என் மலர்
நீங்கள் தேடியது "NTA"
- மாணவர்கள் அடையாளத்தை மறைத்து முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
- 20-ந்தேதி மதியம் 12 மணிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET-UG) கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்னதாக வினாக்கள் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்வு முடிவு வெளியானபோது, பல மாணவர்கள் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை பெற்றனர். இதுகுறித்து தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது.
இதனால் மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகவை மறு தேர்வு நடத்த சம்மதம் எனத் தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு வழங்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தது.
நீட் தொடர்பான அனைத்து மனுக்கள் இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையின் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட மறுத்தது.
இந்த நிலையில் தேசிய தேர்வு முகவை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் நீட் தேர்வு முடிவை வருகிற 20-ந்தேதி மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும். மாணவர்கள் பெயர்களை மறைத்து மதிப்பெண்களை வெளியிட வேண்டும் அப்போதுதான் நடந்ததை அறிய முடியும் என நீதிபகள் தெரிவித்தனர்.
அப்போது உத்தரவை மாற்ற வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
- நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
- நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET-UG) கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்னதாக வினாக்கள் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்வு முடிவு வெளியானபோது, பல மாணவர்கள் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை பெற்றனர். இதுகுறித்து தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது.
இதனால் மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகவை மறு தேர்வு நடத்த சம்மதம் எனத் தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு வழங்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தது.
நீட் தொடர்பான அனைத்து மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையின் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட மறுத்தது.
ஆனால், தேசிய தேர்வு முகவை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் நீட் தேர்வு முடிவை வருகிற 20-ந்தேதி மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும். மாணவர்கள் பெயர்களை மறைத்து மதிப்பெண்களை வெளியிட வேண்டும் அப்போதுதான் நடந்ததை அறிய முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய தேர்வு முகமையின் தலைவர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்.
- தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள்.
புதுடெல்லி:
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்நிலையில், நேற்று மக்களவை கேள்வி நேரத்தின்போது, தேசிய தேர்வு முகமையில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்? என்று திமுக எம்பி கனிமொழி கருணாநிதி கேட்டார்.
அதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுகந்த மஜும்தார் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
தேசிய தேர்வு முகமையின் தலைவர், மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். அங்கு தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள்.
ஆனால் போட்டித்தேர்வுகளின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட மையப்பணிகளை வெளி ஊழியர்களுக்கு அளிப்பது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய தேர்வு முகமையில் புதிதாக 10 பதவிகள் உருவாக்கப்பட இருக்கிறது.
- நுழைவுத் தேர்வில் எந்த விதமான முறைகேடும் நடக்காததை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.
மறுசீரமைப்புக்கான உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் ஒரு பகுதியாக அடுத்த வருடத்தில் இருந்து NTA (தேசிய தேர்வு முகமை) ஆள்சேர்ப்பு தேர்வு போன்றவற்றை நடத்தாது. உயர் கல்வி நுழைவு தேர்வுகளில் கவனம் செலுத்தும் என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மேலும், என்.டி.ஏ.-வில் புதிதாக 10 பதவிகள் சேர்க்கப்பட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட இருக்கிறது. நுழைவுத் தேர்வில் எந்தவிதமான முறைகேடும் நடக்காததை உறுதி செய்யும் வகையில் செயல்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கிறது.
பொதுவான பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (Common University Entrance Test: CUET- UG) வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். பாரம்பரிய பென்-பேப்பர் அடிப்படையிலான நீட் நுழைவுத் தேர்வை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வாக மாற்றலாமா? என சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் விவாதிப்போம். அரசாங்கம் விரைவில் கணினி தகவமைப்புத் தேர்வு (computer adaptive test) மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கு (technology-driven entrance exams) மாறுவதைப் பரிசீலித்து வருகிறது" என்றார்.
கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து விட்டபோதிலும், குறிப்பிட்ட சில மையங்களில் தேர்வு எழுதியவர்கள் விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதலாம் என உத்தரவிட்டது.
- கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
- நீட் தேர்வு Pen-Paper முறையிலேயே நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதற்கிடையே என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவு தேர்வு முறையை அரசு மாற்றியமைத்தது. இதனால் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முறையில் மாற்றம் வருமா என்பதை அறிய மாணவர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்த நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு இந்தாண்டு வழக்கம்போல் OMR முறையிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் நடத்தப்பட வாய்ப்பு என கூறப்பட்ட நிலையில் Pen -Paper முறையிலேயே நடக்கும் என்றும் குறிப்பாக ஒரே நாளில் ஒரே ஷிஃப்ட்-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.