என் மலர்
நீங்கள் தேடியது "Offertory"
- நெல்லையப்பர் கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
- வழக்கமாக உண்டியல் எண்ணும் பணியில் மாணவ- மாணவிகள் ஈடுபடுவார்கள்.
நெல்லை:
பிரசித்தி பெற்ற நெல்லை யப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்ற னர்.
உண்டியல் எண்ணும் பணி
நெல்லையப்பர் கோவிலில் 21 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்களை அவ்வப்போது திறந்து எண்ணுவது வழக்கம். கடந்த டிசம்பர் 13-ந்தேதி உண்டியல்கள் எண்ணப் பட்டது.
இந்நிலையில் இன்று கோவிலில் உள்ள 21 நிரந்தர உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது.
நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்கு பிரிவு அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக பணியாற்றினர்.
கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியா ளர்கள் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர். வழக்கமாக கோவில் உண்டியல் எண்ணும் பணியில் மாணவ- மாணவிகள் ஈடுபடுவார்கள்.
தற்போது தேர்வு மற்றும் ஆண்டு இறுதி வகுப்புகள் நடைபெற்று வருவதால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் ராஜபாளையம் ராஜகோபுரம் சேவா குழுவினர் பங்கேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தோனேசியாவில் எரிமலைகள் அதிகம். அதை பார்க்கவே சுற்றுலா பயணிகள் அங்கு அதிக அளவில் செல்கின்றனர். ஒரு வருடத்தில் சராசரியாக 3 கோடி பேர் அங்கு சுற்றுலா சென்று தீவுகளை சுற்றி பார்க்கிறார்கள்.
அவற்றில் மவுண்ட் பரோமா என்ற எரிமலையில் ஜூலை மாதம் வினோதமான திருவிழா நடக்கிறது. அப்போது பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மக்கள் மவுண்ட் பரோமா எரிமலை மீது ஏறி காணிக்கை செலுத்துகிறார்கள்.
எரிமலை வெடிக்கும் நிலையில் இருக்கும் போது கூட அதன் மீது ஏறி நின்று வழிபாடு நடத்துகிறார்கள்.

பயிர்கள், பழங்கள், காசு என வித்தியாசமான காணிக்கைகள் வழங்கப்படுகிறது. அதே போன்று ஆடு, மாடு, கோழி போன்ற உயிருள்ள பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.