என் மலர்
நீங்கள் தேடியது "O.P.S.Team"
- போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பதட்டம் நீடித்தது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனுார் மூலக்கடை சந்திப்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை இருந்தது.
1996-ல் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த சாலை புறவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டபோது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபின் புதிதாக எம்.ஜி.ஆர். வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிலையின் கல்வெட்டில் தங்கள் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர்.
தங்களின் பெயரும், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பெயரும் இடம்பெற வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதனிடையே புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், நேற்று முன்தினம் எந்த முன் அறிவிப்புமின்றி கட்சி நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார்.
இதையடுத்து அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் இன்று மீண்டும் அந்த சிலையை திறக்க உள்ளதாக அறிவித்தனர். இதற்கு புதுவை அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த சிலைக்கும், மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது என போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வில்லியனுார் புறவழிச்சாலை சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
காலை 10 மணிக்கு மேல் ஒருபுறம் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.வினரும், மறுபுறம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமையில் உரிமை மீட்பு குழுவினரும் திரண்டனர்.
மேலும் அவர்கள் எதிர் எதிராக கோஷம் எழுப்பியதால் அங்கு கடும் பதட்டம் ஏற்பட்டது. அப்போது போலீசார் ஓம்சக்தி சேகரிடம், சிலைக்கு மாலை அணிவிக்க எந்த தடையும் இல்லை, ஆனால் திறப்பதற்கு அனுமதியில்லை என தெரிவித்தனர்.
ஓம்சக்தி சேகரும், அவரின் ஆதரவாளர்களும் இதனை ஏற்கவில்லை. போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பதட்டம் நீடித்தது.
இதையடுத்து ஓம்சக்தி சேகர் தலைமையிலான உரிமை மீட்பு குழுவினர் சிலையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஓம்சக்தி சேகர் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
- புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்லை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மாவட்ட அவைத்தலைவர்- பரமசிவன், இணைச் செயலாளர்- செல்லசித்ரா, துணைச் செயலாளர்கள் முருகேசன், இசக்கியம்மாள், மாவட்ட பொருளாளர் இசக்கியப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் குபேந்திர மணி என்ற அசையாவீரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் லாரன்ஸ், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முருகேசன், இளைஞர் அணி செயலாளர் இர்சத்கான், மகளிர் அணி செயலாளர் பால்கனி, வக்கீல் அணி செயலாளர் புவனேஷ், தொழில்நுட்ப அணி செயலாளர் ரமேஷ், ஊடக அணி செயலாளர் ஜான்பீட்டர், விவசாய அணி செயலாளர் தங்கமணி, மாணவர் அணி செயலாளர் டெவின், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சபரீஸ், வர்த்தக பிரிவு அணிச்செயலாளர் சிவக்குமார், மீனவர் அணி செயலாளர் சரோஜ்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் தினகரன், பொதுக்குழு உறுப்பினர்கள்- ரவி என்ற பத்மநாதன், ஸ்மித் ஆன்ரூஸ், சந்தியாகு, பொன்மணி சுசிலா, பால்பாண்டி, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள், டென் சிங் சாமிதாஸ், ஸ்டீபன் முத்தையா, சாமுவேல் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
எனவே புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனை வருக்கும் நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதேபோல் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், பேரூராட்சி பகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நெல்லை புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கும் புதிதாக அ.தி.மு.க. நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.