என் மலர்
நீங்கள் தேடியது "Oppiliappan temple"
- விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பங்குனி பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்கோவிலில் வேங்கடாசலபதி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயா ழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 'தென்னக திருப்பதி' என போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் உற்சவர் பொன்னப்பன், பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இங்கு திருவோண நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும்.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பொன்னப்பர்- பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிார். தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஏராள மான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பு கோவில் யானை 'பூமா' அசைந்தாடி யபடி சென்றது.
மேலும், ரதவீதிகளில் அம்மன் வேடம் அணிந்த பெண்கள் நடனம், நாட்டிய குதிரையின் நடனம், செண்டை மேளம் என பல்வேறு நிகழ்ச்சிகளும் தேருக்கு முன்பாக சென்றது. தேர் 4 ரத வீதிகள் வழியாக வந்து நிலைக்கு வந்ததும், கோவில் புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின், நிறைவு நாளான 28-ந்தேதி காலை மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையலும், மாலை புஷ்பயாகமும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் உதவி ஆணையர் ஹம்சன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும்.
- பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி ஏற்றப்பட்டது.
இதனை யொட்டி மூலவர் ஒப்பிலியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ந்தேதியும், தொடர்ந்து, அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- இன்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடக்கிறது
- மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருகிற 29-ந்தேதி வெங்கடாசலபதி சுவாமி கோவிலுக்கும், வடக்கு வீதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலுக்கும் குடமுழுக்கு நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் 28 வேதிகைகள், 34 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 வேத விற்பன்னர்கள் வந்து நான்கு வேதங்களில் வேத பாராயணம் நடைபெற்றது. முதல் கால யாக சாலை பூஜையில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், அரசு குரூப்ஸ் தலைவர் திருநாவுக்கரசு, இ.பி. சில்க்ஸ் இ.பி. சேதுராமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வீரகுமார், அபிராமி கார்த்திகேயன், எம். பாலச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரி துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நேற்று முதல் பூமி தேவி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கியது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- இன்று 4-வது, 5-வது கால யாகசாலை பூஜை நடக்கிறது.
- கடந்த 25-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோவில் என அழைக்கப்படும் வெங்கடாசலபதி கோவில் பூலோக வைகுந்தம், திருவின்னகர் என்றெல்லாம் போற்றப்படுகிறது. இங்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு, ரூ.3½ கோடி மதிப்பில் திருப்பணி வேலைகள் நடந்தன.
வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) வெங்கடாசலபதி கோவிலுக்கும், வடக்கு வீதியில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கும் குடமுழுக்கு நடக்கிறது.
குடமுழுக்கை தொடர்ந்து 29-ந் தேதி இரவு பெருமாள், தாயார் தங்க கருட சேவையும், பெரியாழ்வார், நிகமாந்த மகாதேசிகன் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி கோவில் வளாகத்தில் 28 வேதிகைகள் 34 யாக குண்டங்கள் என பிரம்மாண்ட யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று 2-வது மற்றும் 3-வது கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது, 5-வது கால யாகசாலை பூஜை நடக்கிறது. கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் பக்தர்களுக்கு பூமி தேவி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடமுழுக்கு அன்று கோவிலுக்குள் மதியம் 12 மணி வரை ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் கோவிலை சுற்றி நான்கு புறமும் குடமுழுக்கை காண கூடி நிற்கின்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவிலில் இருந்து நான்கு புறமும் 30 அடி தூரம் வரை பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- இன்று 6, 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
- 150 வேத விற்பன்னர்கள் வேதங்களை படித்து பூஜைகளை செய்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் எனும் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பாடப்பட்டதாகும்.
பூலோக வைகுண்டம், திருவிண்ணகர் என இக்கோவிலை அழைக்கிறார்கள். இங்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு கோபுரங்கள், பிரகாரங்களில் ரூ.3½ கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்தன.
திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வெங்கடாசலபதி கோவிலுக்கும், வடக்கு வீதியில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கும் குடமுழுக்கு நடக்கிறது.
முன்னதாக நாளை காலை 5.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று 10 மணிக்குள் விமான கலசங்கள் மற்றும் மூலவர் சன்னதியில் குடமுழுக்கு நடக்கிறது. இரவு 7 மணிக்கு பெருமாள், தாயார் தங்க கருட சேவையும், பெரியாழ்வார், நிகமாந்த, மகாதேசிகன் திருவீதி புறப்பாடு நடக்கிறது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 28 வேதிகைகள் 34 ஹோம குண்டங்கள் என பிரம்மாண்டமாக யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 150 வேத விற்பன்னர்கள் வேதங்களை படித்து பூஜைகளை செய்து வருகின்றனர். நேற்று 4, 5-வது கால யாக சாலை பூஜை நடந்தது.
இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடக்கிறது. மாலை 5 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பூமி தேவி திருமண மண்டபத்தில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.