search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Odisha Rail Accident"

    • ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் சுமார் 300 பேர் பலியாகினர்.
    • எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் எனும் தொழில்நுட்ப கோளாறே விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது.

    ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், எஸ்.எம்.வி.டி பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று ஜூன் 2-ம் தேதி மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சுமார் 300 பேர் பலியாகினர். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


    இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் எனப்படும் தொழில்நுட்ப கோளாறு தான் விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு பின், ரெயில்வே அதிகாரிகள் சிலரை கைதுசெய்தனர். இந்தக் கோர விபத்து இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

     


    • ரெயில்வே மூத்த பொறியாளர் ஏ.கே.ஸ்பாட் மற்றும் மற்றொரு அதிகாரி மஹிந்தா ஆகியோர் ஒரு சிக்னல் பிழையே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
    • மற்ற அதிகாரிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்தது விபத்துக்கு காரணம் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ந்தேதி இரவு நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே ரெயில்வே துறை சார்பில் 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இரண்டு பக்க விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில் ரெயில்வே மூத்த பொறியாளர் ஏ.கே.ஸ்பாட் மற்றும் மற்றொரு அதிகாரி மஹிந்தா ஆகியோர் ஒரு சிக்னல் பிழையே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

    மற்ற அதிகாரிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நுழைந்தது விபத்துக்கு காரணம் தெரிவித்துள்ளனர். ஆனால் மகிந்தா இதை மறுத்துள்ளார். லெவல் கிராசிங் கேட் எண் 94-க்கு முன்னால் ரெயில் தடம் புரண்டதாகவும், இதனால் லூப் லைனுக்கு மாறுவதற்கு முன்பு விபத்து நடந்ததாகவும் வாதிட்டுள்ளார். மேலும் ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் மெயின் லைன் வழியாக சிக்னல் மற்றும் பாயிண்ட் அமைக்கப்படும்போது லூப் லைனில் ரெயில் நுழைவதற்கான சாத்திய கூறு இல்லை என்று நிராகரித்துள்ளார்.

    விபத்துக்கு சிக்னல் செயல் இழந்ததே காரணம் என்று ஆய்வு அறிக்கை கூறினாலும் அந்த சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாக கூறியிருப்பதால் டேட்டா லாக்கர் அறிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த டேட்டா லாக்கர் என்பது மைக்ரோ செயலி அடிப்படையிலான சிஸ்டமாகும்.

    இது ரெயில்வே சிக்னலின் அமைப்பை கண்காணிக்கிறது. இதன் தரவை ஸ்கேன் செய்து பார்த்தால் உண்மை புலப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரெயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, பூர்வாங்க விசாரணையின் கட்டத்தில் வெவ்வேறு துறைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது மிகவும் இயல்பானது.

    ஒவ்வொருவரும் வெவ்வெறு கண்ணோட்டத்தை கொண்டு இருக்கலாம். ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே டிவிஷன் ரெயில்வே மேலாளர் ரின் கேஸ் ராய் கூறும் போது, பாதை உள்ளதா, அனைத்தும் சரியாக உள்ளதா போன்ற அனைத்து முன்நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னரே கிரீன் சிக்னல் கிடைக்கும். சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக எந்த சூழலிலும் கிரீன் சிக்னல் இருக்க முடியாது.

    யாரோ ஒருவர் அதை சீர்குலைக்கும் வரை உடல் ரீதியாக அதை கட்டுப்படுத்தும் வரை அது பசுமையாக இருக்க முடியாது. சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட் மற்றும் உதவி பைலட் ஆகியோர் கூறியுள்ளனர்.

    ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்யும் டேட்டா லாக்கர் கூட சிக்னல் பச்சை நிறத்தில் இருந்ததை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு விசாரணை குழுவின் கருத்து வேறுபாட்டினால் விபத்துக்கான காரணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    • தமிழகம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.
    • தண்டவாளம் மற்றும் சிக்னல்களில் சிறிய அளவு குறைபாடுகள் இருந்தாலும், அவை உடனடியாக ரெயில்வே கட்டுப்பட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தை பொருத்தவரை ரெயில் போக்குவரத்தை பெரும்பாலான பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதில் பஸ் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் கட்டணம் குறைவு. அதேநேரத்தில் வசதிகள் அதிகம் உண்டு. எனவே நிம்மதியாக, பாதுகாப்பாக பயணம் செய்து திரும்ப முடியும்.

    அதுவும் தவிர பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவேகமாக செல்லக்கூடியவை. எனவே செல்ல வேண்டிய இடத்துக்கு குறைந்த நேரத்தில் செல்ல முடியும். இதன்காரணமாக தமிழகத்தில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் ஓடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்தில் 288 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது ரெயில் பயணத்தை விரும்பும் பயணிகளிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி சேலம் கோட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம், சிக்னல் இயக்கம் ஆகியவை தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தபடியாக தண்டவாளம் மற்றும் சிக்னல்களில் சிறிய அளவு குறைபாடுகள் இருந்தாலும், அவை உடனடியாக ரெயில்வே கட்டுப்பட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் ரெயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாக குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

    சேலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு 24 மணி நேரமும் ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. அங்கு இருந்து 20 பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக கோவை ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சேலம் கோட்டத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கோவை ரெயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம் மற்றும் சிக்னல் இயக்கம் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில், ஊழியர்கள் மிகவும் கவனமாக வேலை பார்த்து வருகின்றனர். தென்னக ரெயில்வேயில் பயணிகளுக்கான பாதுகாப்பான ரெயில் சேவை உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே பயணிகள் அவசியமின்றி பயப்பட தேவை இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.

    ×