என் மலர்
நீங்கள் தேடியது "Ondiveeran"
- ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை நீதிமன்றம் எதிரே மணிமண்டபத்தில் அமைக் கப்பட்டுள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாலை அணிவித்து மரியாதை
இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், மாணவர் அணி செயலாளர் சிவபாலன், பகுதி செயலாளர்கள் ஜெனி, சண்முககுமார், முன்னாள் பகுதி செயலாளர் தச்சைமாதவன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன்,
மேலப்பாளையம் பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், டால் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எழுச்சி மாநாடு
தொடர்ந்து அவர்கள் மதுரை வலையங்குளத்தில் இன்று நடைபெறும் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றனர்.
- வீர வணக்க நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
- அமைச்சர் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தாராபுரம் :
தாராபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகி ஒண்டி வீரனின் வீர வணக்க நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றியத் தலைவர் செந்தில்குமார் மற்றும் தாராபுரம் நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், நகர அவைத்தலைவர் கதிரவன், நகர துணை செயலாளர்கமலக் கண்ணன் ,மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் பெரியசாமி , மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் காளிமுத்து மற்றும் தண்டபாணி , சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
+2
- ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் ஒண்டிவீரனின் புகழை போற்றும் விதமாக அவரது பெயரில் தபால் தலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
- கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் துணைசபாநாயகர் வி.பி.துரைசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கோவிந்தராஜும் நினைவு பரிசு வழங்கினர்.
நெல்லை:
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
சிலைக்கு மரியாதை
இைதயொட்டி பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணைமந்திரி எல்.முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் ஒண்டிவீரனின் புகழை போற்றும் விதமாக அவரது பெயரில் தபால் தலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
தபால் தலைவெளியீடு
அதன்படி இன்று கே.டி.சி.நகர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒண்டிவீரனின் நினைவு தபால் தலையை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட அதனை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முன்னாள் துணைசபாநாயகர் வி.பி.துரைசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கோவிந்தராஜும் நினைவு பரிசு வழங்கினர்.
அமைச்சர்- எம்.எல்.ஏ.க்கள்
நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், ஞானதிரவியம், எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, தலைமை தபால் துறை தலைவர் ராஜேந்திர குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த கவர்னர்கள் பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை விருந்தினர் மாளிகை வந்தனர். பின்னர் அங்கிருந்த ஒண்டிவீரன் மணிமண்டபத்திற்கு புறப்பட்டு சென்றனர்.