என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OLD MAN WAS ARRESTED"

    • மாயனூர் போலீஸ் சரத்திற்குட்பட்ட பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது.
    • சித்தலவாய் மேலக்கார தெருவை சேர்ந்த மருதநாயகம் (வயது 73) என்பவர் தனது வீட்டின் அருகே வைத்து மது விற்று கொண்டிருந்தார்.

    கரூர்

    கரூர் மாயனூர் போலீஸ் சரத்திற்குட்பட்ட பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது.

    அதன்பேரில் மாயனூர் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சித்தலவாய் மேலக்கார தெருவை சேர்ந்த மருதநாயகம் (வயது 73) என்பவர் தனது வீட்டின் அருகே வைத்து மது விற்று கொண்டிருந்தார்.

    இதையடுத்து அவரை சப்-இன்ஸ்பெக்டர் மகாமுனி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஆலங்குடி நாதன் நகரை சேர்ந்த சந்துரு (வயது 52) என்பவர் திருவரங்குளம் மாரியம்மன் கோவில் முன்பு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
    • அவரிடம் இருந்து மூன்று நம்பர் சீட்டு கட்டுகள் மற்றும் 2,020 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை ;

    ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் பகுதியில் தனிப்படை உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது ஆலங்குடி நாதன் நகரை சேர்ந்த சந்துரு (வயது 52) என்பவர் திருவரங்குளம் மாரியம்மன் கோவில் முன்பு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மூன்று நம்பர் சீட்டு கட்டுகள் மற்றும் 2,020 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் சந்துருவை தனிப்படை போலீசார் ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • 13 பவுன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • கொள்ளையனை கோவை காரமடை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    கோவை,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள வைர நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவரின் கடையின் பூட்டு உடைத்து மர்ம நபர்கள் கடையில் இருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து சாந்தாமணி காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 3 தனிப்படை அமைத்து கடை மற்றும் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த காட்சியை வைத்து கொள்ளையனை தேடி வந்தனர்.

    அப்போது கொள்ளையன் கேரளாவில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் கண்ணூர் விரைந்தனர். அங்கு போலீசார் முகாமிட்டு கொள்ளையனை தேடி நெல்லிகுந்து என்ற இடத்துக்கு சென்றனர். அங்கு கொள்ளையன் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தார்.

    உடனே போலீசார் கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் கொள்ளையனை கோவை காரமடை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையன் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நெல்லிகுந்து பகுதியை சேர்ந்த தங்கச்சி மாருதி (52) என்பது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து வெள்ளி பொருட்கள் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் தங்கச்சி மாருதியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×