என் மலர்
நீங்கள் தேடியது "oneside love"
நாகர்கோவில் அருகே பிளஸ்-2 மாணவியை காதலிக்குமாறு அத்துமீறிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
அருமனை அருகே மானங்கன்னி விளையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
அந்த மாணவியை அருமனை வட்டவிளை பகுதியைச் சேர்ந்த ரெஜின் (வயது 25) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார். இதை அந்த மாணவி தனது பெற்றோரிடம் சென்று கூறினார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் ரெஜின் வீட்டிற்குச் சென்று கண்டித்தனர். நேற்று முன்தினம் மாணவி, பள்ளிக்கூடத்திற்கு சென்றபோது, பள்ளிக்கூட வாசலில் வைத்து மாணவியை ரெஜின் தடுத்து நிறுத்தினார். தன்னை காதலிக்குமாறு கூறினார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ரெஜின், மாணவியை கன்னத்தில் அடித்ததுடன் கையை பிடித்து இழுத்தார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார். நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார்.
இதையடுத்து அந்த மாணவி, மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பார்வதி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். ரெஜின் மீது போஸ்கோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெஜினை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரெஜின் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ரெஜின் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #tamilnews
அருமனை அருகே மானங்கன்னி விளையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
அந்த மாணவியை அருமனை வட்டவிளை பகுதியைச் சேர்ந்த ரெஜின் (வயது 25) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார். இதை அந்த மாணவி தனது பெற்றோரிடம் சென்று கூறினார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் ரெஜின் வீட்டிற்குச் சென்று கண்டித்தனர். நேற்று முன்தினம் மாணவி, பள்ளிக்கூடத்திற்கு சென்றபோது, பள்ளிக்கூட வாசலில் வைத்து மாணவியை ரெஜின் தடுத்து நிறுத்தினார். தன்னை காதலிக்குமாறு கூறினார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ரெஜின், மாணவியை கன்னத்தில் அடித்ததுடன் கையை பிடித்து இழுத்தார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார். நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார்.
இதையடுத்து அந்த மாணவி, மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பார்வதி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். ரெஜின் மீது போஸ்கோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெஜினை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரெஜின் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ரெஜின் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #tamilnews
ஒருதலை காதலால் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KumbakonamMurder
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (வயது 25). இவர் கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கடந்த 28-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற தை மாதத்தில் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கும்பகோணம் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம் செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் நேற்று மாலை மர்மமான முறையில் வசந்தபிரியா கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.க்கள் ராமச்சந்திரன், செங்கமலகண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மணிவேல், மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தபிரியா உடலை கைப்பற்றினர். பிறகு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் 2 செல்போன்கள் மற்றும் புதிய சிறிய வடிவிலான பேனாகத்தி கிடந்தது.
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதனால் மோட்டார் சைக்கிளில் வசந்தபிரியாவை அழைத்து சென்ற வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வசந்தபிரியாவின் உறவினர்களிடம் வாலிபரின் உருவபடத்தை காட்டி அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டனர்.
அப்போது உறவினர்கள் அந்த வாலிபர், வசந்த பிரியாவின் மாமா மகன் நந்தகுமார் (வயது 34) என்று தெரிவித்தனர்.
இதையடுத்து கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பதுங்கி இருந்த நந்தகுமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். பிறகு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆசிரியை வசந்த பிரியாவை நந்தகுமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கு, வேறொரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் நந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று மாலை ஆசிரியை வசந்தபிரியாவிடம் நைசாக பேச்சு கொடுத்து அழைத்து சென்றார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் வசந்தபிரியா மறுத்து திட்டியதால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் பேனா கத்தியால் கழுத்தில் குத்தி அவரை கொலை செய்தது தெரியவந்தது.
ஒருதலை காதலால் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (வயது 25). இவர் கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கடந்த 28-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற தை மாதத்தில் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கும்பகோணம் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம் செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் நேற்று மாலை மர்மமான முறையில் வசந்தபிரியா கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.க்கள் ராமச்சந்திரன், செங்கமலகண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மணிவேல், மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தபிரியா உடலை கைப்பற்றினர். பிறகு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் 2 செல்போன்கள் மற்றும் புதிய சிறிய வடிவிலான பேனாகத்தி கிடந்தது.
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் ஆசிரியை வசந்தபிரியா, ஒரு வாலிபருடன், மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

ஆசிரியை வசந்தபிரியா
இதனால் மோட்டார் சைக்கிளில் வசந்தபிரியாவை அழைத்து சென்ற வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வசந்தபிரியாவின் உறவினர்களிடம் வாலிபரின் உருவபடத்தை காட்டி அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டனர்.
அப்போது உறவினர்கள் அந்த வாலிபர், வசந்த பிரியாவின் மாமா மகன் நந்தகுமார் (வயது 34) என்று தெரிவித்தனர்.
இதையடுத்து கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பதுங்கி இருந்த நந்தகுமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். பிறகு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆசிரியை வசந்த பிரியாவை நந்தகுமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கு, வேறொரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் நந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று மாலை ஆசிரியை வசந்தபிரியாவிடம் நைசாக பேச்சு கொடுத்து அழைத்து சென்றார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் வசந்தபிரியா மறுத்து திட்டியதால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் பேனா கத்தியால் கழுத்தில் குத்தி அவரை கொலை செய்தது தெரியவந்தது.
ஒருதலை காதலால் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.