என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pamban Bridge"

    • பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வருகிறார்.
    • அதன்பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.

    ராமேஸ்வரம்:

    ராமநவமியான வருகிற 6-ம் தேதி அன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.

    பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.

    பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.

    இந்நிலையில் , பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை குந்துகால் துறைமுகத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகுகளை பாம்பனை விட்டு அப்புறப்படுத்தி தங்கச்சிமடம் பகுதியில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
    • ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையிலும் கப்பல் மற்றும் ரெயில்கள் வந்து செல்லும் வகையிலும் கடந்த 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 111 ஆண்டுகள் கடந்த நிலையில் பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் ரெயில்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

    பலமிழந்த பழைய பாலத்தின் உறுதித்தன்மையில் ஏற்பட்ட கேள்விக்குறியால் அதன் அருகிலேயே புதிய ரெயில் பாலம் அமைக்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

    இதற்கிடையே பழைய ரெயில்வே பாலம் தனது ரெயில் சேவைகளை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறுத்திக்கொண்டது.

    இதையடுத்து ராமேசுவரத்திற்கு ரெயிலில் வரும் பயணிகள் மண்டபம் வரை ரெயிலில் பயணித்து பின்னர் அங்கிருந்து பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் பாம்பன் ரோடு பாலம் வழியாக ராமேசுவரம் சென்று வருகிறார்கள்.

    இதற்கிடையே ரூ.550 கோடி மதிப்பிட்டில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்து உள்ளது. மேலும் புதிய பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் சென்று வரும் வகையில், செங்குத்து வடிவிலான தூக்கு பாலமும் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தின் வழியாக ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 6-ந்தேதி ராமநவமியன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அக்னி தீர்த்தம் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களும் சேகரிக்கப்பட்டு அது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து அவர் கோவிலில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை மன முருகி வேண்டுகிறார். சுமார் 20 நிமிடங்கள் வரை அவர் கோவில் பிரகாரம் உள்ளிட்டவற்றை சுற்றி வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் புதிய பஸ் நிலையம் அருகே சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் பகுதிக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்துகொண்டு ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்து சிறப்பு ரையாற்றுகிறார். இந்த விழாவில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

    இதனைத்தொர்ந்து, அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தீவிர மடைந்துள்ளது. விழா நடை பெறும் ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் 120 மீட்டர் நீளத்தில் வெயிலை தாங்கி நிற்கும் அளவிற்கு 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வரை தனி விமானத்தில் வருகை தந்து அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்படர் மூலம் மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வருகை தருகிறார்.

    இதன் பின்னர் சாலை மார்க்கமாக பாம்பன் ரோடு பாலத்தில் அமைக்கப்படும் தற்காலிக மேடையில் நின்றவாறு பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதுடன், பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பாலத்தையும் திறக்கிறார். அப்போது அந்த வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் கடந்து செல்வதை சுமார் 12 நிமிடங்கள் மேடையில் இருந்தவாறு பார்த்து ரசிக்க உள்ளார்.


    பிரதமர் வருகை தரு வதையொட்டி, கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் மண்டபம் கேம்ப் ஹெலி காப்டர் இறக்கு தளத்தில் நேற்று மாலை இறக்கி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    இதன் பின்னர் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமானப்படை தளத்திற்கு ஹெலிகாப்டர் சென்றது. இதே போன்று தொடர்ந்து சோதனை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் இருந்து பிர தமரின் பாதுகாப்பு அதிகாரிகள் வருகை தந்து ராமேசுவரம், பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    • முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
    • 2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் இதன் அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகளை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இவை ரெயில்கள் ஒவ்வொரு முறையும் பாலத்தை கடக்கும்போது அதிர்வுகளை பதிவு செய்யும். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ரெயில் பாம்பன் பாலத்தை கடந்தபோது தூக்குப்பாலத்தில் உள்ள சென்சார் கருவியில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

    இதுதொடர்பாக தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தபோது பாலத்தில் வழக்கத்தை விட அதிர்வுகள் இருப்பதாக சென்சாரில் பதிவாகி உள்ளது தெரிய வந்தது. இதனை எச்சரிக்கும் வகையில் ஒலி எழுப்பியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ மூலம் ராமேசுவரம் சென்றனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படவிருந்த ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய மதுரையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் பாம்பனுக்கு சென்றனர். அவர்கள் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குபாலத்தில் ஆய்வு நடத்தினர். ஆனால் பழுதை உடனடியாக சரிசெய்ய இயலவில்லை.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று ஐ.ஐ.டி. குழுவினர் வருகின்றனர். அவர்கள் பாலத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தபின் பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று முதல் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன. மேலும் சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்த ரெயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட காலி பெட்டிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை மெதுவாக கடந்து மண்டபம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த ரெயில் பயணிகளுடன் செகந்திராபாத்துக்கு புறப்பட்டு சென்றது.

    2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபால் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்படுகின்றன.

    • மதுரை-ராமேசுவரம் இடையேயான பாசஞ்சர் ரெயில் சேவைக்காக மட்டும் 6 ரெயில்கள் அந்த பாலத்தை தினமும் கடந்து செல்கின்றன.
    • அதிர்வுகள் மற்றும் உப்புகாற்றை தாங்க இயலாத பாலம் அடிக்கடி பழுதடைந்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்றதாக இல்லை.

    ராமேசுவரம்:

    மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை-ராமேசுவரம் ரெயில் பாதையில் மண்டபத்தில் இருந்து மன்னார்வளைகுடாவில் உள்ள ராமேசுவரம் தீவை ரெயில் மூலம் இணைப்பதற்கு பாம்பன் பாலம் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்டது. முற்றிலும் இரும்பு பொருளால் ஆன பாலம் என்பதால் நூற்றாண்டை கடந்தும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    இருப்பினும், உப்புத்தன்மையுடன் கூடிய கடல்காற்று, சுற்றுச்சூழல், புயல் உள்ளிட்ட இயற்கை காரணங்கள் ஆகியவற்றால் பாலம் வலுவிழந்து காணப்படுகிறது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பாலத்தின் அதிர்வுகளை கண்டறியும் கருவியை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த கருவியில், கடந்த 22-ந் தேதி அளவுக்கதிகமான அதிர்வுகள் பதிவானதால் 23-ந் தேதி முதல் பாம்பன் ரெயில்பாதையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இந்த தடை வருகிற 10-ந் தேதி வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாம்பன் பாலத்தை பொறுத்தமட்டில் இயற்கை காரணங்கள் தவிர, அதிகமான ரெயில் போக்குவரத்தும் பாலத்தின் உறுதித்தன்மைக்கு அச்சுறுத்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் மீட்டர் கேஜ் ரெயில் இயக்கத்துக்கு ஏற்ப 1914-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. வடிவமைத்த ரெயில்வே என்ஜினீயர் ஸ்கெர்சர் பெயர் சூட்டப்பட்டது. அவரது தொழில்நுட்பத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மூலம் 2,058 மீட்டர் நீளத்துக்கு 146 இரும்பு கர்டர்களை கொண்டு கடல் நீர் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதிக உயரம் கொண்ட படகுகள் அந்த பாதையை கடக்கும் போது பாலத்தின் நடுப்பகுதி 2-ஆக பிரிந்து விடும். அப்போது, அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 2 ரெயில்கள் மட்டும் அந்த பாலத்தை கடந்து சென்றது. பின்னர், அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டன. தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை, வடமாநிலத்தவர்களின் வருகை ஆகியன காரணமாக ரெயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    மதுரை-ராமேசுவரம் இடையேயான பாசஞ்சர் ரெயில் சேவைக்காக மட்டும் 6 ரெயில்கள் அந்த பாலத்தை தினமும் கடந்து செல்கின்றன. இதனால் அதிர்வுகள் மற்றும் உப்புகாற்றை தாங்க இயலாத பாலம் அடிக்கடி பழுதடைந்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்றதாக இல்லை. இதற்காக ரெயில்வே என்ஜினீயர்கள் குழு 24 மணி நேரமும் பாலத்தை கண்காணித்து வருகிறது. இருப்பினும் பாலம் 108 ஆண்டுகளை கடந்து விட்டதால், உறுதித்தன்மை குறைந்துள்ளது. இதனால் வருகிற 31-ந் தேதி வரை அந்த பாதையில் ரெயில்கள் இயக்க சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

    தற்போது ராமநாதபுரத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்கனவே ராமேசுவரம் வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ரெயில்வே வாரியத்தின் தொழில்நுட்ப அறிவுரை மற்றும் ஆலோசனை குழுவான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் (ஆர்.டி.எஸ்.ஓ.) நேரடி மேற்பார்வையில் பாலத்தின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு, பாதுகாப்பாக ரெயில்கள் இயக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே, ரெயில்வே துணை நிறுவனமான ஆர்.வி.என்.எல். எலெக்ட்ரோ மெக்கானிக்கல் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பாம்பன் பால கட்டுமான பணிகளில் 84 சதவீதம் முடிந்துள்ளது. புதிய பாலம் நவீன தொழில்நுட்பத்தில், கடலின் நடுவே லிப்டு போல செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. அத்துடன், மின் ரெயில் பாதை மற்றும் இரட்டை அகலப்பாதைக்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வருகிற செப்டம்பர் மாதம் தான் புதிய பாலப்பணிகள் முடிவடையும் என்று தெரிகிறது.

    • கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பிட்டில் புதிய வடிவமைப்பில் ரெயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
    • 2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதால் ரெயில் பாலப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் புனித யாத்திரையாக வருகை தருகிறார்கள். அவர்கள் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு செல்கிறார்கள்.

    இதற்கிடையே மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் வாராவதி கடல் பகுதியில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் 1914 ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

    இந்த ரெயில் பாலத்தின் மையப்பகுதி கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையை பெற்றது. அத்துடன் நாட்டின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமாகவும் அடையாளம் காணப்பட்டது.

    இந்த தூக்கு பாலம் ஒரு பொறியாளர் தலைமையில் ரெயில்வே ஊழியர்கள் மூலம் பாரமரிக்கப்பட்டு வந்தது. தூக்கு பாலத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் எச்சரிக்கை கருவி ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த பாலம் அமைந்திருந்தது.

    105 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாம்பன் ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பாம்பன் ரெயில் பாலம் அருகே புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பிட்டில் புதிய வடிவமைப்பில் ரெயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் பூமி பூஜையுடன் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து, பாம்பன் கடல் பகுதியில் துளையிட்டு மண் ஆய்வுப் பணி தொடங்கியது. விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

    இதன் பின்னர் 6 மாதம் கழித்து குறிப்பிட்ட பணியாளர்கள் மூலம் மீண்டும் பணிகள் தொடங்கியது. 2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதால் ரெயில் பாலப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பாலத்தின் மையப்பகுதியில் மேல்நோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட தூக்கு பாலம் பொருத்தும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் தண்டவாளம் பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்டு இருபுறமும் தூண்கள் அமைப்படும். இன்னும் 6 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

    • பாலத்துக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து தண்டவாளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன.
    • புதிய தூக்குப்பாலம், மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு, பாம்பன் கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே புதிய ரெயில் பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டு, அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன இந்த பாலத்துக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து தண்டவாளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன. பாலத்தின் மையப்பகுதி வழியாக கப்பல்கள் கடக்க வசதியாக செங்குத்தாக திறந்து மூடும் வகையிலான தூக்குப்பாலம் அமைகிறது.

    இதற்காக 77 மீட்டர் நீளமும் சுமார் 650 டன் எடையும் கொண்ட தூக்குப்பாலம், ரெயில்வே பாலத்தின் நுழைவுப்பகுதியில் வடிவமைக்கப்பட்டு நகரும் கிரேன்கள் மூலம் தூண்கள் வழியாகவே நகர்த்தி கொண்டு வரப்பட்டது. இந்தப்பணி சுமார் 2 மாதங்களாக நடந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவில் தூக்குப்பாலம் அமையும் மையப்பகுதியில் உள்ள 2 தூண்கள் மீது கொண்டு வந்து வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

    இதை கொண்டாடும் வகையில் ரெயில்வே கட்டுமான நிறுவனம் சார்பில் நடுக்கடலில் வாணவேடிக்கை நடைபெற்றது. அதிகாரிகள், என்ஜினீயர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

     

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய தூக்குப்பாலம், மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு, பாம்பன் கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இனி அதனை திறந்து மூட தேவையான கேபிள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். இந்தப் பணியை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பின்னர் தூக்குபாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெறும்.

    இந்த சோதனையானது, ரெயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தூக்குப்பாலம் வழியாக ரெயில் பாலம் முழுவதும் ரெயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவர் அவருக்கு கூறினார்.

    இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதை நேற்று ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    • பாலத்தை ஹைட்ராலிக் எந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    தற்போது பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலத்தை பொருத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 650 டன் கொண்ட தூக்கு பாலத்தை ஹைட்ராலிக் எந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தை திறந்து மூட இருபுற எடையும் சமமாக இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தூக்கு பாலத்தில் மேலே உள்ள இரு பெட்டிகளில் தலா 300 டன் வீதம் 600 டன் இரும்பு பட்டைகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த சில நாட்களாக 600 டன் இரும்பு பட்டைகளை அதி நவீன கிரேன் மூலம் ஏற்றும் பணி கடும் சிரமத்திற்கிடையே நடந்து வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    600 டன் இரும்பு பட்டை பொருத்தும் பணி இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என ரெயில்வே என்ஜீனியர்கள் தெரிவித்தனர். அதன்பின் தூக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெறும்.

    • மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
    • அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 9-ந்தேதி 354 விசைப்படகுகளில் 1,500-க்கும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஜெயராஜ், ராஜா, கீதன் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்து அதில் இருந்த 23 மீனவர்களை 10-ந்தேதி அதிகாலையில் சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் 23 பேரும் இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதையடுத்து அவர்களை வருகிற 25-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ராமேசுவரம் மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, மீனவர்கள் சிறைப்பிடிப்பை தொடர்ந்து, ராமேசுவரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

    அதில் ஏற்பட்ட முடிவின்படி பாம்பன் பாலத்தில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்தை திரும்பப் பெறக்கோரி நேற்று ராமேசுவரம் தாசில்தார் செல்லப்பா, ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, விசைப்படகு மீனவப் பிரதிநிதி சேசுராஜா, நாட்டுப்படகு மீனவப் பிரதிநிதி ராயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது.

    ஆனால் இக்கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டபடி பாம்பன் பாலத்தில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவ பிரதிநிதிகள் கூறினர். அதன்படி இன்று காலை முதலே பாம்பன் சாலை பாலத்தில் ஏராளமான மீனவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், அவர்களுடன் பறிமுதலான விசைப்படகு களையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும், உடனடியாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள், மீனவர்களின் குடும்பத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் மீண்டும் மீனவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இலங்கை அரசு சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சிறை பிடித்துள்ளது. மத்திய அரசு இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு மீனவ இனத்தை முற்றிலும் அழிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.

    மீனவர் நலம் கருதி மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வேண்டும். இதை செய்யாவிட்டால் விரைவில் புதிய ரெயில் பாலத்தில் மறியல் போராட்டம் நடைபெறும். தமிழக மீனவர்களின் கைது தொடர்கதையாக உள்ளது. மாநில அரசிடம் 40 எம்.பி.க்கள் உள்ள நிலையில் அவர்கள் பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்களை நலன் கருதி குரல் எழுப்ப வேண்டும்.

    ஒவ்வொரு மீனவரும் ஆயிரம் முதல் 1,500 ரூபாய் கூலிக்கு வேலை செய்கின்றனர். அவர்களை பிடிக்கும் இலங்கை அரசு அவர்கள் மீது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது. அதை எப்படி ஏழை மீனவனால் செலுத்தி அங்கிருந்து மீண்டு தமிழகம் வரமுடியும். மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். 

    • ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
    • நடுக்கடலில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறை, பாலத்தில் உள்ள சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    மண்டபம்:

    ராமேசுவரம் தீவினை இந்தியாவுடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள், தூக்குப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி 1.03.2019 அன்று அடிக்கல் நாட்டினார். அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

    2,078 மீட்டர் நீள புதிய பாலம், கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது. 101 தூண்களைக் கொண்ட இந்த பாலத்தில் 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட்டு பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக 77 மீட்டர் நீளம், 27 மீட்டர் உயரத்திற்கு ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

    பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் கட்டுமான பணிகள், தண்டவாளங்கள், கர்டர்கள் மற்றும் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத் தூக்குப் பாலத்தை பொறுத்தும் பணிகள் முடிந்து, அதனை தூக்கி இறக்கும் சோதனை, ரெயில்கள் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

    இறுதிகட்டமாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் சார்பாக இரண்டு நாள் ஆய்வு பாம்பனில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையில் தொடங்கியது. இதில் ரெயில்வே அதிகாரிகள், பாம்பன் அக்காள் மடத்தில் உள்ள ரெயில்வே கேட்டில் இருந்து டிராலி மூலம் சென்று பாம்பன் ரெயில் நிலையம், பாம்பன் தெற்குவாடி ரெயில்வே கேட், புதிய பாம்பன் பாலம், புதிய பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப்பாலம், இதற்காக நடுக்கடலில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறை, பாலத்தில் உள்ள சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.


    மேலும், சின்னப்பாலம் ரெயில்வே கேட்டில் இறங்கி, புதிய வழித்தடத்தின் செயல் பாடுகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்தும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். காற்றின் வேகம், நிலையை கண்காணிப்பதற்கான அனிமோ மீட்டர் அமைப்பு மற்றும் பாலத்தின் சிக்னல் அமைப்புகளையும் அவர் ஆய்வு செய்தார்.

    தூக்குப் பாலத்தை இயக்கும் ஆபரேட்டர் அறைக்குள் சென்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். பின்னர் தூக்குப்பாலத்தில் இருந்து மண்டபம் நோக்கி உள்ள ரெயில் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து மாலை 6 மணிக்கு முதல்கட்ட ஆய்வை நிறைவு செய்தார். சுமார் 10 மணிநேரம் நடந்த ஆய்வில் புதிய பாலத்தில் ரெயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து உறுதி செய்யப்பட் டது. மேலும் தூக்கு பாலத்தை திறந்து அதன் வழியாக கப்பல்களை இயக்கியும் சோதனை செய்யப்பட்டது.


    இரண்டாவது நாளான இன்று முக்கிய அம்சமாக மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து புதிய பாம்பன் ரெயில் பாலம் வழியாக பாம்பன் ரெயில் நிலையம் வரையிலும் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4 பெட்டிகளுடன் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது. குறிப்பாக செங்குத்து தூக்கு பாலத்தின் அதிர்வுகள், உறுதித்தன்மை தொடர்பாக பாதுகாப்பு ஆணையர் ரெயில் பயணம் செய்தவாறு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் தலைமை திட்ட மேலாளர் கமலாகர் ரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி அமித்குமார் மனுவால், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவத்சவா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தேதி முறைப்படி அறிவிக்கப்படும், என்றும் அதில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


    • பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.
    • சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    * பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    * பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.

    * தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    * புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், பாம்பன் பாலம் திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரெயில்வே அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம்.

    இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன?

    இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
    • தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

    அந்த ஆய்வறிக்கையில்," பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.

    தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்" எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தெற்கு ரெயில்வேயின் மூத்த அதிகாரி சவுத்ரி, பாம்பனில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே பாலத்தின் தரம் குறித்த தனது கருத்து மற்றும் பரிந்துரைகளை இந்திய ரெயில்வேக்கு அனுப்பியிருப்பதை நான் புரிந்துகொண்டேன்.

    அவரது கண்காணிப்பின் பேரில் கீழே உள்ள முக்கிய பகுதிகளுக்கு பரிந்துரைத்துள்ளார். பாலம் கட்டும் போது அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது சில தூண்கள் மற்றும் மூட்டுகளில் கடல் அரிப்புக்கான அறிகுறிகள் உள்ளன.

    மேலும், ரெயில் பாதையை கடந்து செல்லும் போது பெரும் சத்தம் ஏற்படுகிறது. வேலை கிட்டத்தட்ட முடிந்து, ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆனால் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் எதிர்வரும் நாட்களில் பாலத்தை பயன்படுத்தவிருக்கும் பல லட்சம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    பாலம் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு, தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையரின் அனைத்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது.
    • பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா வந்தார். அவர் டிராலியில் சென்று, பாலத்தை பார்வையிட்டு மையப்பகுதிக்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தை திறந்து மூட கட்டப்பட்டுள்ள ஆபரேட்டர் அறை, அங்குள்ள தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார்.

    பின்னர் தூக்குப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் மூலமாக உயரே சென்று தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்காக அமைக்கப்பட்ட சாதனங்களையும் பார்வையிட்டார். அப்போது ஆய்வுக்காக தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலத்தை ஆய்வு செய்தார்.

    பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர். பின்னர் அங்கிருந்து டிராலி மூலம் புறப்பட்டு பாம்பன் வந்தார். தொடர்ந்து ராமேசுவரம் சென்றார். புதிய ரெயில் பாலத்தில் ஒரு சில குளறுபடிகள் உள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கை அளித்திருந்த நிலையில், மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி, ஆய்வு செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

    ×