என் மலர்
நீங்கள் தேடியது "Omni buses"
- ஆம்னி பஸ்களில் ஒரு காலத்தில் குஷன் இருக்கைகள், புஷ் பேக் இருக்கைகள் தான் இருந்தன.
- இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு விசாரணையும் நடந்து இருக்கிறது.
இவ்வளவு பாதுகாப்பாக.... உற்சாகமாக... ஓடும் பஸ்சுக்குள்ளேயே உல்லாசமாக இருந்தபடியே பயணிப்பது தனி சுகம் தான் என்கிறார்கள் அந்த ஆசையுடன் செல்லும் ஆண்களும், ஆசையை தணிக்கும் அழகிகளும்...!
ஆம்னி பஸ்களுக்குள் இவ்வளவு சமாச்சாரம் நடக்குதா..? என்று ஆச்சரியமாகத்தான் நினைக்க தோன்றும்.
ஆம்னி பஸ்களில் ஒரு காலத்தில் குஷன் இருக்கைகள், புஷ் பேக் இருக்கைகள் தான் இருந்தன. இருந்தாலும் இரவு நேர பயணத்துக்கு படுக்கை வசதியை பயணிகள் விரும்பினார்கள். எனவே ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் மட்டுமே பஸ் பயணத்தை தேடிவந்தார்கள்.
எனவே பஸ்களிலும் படுக்கை வசதியை அறிமுகப்படுத்தினார்கள். அதுவும் நட்சத்திர ஓட்டல்களை போல் இந்த படுக்கைகள் தனி அறைகள் போலவே சொகுசாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சுற்றிலும் திரைச்சீலைகள், சொகுசான மெத்தைகள், தனித்தனி டி.வி. வசதிகள், மெலிதாக மின்னும் இரவு விளக்குகள். தேவையில்லை என்றால் அனைத்தும் விடலாம். குளிர்சாதன வசதி வேறு.
இவ்வளவு சொகுசாக இருக்கும்போது துணையையும் தேடுவது இயற்கை தானே? ஆரம்பத்தில் காதலர்கள் சிலர் தங்களுக்கு இந்த வசதி ரொம்ப வசதியாகி விட்டதாக காதல் பயணத்தை தொடர்ந்தார்கள்.
அதுவும் ஏதோ ஒரு சில பஸ்களில் ஒன்றிரண்டு பேர் மட்டும் சென்றதால் பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால் இப்போது நடமாடும் நட்சத்திர விடுதிகள் போலவே இதை சொகுசு பஸ்கள் மாறிவிட்டன.
குறிப்பாக பெண் சுகம் தேடி செல்லும் ஆண்கள் இந்த மாதிரி பஸ்களை தங்களுக்கு பாதுகாப்பானதாக கருதுகிறார்கள்.
நகரில் ஏதாவது ஒரு ஓட்டல் அறை எடுத்து தங்கினாலும் வேலை முடிந்து வெளியே செல்லும் வரை திக்... திக்... என்று தான் இருக்கும். போலீஸ் சோதனை ஏதாவது நடந்தால் சிக்கி கொள்வோமே என்ற பயம் தான் அது.
ஆனால் இந்த மாதிரி பஸ் பயணத்தில் அந்த மாதிரி பயம் ஏதும் இல்லையாம். இரண்டு படுக்கைகளை ஏதாவது ஒரு நகரத்துக்கு முன்பதிவு செய்தால் போதும்.
சென்னையில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கோவை செல்லும் பஸ்களில் இந்த உல்லாச பயணம் செய்பவர்கள் அதிக அளவில் பயணிப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட பஸ்...
விளக்குகள் அணைக்கப்பட்டதும் திரை சீலைகளை நன்றாக இழுத்து மூடிவிட்டு நித்திரைக்கு தயாரானார்கள் பயணிகள். தரையில் மிதக்கும் கப்பல் போல் வேகம் தெரியாதபடி பஸ் வேகம் பிடித்து ஓடி கொண்டிருந்தது. பஞ்சணையில் மஞ்சம் கொண்ட ஜோடிகள் தங்கள் விளையாட்டை தொடங்கினார்கள்.
நேத்து ராத்திரி எம்மா..
தூக்கம் போச்சுடி எம்மா...
என்ற கதையில் பக்கத்து படுக்கை பயணிகள் அந்த ராத்திரியில் தூக்கத்தை தொலைத்தார்கள். காரணம் 'அச்சாரத்தை போடு கச்சேரியை கேளு. சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு...' என்பதை போல் அவர்கள் ஆடிய விளையாட்டில் வெளிவந்த முணு முணுப்பு சத்தம் தான்...!
பொறுத்து பார்த்தவர்கள் பஸ் ஊழியர்களிடம் கூறி இருக்கிறார்கள். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்? அரைக்கதவை திறக்க முடியுமா? திரை சீலையை விலக்க முடியுமா?
அப்படி விலக்கி விவகாரத்தில் சிக்கிய ஊழியர்கள் பலர். 'யோவ், விவஸ்தை இருக்கா உனக்கு...? என்று கேட்பது மட்டுமல்ல சொல்ல முடியாத வார்த்தைகளால் அர்ச்சனைகளை கேட்டு ஆடிப்போய் இருக்கிறார்கள்.
நாங்கள் கணவன்-மனைவி, அல்லது காதலர்கள்... என்று எங்கள் தனியுரிமையில் தலையிட நீ யார்? கட்டணம் கொடுத்து தான் பயணிக்கிறோம். இந்த மாதிரி அநாகரீகமாக நடந்து கொண்டால் பஸ் உரிமையாளரிடம் புகார் செய்வோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
யார் அந்த பச்சைக்கிளி, செல்லக்கிளி என்று அடையாளம் கேட்கவா முடியுமா? எங்களை விட்டால் போதும் என்று ஊழியர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.
மறுநாள் காலையில் பஸ்சை சுத்தம் செய்யும்போது தான் ஆணுறைகள், காலி மது பாட்டில்கள் எல்லாம் கிடப்பதாகவும் கர்மம்.. கர்மம்... என்று தலையில் அடித்துக்கொண்டே அதை சுத்தம் செய்வதாகவும் கூறுகிறார்கள்.
அதே படுக்கை விரிப்பை மீண்டும் மாலை பயணத்துக்கு பயன்படுத்த முடியாது என்பதால் தினமும் வெளுக்க போடுகிறார்களாம்.
இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு விசாரணையும் நடந்து இருக்கிறது.
அப்போது, நாங்கள் பெரியவர்கள், எங்கள் சம்மதத்தோடு பயணிக்கிறோம். எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்று எதிர்கேள்வி கேட்டு இருக்கிறார்கள். எனவே இது சட்ட விரோதமானது என்றோ அல்லது விபசாரம் என்றோ போலீசாரால் கூட நிரூபிக்க முடியாமல் போகிறது.
ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வாக இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் உண்மையாக பயணிக்கும் பயணிகள். ஆனால் ஜிகு ஜிகு பஸ்சில் இப்படி ஜிம் ஜக் என்றவாறு பயணிக்கும் பயணிகளுக்கு (?!) இந்த கட்டணமெல்லாம் ஒரு ஜூஜூபி...!
புதிதாக உருவெடுத்து இருக்கும் இந்த தலைவலியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போலீசும் கையை பிசைகிறது.
விபசாரத்தில் தள்ளுவது, ஈடுபடுவது போன்ற ஒழுக்க கேடான செயல்களுக்கு தனித் தனி தண்டனை உள்ளது. ஆனால் நடக்கும் இடம், நடக்கும் விதம் எல்லாம் முற்றிலும் மாறுபாடாக இருப்பதால் எப்படி தடுப்பது? எப்படி சமாளிப்பது? என்பதே இப்போதைய கேள்வி.
- கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகளிடம் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை.
- தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இதுவரை 91,000 பேர் பயணம்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடங்கியுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளதாவது:
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டி, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது. இன்று வழக்கமான பேருந்துகளுடன் 2,100 உடன், 1430 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதுவரை 91,000 பேர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரிய அளவில் புகார்கள் இல்லை. எனினும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். குறிப்பிட்ட சில ஆம்னி பேருந்துகள், இணையதளம் மூலமாக அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், டிக்கெட் கட்டணத்தை தாண்டி, மீதி கட்டணத்தை பயணியிடம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
- ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றாலும் முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை:
தமிழகம் முழுவதும் பள்ளிகள் வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகின்றன.
1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு முதலில் வகுப்பு தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ந்தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 27-ந்தேதியும் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படுகிறது.
கோடை விடுமுறையில் வெளியூர் சென்று இருந்த பெற்றோர், குழந்தைகள் பள்ளிகள் திறப்பதால் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வருகிற 13-ந்தேதி வரை முகூர்த்த நாட்கள் இருப்பதால் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன.
இதனால் வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. அரசு பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆம்னி பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பி வருகின்றன. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கோவை செல்லக்கூடிய ஆம்னி பஸ்களும், அங்கிருந்து சென்னைக்கு வரக்கூடிய பஸ்களிலும் தேவை அதிகரித்து வருவதை அறிந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டனர். அடுத்த வாரம் அனைத்து ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் விலை உச்சத்தை தொட்டு உள்ளது.
இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை எல்லா ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தேவை அதிகரித்து வருவதை தொடர்ந்து டிக்கெட் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்தி உள்ளனர்.
மதுரையில் இருந்து சென்னை வருவதற்கே ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன படுக்கை கட்டணம் ரூ.1,600 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரையிலும் குளிர்சாதன இருக்கை வசதிக்கு ரூ.1,500 கட்டணமும் பெறப்படுகிறது.
தூத்துக்குடி-சென்னைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.1,650 முதல் ரூ.2,350 வரையும் ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.1,300-கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர் சாதன வசதி அல்லாத படுக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண இருக்கைக்கு ரூ.1000 வரை வசூலிக்கப்படுகிறது.
12-ந்தேதி பயணத்திற்கு ஏ.சி. படுக்கை வசதி ரூ.2000 முதல் ரூ.3000 வரையும் ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.1,600, ரூ.1,700, ரூ.1,750 வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. அல்லாத படுக்கைக்கு ரூ.1,800 வரையும் இருக்கைக்கு ரூ.1,500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12-ந்தேதி திருநெல்வேலி-சென்னைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.1,800 முதல் ரூ.2,050 வரையும் ஏ.சி. அல்லாத படுக்கை மற்றும் இருக்கைக்கு ரூ.1,300 முதல் ரூ.1,800 வரை வசூலிக்கிறார்கள்.
பயணத்திற்கு இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் இக்கட்டணம் அந்தந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றாலும் முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
பொங்கல் பண்டிகை நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைத்தது.
இதனால் சென்னை மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து தென் மாவட்டத்துக்கு செல்ல 12 ஆயிரம் சிறப்பு பஸ்கள் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், தாம்பரம் ரெயில் நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 11-ந்தேதி இரவு முதலே பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக பஸ் நிலையங்களில் தினந்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் ரெயில் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்திலும் கடும் கூட்டம் காணப்படுகிறது.
பயணிகளின் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து மதுரை செல்லும் சாதாரண ஆம்னி பஸ்சில் ரூ. 1,100 முதல் ரூ. 1,500 வரை வசூலிக்கப்பட்டது. வழக்கமாக ரூ. 600 முதல் ரூ. 700 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் படுக்கை வசதி உள்ள பஸ்களில் ரூ. 1,800 முதல் ரூ. 2,200 வரை வசூலித்தனர்.
சென்னையில்இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் பஸ்களில் ரூ. 2200 முதல் ரூ. 2500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டண உயர்வு கடந்த 9-ந்தேதி முதலே வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர விதிமுறையை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ. 30 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் இதுவரை 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை 10 ஆயிரத்து 427 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.
நாளை பொங்கல் பண்டிகை என்பதால் இன்று இரவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்னி பஸ் கட்டணம் குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘சில சிறிய தனியார் பஸ் உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்துள்ளனர். பெரிய பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கவில்லை. வழக்கமான கட்டணத்தையே வசூலித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Pongal2019 #OmniBuses
சென்னை:
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண் டாட செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ், ரெயில்கள் விடப்பட்டுள்ளன. ஆம்னி பஸ்களிலும் இடங்கள் நிரம்பி வழிகிறது. தமிழகத்தில் 1100 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தைவிட 3 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் ஆன்லைனில் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் நிர்ணயித்து பொதுமக்களிடம் வசூலித்து வருகின்றனர்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயம்பேடு ஆம்னி பஸ்நிலையம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி, கிழக்கு கடற்கரை சாலை சுங்கசாவடி, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்கிறார்கள்.
இன்று (வெள்ளிக் கிழமை) 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் தீவிர சோதனை செய்கின்றனர். 4 நாட்களிலும் 4 குழுக்கள் வீதம் 16 குழுக்கள் நியமிக்கப்பட்டு கூடுதல் கட்டணம், பெர்மிட் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதுகுறித்து அமலாக்கப் பிரிவு இணை ஆணையர் முத்து கூறியதாவது:-
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும். 4 பஸ் நிலையங்களிலும் 4 நாட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த பஸ் சிறை பிடிக்கப்படும். ஆன்லைனில் அதிக கட்டணம் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது.
அதனால் பஸ்சில் பயணம் செய்யும் போது அதிக கட்டணம் வசூலித்தது குறித்து புகார் தெரிவித்தால் கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். மேலும் பெர்மிட் இல்லாமலும் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார். #Omnibuses
கரூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனின் குற்றசாட்டு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நலன் கருதி 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய மாநகராட்சி பகுதிகளில் காலதாமதம் இல்லாமல் பஸ்கள் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வகையில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற் சங்கத்தினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பஸ் நிலையங்களில் இரு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை கால பயணத்தை மக்கள் சிரமமின்றி மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது குறித்த அந்த சங்கத்தினருக்கு தெரிவித்து உள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தாண்டி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பஸ்களில் இதுபோன்ற செயல்கள் நடக்க வாய்ப்பில்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival
தமிழக அரசு பஸ்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த பின்னர், ஆம்னி பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது.
கட்டண உயர்வுக்கு பின்னர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களில் ரூ.800-ம் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ரூ.1100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் இக்கட்டணத்தை உயர்த்தி வாங்குவதாக அடிக்கடி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போதே ஆம்னி பஸ்கள் இது போன்ற கட்டண உயர்வை பயணிகள் மீது திணிக்கும்.
ஆனால் இம்முறை ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகளும் இந்த கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோர் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்வார்கள். ஓணப்பண்டிகை முடிந்து நேற்று ஊருக்கு புறப்பட ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்த போது அங்கும் கூடுதல் கட்டணம் குறிப்பிடபட்டிருந்தது.

அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காமல் ஆம்னி பஸ்களை தேடிவந்தவர்கள் இக்கட்டண உயர்வை கண்டு அதிர்ந்தனர். அவர்கள் நேற்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் வடசேரி ஆம்னி பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி பாதிக்கப்பட்ட பயணிகள் கூறும்போது, அரசுதான் இக்கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்நிலையங்களில் முகாமிட்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் லைசென்சையும் ரத்து செய்ய வேண்டும். எச்சரிக்கை செய்கிறோம் என்று கூறுவதைவிட அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மக்களுக்கு பலன் கிடைக்கும். அதற்கு அரசு அதிகாரிகள் முன்வரவேண்டும், ஆன்லைனில் கூடுதல் கட்டணம் பதிவிட்ட ஆம்னி பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு ஆன்லைனில் அவர்கள் பதிவிட்ட கட்டண விபரங்களே போதும், என்றனர். #OmniBuses
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு முதல் கட்டமாக 100 சொகுசு பஸ்கள் வழங்கப்படுகிறது. முதன் முதலாக ஏசி படுக்கை வசதியுடன் அரசு பஸ்கள் தற்போது இயக்கப்படுகிறது. சென்னை-திண்டுக்கல் வழித்தடத்தில் மட்டும் கழிப்பிட வசதியுடன் கூடிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ் விடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, தேனி, போடி, சேலம், கரூர், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு படுக்கை வசதி சொகுசு பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கீழக்கரை ஆகிய பகுதிகளுக்கு ஏசி படுக்கை வசதி பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை-பெங்களூர் இடையே படுக்கை வசதி பஸ் இன்று விடப்பட்டது. ஏற்கனவே விடப்பட்ட சொகுசு பஸ்களில் போடி, கரூர் பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்படுகின்றது. மற்ற வழித்தடங்களில் எல்லா நாட்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் போடி, கரூருக்கு இன்று முதல் எழும்பூரில் இருந்து அரசு விரைவு சொகுசு பஸ் இயக்கப்படுகின்றன. எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு போடிக்கும், 8 மணிக்கு கரூருக்கும் ஏசி படுக்கை வசதி சொகுசு பஸ் புறப்பட்டு செல்கின்றன.
எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் புறப்பட்டு செல்வதால் ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள், தவற விட்டவர்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்கிறார்கள். எழும்பூரில் ரெயில் நிலையம் பகுதியில் ஆம்னி பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கிறது. இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஆம்னி பஸ்கள் சாலையை ஆக்கிரமித்து கொள்வதால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகமும் எழும்பூரை மையமாக வைத்து பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கிழக்கரை உள்ளிட்ட அனைத்து தென் மாவட்ட பகுதிகளுக்கும் எழும்பூரில் இருந்து விரைவில் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.
ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், ‘‘கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும். ஏசி படுக்கை வசதி பஸ்களை மட்டும் எழும்பூரில் இருந்து இயக்குவதற்கு முடிவு செய்துள்ளோம். தலைமை செயலகம், எழிலகம், உள்ளிட்ட அரசு பணிகள் தொடர்பாக வெளியூரில் இருந்து வரகூடியவர்கள் எழும்பூரில் இருந்து தான் பயணத்தை தொடருகிறார்கள்.
ரெயிலில் இடம் கிடைக்காத பயணிகள் பஸ்கள் மூலம் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் கோயம்பேடு சென்று அங்கிருந்து பயணத்தை தொடர்வதை காட்டிலும் எழும்பூரில் இருந்து அரசு பஸ்களில் பயணத்தை தொடர இது உதவியாக இருக்கும்’’ என்றார்.