என் மலர்
நீங்கள் தேடியது "Palani dams filled"
- பழனி பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு உள்ளிட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
- அணையில் இருந்து உபரிநீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பழனி:
கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவை பொருத்து பழனியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பரவலாக தற்போது மழை பெய்து வருவதால் மலையடிவாரத்தில் உள்ள பழனி பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு உள்ளிட்ட அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
இருப்பினும் அணையில் இருந்து உபரிநீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பாலாறுபொருந்தலாறு அணை நீர்மட்டம் 63.75 அடியாக உள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 118 கனஅடியாக உள்ளது. இதேபோல குதிரையாறு அணை நீர்மட்டம் 77.01 அடியாக உள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 80 கனஅடியாக உள்ளது.
பழனி வரதமாநதி அணை முழுகொள்ளளவான 66.47 அடி, ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாறு அணை முழுகொள்ளளவான 39.37 அடியை எட்டி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது.