என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oscar"

    • சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா.
    • ஐந்து இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன.

    97வது அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெற போட்டியிட தகுதியுள்ள திரைப்படங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் 323 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 207 திரைப்படங்கள் ஏற்கனவே சிறந்த திரைப்படம் பிரிவில் இடம்பெற தகுதி பெற்றுவிட்டன.

    207 திரைப்படங்களில் ஐந்து இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கங்குவா (தமிழ்), ஆடு ஜீவிதம் - தி கோட் லைஃப் (இந்தி), சந்தோஷ் (இந்தி), ஸ்வாதந்த்ரியா வீர் சாவர்கர் (இந்தி) மற்றும் ஆல் வி இமாஜின் அஸ் லைட் (மலையாளம்-இந்தி) ஆகியவை அடங்கும்.

    இந்த திரைப்படங்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நாளை (ஜனவரி 8) துவங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறும். இதன்பிறகு, ஜனவரி 17 ஆம் தேதி இறுதிப் பட்டியலில் தேர்வான திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இறுதிப்பட்டியலில் எத்தனை இந்திய திரைப்படங்கள் இடம்பெறும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழா ஒவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருநங்கை நடிகை ஒருவர் சிறந்த நடிகை பிரிவில் ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றது இதுவே முதல்முறை.
    • ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படம் ஒன்று அதிக பிரிவில் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை.

    அமெரிக்காவின் சினமா துறையான ஹாலிவுட் இயங்கி வரும் இடமான கலிபோர்னியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் திரைப்படங்களுக்கான வருடாந்திர ஆக்ஸர் விருது விழா இரண்டு முறை ஒத்தி வைப்பட்டது.

    தொடர்ந்து மார்ச் 2 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் 97வது ஆக்ஸர் விழா நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

    சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கர் குழு நேற்று வெளியிட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமாக, பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய எமிலியா பெரெஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பாடல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    திருநங்கையான கர்லா சோஃபியா காஸ்கன் (Karla Sofía Gascón) சிறந்த நடிகை பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

    திருநங்கை நடிகை ஒருவர் சிறந்த நடிகை பிரிவில் ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றது இதுவே முதல்முறை. மேலும் ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படம் ஒன்று அதிக பிரிவில் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை.

    எமிலியா பெரெஸ் படத்துக்கு அடுத்தபடியாக ஜான் எம். சூ இயக்கிய ஹாலிவுட் திரைப்படமான 'விக்டு' 10 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பிராடி கார்பெட் இயக்கிய 'தி புரூட்டலிஸ்' திரைப்படமும் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

    ஆஸ்கர் இறுதிப் பட்டியல்:

    சிறந்த படம்: எமிலியா பெரெஸ், அனோரா, தி புரூட்டலிஸ்ட், கம்ப்ளீட் அன்னோன், கான்கிலேவ், டியூன் பார்ட் 2, எமிலியா பெரெஸ், ஐ ஆம் ஸ்டில் ஹியர், நிக்கல் பாய்ஸ், தி சப்ஸ்டன்ஸ், விக்டு.

    சிறந்த நடிகை: டெமி மூர் - சப்ஸ்டன்ஸ், சிந்தியா எரிவோ - விக்டு, மைக்கி மேடிசன் - அனோரா, கார்லா சோபியா காஸ்கான் - எமிலியா பெரெஸ், பெர்னாண்டா டோரஸ் - ஐ ஆம் ஸ்டில் ஹியர்.

    சிறந்த நடிகர்: அட்ரியன் பிராடி, தி ப்ரூட்டலிஸ்ட, Timothée Chalamet - கம்ப்ளீட் அன்னோன் , கோல்மன் டொமிங்கோ - சிங் சிங், ரால்ப் ஃபியன்ஸ் - கான்கிளேவ், செபாஸ்டியன் ஸ்டான் - அப்ரெண்டிஸ்

    சிறந்த இயக்குனர்: ஜாக் ஆடியார்ட் - எமிலியா பெரெஸ், சீன் பேக்கர் - அனோரா, பிராடி கார்பெட் - தி ப்ரூட்டலிஸ்ட், ஜேம்ஸ் மான்கோல்ட் - கம்ப்ளீட் அன்னோன், கோரலி ஃபார்கேட் - சப்ஸ்டன்ஸ்

    சிறந்த சர்வதேச திரைப்படம்: ஐ ஆம் ஸ்டில் ஹியர் - பிரேசில், கேர்ல் வித் தி நீடில் - டென்மார்க், எமிலியா பெரெஸ் - பிரான்ஸ், சீட் ஆப் சேக்ரட் பி[க் - ஜெர்மனி, ஃபுளோ - லாட்வியா.

    சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூட்டலிஸ்ட், டியூன் பார்ட் 2, எமிலியா பெரெஸ், மரியா, நோஸ்ஃபெராடு

    சிறந்த ஒரிஜினல் திரைக்கதை : அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட், ரியல் பெயின், செப்டம்பர் 5, சப்ஸ்டன்ஸ் 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.
    • சிறந்த அனிமேஷன் குறும்படடங்களாக தி பியூட்டிபுல் மென் உள்ளிட்டவை தேர்வாகி உள்ளன.

    அமெரிக்காவின் சினமா துறையான ஹாலிவுட் இயங்கி வரும் இடமான கலிபோர்னியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் திரைப்படங்களுக்கான வருடாந்திர ஆக்ஸர் விருது விழா இரண்டு முறை ஒத்தி வைப்பட்டது.

    தொடர்ந்து மார்ச் 2 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் 97வது ஆக்ஸர் விழா நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

    சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கர் குழு நேற்று வெளியிட்டுள்ளது.

    இந்த வருடம் ஆக்ஸர் இறுதிப் பட்டியலில் இந்தியாவிலுருந்து சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் தேர்வாகி உள்ளது.

    ஆடம் ஜே.கிரேவ்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.

    டெல்லியில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் அனுஜா, தனது சகோதரி பாலக்குடன் பணியாற்றி வருகிறாள். வாழ்க்கையை மாற்றும் ஒரு சூழலை எதிர்கொள்ளும் போது, தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலமும் தனது அனுஜா தனது தோள்களில் சுமத்தப்பட்டிருப்பதை அனுஜா உணர்கிறாள்.

    95வது ஆஸ்கர் விருதுகளில், சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் அனோஜா படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். அனுஜா படம் மட்டுமே இந்தியா சார்பில் இந்த வருடம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    ஆஸ்கர் குறும்படங்கள் இறுதி பட்டியல் :

    சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: லெயின், அனுஜா, ஐ ஆம் நாட் ய ரோபோட், தி லாஸ்ட் ரேஞ்சர், தி மேன் ஹு குட் நாட் ரிமெயின் சைலன்ட்,

    சிறந்த அனிமேஷன் குறும்படம்: தி பியூட்டிபுல் மென், இன் தி ஷேடோ ஆப் சைப்ரஸ், மேஜிக் கேன்டீஸ், வாண்டர் ஆப் தி ஒன்டர், யக்! (Yuck!)

    சிறந்த ஆவணக் குறும்படம்: டெத் பை நம்பர்ஸ், ஐ ஆம் ரெடி வார்டன், இன்சிடென்ட், இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆப் பீட்டிங் ஹார்ட், தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்டரா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கர் குழு நேற்று வெளியிட்டுள்ளது.
    • கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

    திரைப்படங்களுக்கான வருடாந்திர ஆக்ஸர் விருது விழா மார்ச் 2 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.

    97 வது ஆஸ்கர் விழாவான இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கர் குழு நேற்று வெளியிட்டுள்ளது.

    முன்னதாக இந்த வருட ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் 10 படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. லாப்பாட்டா லேடிஸ், ஸ்வதந்த்ரியா வீர் சாவர்க்கர், புதுல், ஆடுஜீவிதம்: தி ஆடு லைஃப், ஆல் வி இமேஜின் அஸ் லைட், பேண்ட் ஆஃப் மஹாராஜாஸ், கங்குவா, தி ஸீப்ராஸ், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் மற்றும் சந்தோஷ் ஆகிய படங்கள் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

     

    இதில் 'லாப்பாட்டா லேடிஸ்' படத்தின் மீதும் இந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவையும் இறுதிப்பட்டியலை எட்டமுடியவில்லை.

    மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதமும் ரேஸில் பின்வாங்கியுள்ளது. மேலும் யாரும் எதிர்பாராத வகையில் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற சூர்யாவின் கங்குவா படமும் ஆஸ்கர் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

     

    இந்த வருடம் ஆக்ஸர் இறுதிப் பட்டியலில் இந்தியாவிலிருந்து சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் தேர்வாகி உள்ளது.

    பிரியங்கா சோப்ரா தயாரித்த இந்த குறும்படம் மட்டுமே இந்த வருட ஆஸ்கர் ரேஸில் நிலைத்து நிற்கும் ஒரே இந்தியப் படமாகும். எனவே இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குழந்தைத் தொழிலாளர்களின் இன்னல்களைப் பற்றி இப்படம் பேசியுள்ளது.

    இதுதவிர்த்து பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஜாக் ஆடியார்ட் இயக்கிய 'எமிலியா பெரெஸ்', சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பாடல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பூட்டிய வீட்டுக்குள் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹேக்மேன் இறந்து கிடந்தார்.
    • இவர் இரண்டு முறை ஆஸ்கார் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் (95). சூப்பர்மேன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். ஆஸ்கார் விருதுக்கு இவரது பெயர் 5 முறை பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தி பிரெஞ்சு கனெக்சன் உள்ளிட்ட படங்களுக்காக ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றார். அதன்பின் 1970-களின் நடுப்பகுதியில் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

    இதையடுத்து, நியூ மெக்சிகோ மாகாணத்தில் தனது மனைவி பெட்ஸி அரகாவா (63) உடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜீன் ஜேக்மேன் வீடு நீண்ட நேரமாக பூட்டியே கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    தகவலறிந்த போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர். வீடு பூட்டிக் கிடந்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஜீன், அவரது மனைவி அரகாவா ஆகியோர் பிணமாக கிடந்தனர். அவர்களின் செல்லப் பிராணியான நாயும் செத்துக் கிடந்தது.

    இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது.
    • இதில் இந்தியா சார்பில் குஜராத்தி படமான 'செல்லோ சோ' பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்திற்கான பிரிவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படுவது வழக்கம்.


    செல்லோ சோ

    அந்தவகையில் இந்தியா சார்பில் 2023 - ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக குஜராத்திப் படமான 'செல்லோ சோ' என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேன் நளின் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, திபென் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    செல்லோ சோ

    இந்த திரைப்படம் இந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன் மற்றும் சினிமா மீதான அவனது காதலைச் சுற்றி நகரும் திரைப்படமாகும். இப்படம் ஏற்கனவே சில சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.
    • இவர் நடிப்பில் வெளியான ஷியாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் "ஷியாம் சிங்கா ராய்". நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்த இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கினார்.


    ஷியாம் சிங்கா ராய்

    மறுபிறவியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    ஷியாம் சிங்கா ராய்

    இந்நிலையில் "ஷியாம் சிங்கா ராய்" திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காலகட்டத் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • 2022-ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்வுக்கு ஆஸ்கர் குழு 397 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
    • இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் இடம் பெற்றுள்ளனர்.

    திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இதைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


    சூர்யா - முதல்வர் ஸ்டாலின்

    இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கஜோலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்கர் பேனலுக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார். நடிகர் சூர்யாவை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    • திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது.
    • ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

    திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர்கள், இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது.


    கஜோல்

    இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    மேலும், புதிய உறுப்பினர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள். நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ×