில் தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பு இந்த கூட்டணியை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

    புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, மயிலாடுதுறை ஆகிய தமிழக பகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில் அவர் சார்ந்த சமூகத்தினரும் அதிகளவில் உள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது த.வெ.க.வைத் தொடங்கி ஓராண்டு நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் நடிகர் விஜயை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். முதல்-அமைச்சர் என்ற புரோட்டா காலை காட்டிக்கொள்ளாமல் தனக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில் ரங்கசாமி நேரில் சென்று விஜயை சந்தித்தார்.

    அதன் பிறகு நடிகர் விஜய், முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்.

    இவர்களுக்கு இணைப்பாக த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கும்போது அதற்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். தொடர்ந்து கட்சி முதல் மாநாட்டின் போதும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை விஜய் அழைப்பார் என்ற பேச்சு எழுந்தது. இதனால் ரங்கசாமி-விஜய் இடையே சுமூக உறவு உள்ளது.

    இந்த எண்ணத்தில்தான் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார் என என்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் கருதுகின்றனர்.

    இந்த நிலையில் தனது கொள்கை விரோதியாக தி.மு.க., பா.ஜ.க.வை த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

    இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் 2026 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என பதிலளித்தார்.

    புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #NRCongress #Rangasamy #ECFlyingSquad
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.
    தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    பணம் பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை நடத்தினர்.

    நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று நடைபெறும் சோதனையால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #NRCongress #Rangasamy #ECFlyingSquad
    இலவச அரிசி திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி வினியோகம் செய்ய விடாமல் ரங்கசாமி தடுத்ததாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தொகுதி, தொகுதியாக, வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று உப்பளம் தொகுதியில் வீதி, வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். சின்னமணிக்கூண்டு அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரசாரத்தின் போது பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. ரங்கசாமியை ஜெயலலிதா துரோகி என விமர்சித்தபோதும் அ.தி.மு.க.வினருடன் கூட்டணி வைத்துள்ளார்.

    மோடியும், பேடியும் சேர்ந்து புதுவையில் எந்த திட்டத்தையும் செயல்படுத்த விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு மூலகாரணமாக இருப்பவர் ரங்கசாமி. இதை கண்டித்துத்தான் நாங்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்துக்கு பிறகு தான் அரிசி வந்தது. அதையும் தேர்தலை காரணம் காட்டி வினியோகம் செய்ய விடாமல் ரங்கசாமி தடுத்துள்ளார்.

    தமிழகத்திலும், ஆந்திராவிலும் தேர்தல் நடைமுறையில் இருக்கும் போது இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. துறைமுகத்திற்காக ரூ.64 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம். உப்பளத்தில் 900 வீடுகள் கட்ட திட்டமிட்டு உள்ளோம்.

    மீனவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும். இதற்கு கை சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது அமைச்சர் கந்தசாமி, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், முருகன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். #Loksabhaelections2019 #Narayanasamy
    பாராளுமன்ற தேர்தலில் ரங்கசாமி பண அரசியல் செய்கிறார் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கதிர்காமம் தொகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    மத்தியில் ஆளும் நரேந்திர மோடி ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வேலை வாய்ப்புகள் இல்லை. விலைவாசி குறைக்கவில்லை. தொழிற்சாலைகள் கொண்டு வருவேன், விவசாயத்தை மேம்படுத்துவேன், அரசு ஊழியர் சம்பளம் உயர்த்துவேன் என மோடி கூறினார். இதில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை.

    பா.ஜனதாவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது.

    காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பொது, அரசியல் வாழ்க்கையில் அனுபவம் பெற்றவர். எதிர்கட்சி வேட்பாளருக்கு என்ன அனுபவம் உள்ளது? பணம் இருப்பது மட்டும்தான் அனுபவம். பணம் இருந்தால் என்.ஆர்.காங்கிரசில் சீட் கிடைக்கும். பணம் இல்லாவிட்டால் உழைப்பவர்களுக்கும் சீட் கிடைக்காது. பணம் மட்டும்தான் அவரிடம் உள்ளது. ரங்கசாமி பண அரசியல் செய்கிறார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்த வைத்திலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் வெற்றி பெற்றால் மத்திய அரசிடம் கேட்டு புதுவைக்கு பல புதிய திட்டங்களை கொண்டு வருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரச்சாரத்தின்போது துணைத்தலைவர் பெத்த பெருமாள், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் கே.எஸ்.பி. ரமேஷ், தி.மு.க. தங்கவேலு, இந்தியகம்யூனிஸ்டு நாரா.கலைநாதன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், மதி.மு.க. கபிரியேல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சஞ்சீவி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாளை பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். 

    என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் டாக்டர் நாராயணசாமி கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டி வந்தார். 
    என்ஆர்.காங்கிரஸ் சார்பில் நாளை முதல் தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் தொடங்க உள்ளது. நாளை காலை 7 மணிக்கு கனகசெட்டிகுளம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் அருகில் இருந்து பிரசாரம் தொடங்குகிறது. 

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று அவர் பிரசாரம் செய்கிறார். அவர் கங்கையம்மன் கோவில் தேரோடும் வீதி, பெரிய காலாப்பட்டு சந்திப்பு, சுனாமி குடியிருப்பு, பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதி, திடீர் நகர், சின்ன காலாப்பட்டு, நடுத்தெரு, பிள்ளைச்சாவடி சந்திப்பு, ஆதிதிராவிடர் குடியிருப்பு, கருவடிகுப்பம் பாரதிநகர், இடையன்சாவடி வழியாக கருமுத்து மாரியம்மன் கோவில், நாகம்மன் கோவில், நாவற்குளம், கடும்பாடி மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 

    இதைத்தொடர்ந்து புதுவையில் உள்ள 23 தொகுதிகளுக்கும், காரைக்கால், மாகி, ஏனாமிற்கும் சென்று ரங்கசாமி பிரசாரம் செய்ய உள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவையில் ஆட்சி மாற்றம் வரும் என்று தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #nrcongress #admk
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதுவையில் பிரசாரம் செய்தார்.

    மதகடிப்பட்டு, வில்லியனூர், ராஜீவ்காந்தி சிலை சதுக்கம், மரப்பாலம், தவளகுப்பம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி. மு.க.கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர்கள் 2 பேரையும் தேர்வு செய்தால் புதுவையின் பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

    புதுவையில் நிலவும் பிரச்சினைகளை களைவதில் நல்ல உறுப்பினர்களாக அவர்கள் செயல்படுவார்கள். புதுவை மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கை மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால் மாநில அந்தஸ்து பெற்றுத்தர உறுதியாக செயல்படுவார். இந்த முயற்சிக்கு அ.தி.மு.க. உறுதுணையாக நின்று முழு முயற்சி எடுக்கும். புதுவையில் 3 ஆண்டுகளாக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. மக்களுடைய தேவைகளையும், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய தொலைநோக்கு திட்டங்களையும் பெறுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. மாநில மக்கள் வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்து வருகின்றனர். ஏதோ ஒரு நாடகம் நடத்துவது போல ஆளும் கட்சி நடந்து கொண்டிருக்கிறது.

    நாங்கள் அதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும். இங்கு ஒரு நல்ல ஆட்சி, நிலையான ஆட்சி, மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கான ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர பேசினார். #opanneerselvam #nrcongress #admk
    புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ரங்கசாமி நாளை அறிவிக்கிறார். #rangasamy #parliamentelection

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தை சேர்ந்த டாக்டர் நாராயணசாமி கேசவன் போட்டியிடவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் நேற்றைய தினம் ரங்கசாமி வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியுடன் திருச்செந்தூர் சென்றார். அங்கு சிறப்பு பூஜை செய்து சாமிதரிசனம் செய்தார்.

    இதைத்தொடர்ந்து புதுவைக்கு திரும்பிய ரங்கசாமி இன்று சேலத்தில் உள்ள தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலுக்கு சென்றார். அவருடன் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியும் சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இன்று மாலை 4 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஓட்டல் அண்ணா மலையில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு ஆகியவை நியமிக்கப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிவிக்கிறார்.

    அதேநேரத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நாளை அறிவிக்கவில்லை. ஓரிரு நாட்களில் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு என்ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. #LSpoll #ADMK #NRCongress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக மற்றும் பா.ஜ.க ஆகியவை இடம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, சென்னையிலுள்ள அதிமுக அலுவலகத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று மாலை வந்தார். கூட்டணி பற்றி அதிமுக நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேறி தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதுதொடர்பாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், அதிமுக கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். #LSpoll #ADMK #NRCongress
    ×