என் மலர்
நீங்கள் தேடியது "Palestinians"
- போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலி.
- காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அதன்பின் இரண்டு நாட்கள், ஒரு நாள் என மூன்று நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.
காசாவில் 23 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் வடக்கு காசாவில் உள்ள பெரும்பாலானோர் தெற்கு காசாவிற்கும், முகாம்களுக்கும் சென்றுவிட்டனர். வடக்கு காசாவின் பெரும்பகுதி வாழத்தகுதியற்ற பகுதி போன்ற காணப்படுவதாக வீடுகள், குடும்பங்களை இழந்த பாலஸ்தீனர்கள் குமுறி வருகின்றனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை மேலும்மேலும் அதிகரித்து வருகிறது. வடக்கு காசாவை ஒட்டியுள்ள தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் எகிப்து எல்லையை ஒட்டியுள்ள தெற்கு காசாவிற்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது.
இதனால் இருப்பதற்கு இடமில்லாம் பாலஸ்தீன மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தான பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்கதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்து அகதிகளை அனுமதிக்கவில்லை. இதனால் போர்க்களத்தில் தவித்து வரும் நிலை நீடித்து வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்தினர் துண்டு பிரசுரங்கள் மூலம் இந்த இடத்தை விட்டு வெளியெறுமாறு தெரிவித்துவிட்டு, இரவு முழுவதும் தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சத்தம் கேட்டதாக கான் யூனிஸ் நகர வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள். குண்டு வீசப்போகிறோம் என்று போனில் தனக்கு தெரிவித்தார்கள். விதவையும், நான்கு குழந்தைகளின் தாயுமான பெண்மணி ஒருவர் கடந்த 7-ந்தேதி வடக்கு காசாவில் இருந்து கான் யூனிஸ் நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தேன். இதுபோன்ற உத்தரவுகளை காது கொடுத்து கேட்பதில்லை.
உண்மை என்னவென்றால், காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. வடக்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார்கள். தெற்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார் என விரக்தியோடு தெரிவித்தார்.
இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் ஹமாஸை அதிகாரத்தில் இருந்து ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த பதுங்கு குழிகளை தேடிப்பிடித்து இஸ்ரேல் ராணுவம் அழித்து வருகிறது.
- ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனர் தொழிலாளர்களுக்கு இஸ்ரேல் தடை.
- ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னதாக 80 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் கட்டுமான பணி மற்றும் விவசாயப் பணிகளில் மேற்கு கரை மற்றும் காசா முனையில் உள்ள பாலஸ்தீனர்கள் வேலைக்கு பணியமர்த்தப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.
அப்போது பாலஸ்தீன ஊழியர்கள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அரசு தடைவிதித்தது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து கட்டுமான பணிக்கு ஆட்களை வரவழைக்க இஸ்ரேல் முயற்சி மேற்கொண்டது.
அந்த வகையில் இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் கட்டுமான பணியாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவை சேர்ந்த ராஜு நிஷாத் (வயது 35) என்பவர் மத்திய இஸ்ரேலில் உள்ள பீர் யாகோவ் என்ற இடத்தில் நடைபெறும் கட்டுமான பணியில் முன்னணி ஊழியராக திகழ்ந்து வருகிறார். அவருடன் ஏராளமான இந்தியர்கள் கட்டுமான உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடிக்கடி ஏர் ரெய்டு வார்னிங் வரும். அப்போது பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுவோம். எச்சரிக்கை ஒலி நின்றவுடன் நாங்கள் வேலையை மீண்டும் தொடர்வோம் எனக் கூறும் நிஷாத் "இங்கே (இஸ்ரேலில்) பயப்படக் கூடியதற்கு ஒன்றுமில்லை" என சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார்.
"பணம் சம்பாதிப்பது அவசியமானது. குடும்பத்தின் வருங்காலத்திற்காக தொடர்ந்து கடுமையாக உழைப்பது முக்கியமானது" என சுரேஷ் கமார் வர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் கட்டுமான தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான கி.மீ. கடந்த இஸ்ரேல் செல்வ முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
நிஷாத் சுமார் 16 ஆயிரம் பேர்களில் ஒருவர். இன்னும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலில் பல தசாப்தங்களாக இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர், ஆயிரக்கணக்கானோர் வயதான இஸ்ரேலியர்களைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்களாகவும், மற்றவர்கள் வைர வியாபாரிகளாகவும், ஐடி நிபுணர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
ஆனால் காசாவில் போர் தீவிரமடைந்ததிலிருந்து, இஸ்ரேலின் கட்டுமானத் துறைக்கும் இந்தியர்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வைக்கும் வேலை பார்த்து வரும் Dynamic Staffing Services என்ற நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை அனுப்பி வைத்துள்ளார். இஸ்ரேலுக்கு மட்டும் 3500 பேரை அனுப்பி வைத்துள்ளார். இது அவருக்கு புதிய சந்தை எனத் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தாக்கலுக்கு முன்னதாக இஸ்ரேலில் 80 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுடன் 26 வெளிநாட்டினரும் பணியாற்றி வந்தனர். தற்போது 30 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது. பொருளாதாரத்தில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முழுநேர வேலை கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
- வடக்கு காசாவுக்கு நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
- பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.
காசா:
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இதில் ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்தது. அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்கு திரும்பி வருகிறார்கள்.
இதற்கிடையே ஒப்பந் தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண் பிணைக்கைதியை ஹமாஸ் விடுவிக்கவில்லை.
அவர் விடுதலை செய்யப்படும் வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. அவர் வருகிற 1-ந்தேதி விடுவிக்கப்படுவார் என்று ஹமாஸ் தெரிவித்தது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதையடுத்து வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.
இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காசாவுக்கு திரும்புகிறார்கள். அவர்கள் நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடற்கரையை ஒட்டிய பிரதான சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.

காசா மீது இஸ்ரேல் போரை தொங்கியபோது வடக்கு காசாவை முதல் முதலில் குறிவைத்து சரமாரியாக தாக்கியது. அங்கிருந்த கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்தன.
தாக்குதல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அகதிகள் முகாம், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சம் அடைந்திருந்தனர்.